Saturday, March 26, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 3

அத்தகிரியும், அருளாளனும்- 3

1.ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;
பேணுங்கால் பேணும் உரு ஆகும்; அல்லன் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே //
திருவாய்மொழி
எம்பெருமான் எப்படி இருப்பான்: ஆணா, பெண்ணா, அல்லது அலியா-இவர்கள் யாரும் இல்லை.
அவன் வடிவம் யாராலும் சொல்ல முடியாது. அவனை காண்பதற்கு இயலாது. உள்ளவன் அல்லன், இல்லாதவனும் அல்லன்-ஆனால் பக்தர்கள் விரும்பும் காலத்தில் அவர்கள் விரும்பும் வடிவில் இருப்பன். தன்னை ஆச்ரயிக்காதவற்கு அவன் கிடைப்பதற்கு அரிதாக இருப்பான்.

1. ஆஹூயமாநம் அநபாய விபூதி காமை:
ஆலோக லுப்த ஜகதாந்த்ய மநுஸ்மரேயம் /
ஆலோகிதாம்சுக மநாகுல ஹேதி ஜாலம்
ஹைரண்யகர்ப்ப ஹயமேத ஹவிர்புஜம் த்வாம் //
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்/
அருளாள பெருமானே! பிரமன் கெய்த அசுவமேத யாகத்தில் அவன் தந்த ஹவிஸ்ஸை அமுது செய்தாய்-அப்படி செய்து யாக குண்டத்தில் அக்னி போல் காட்சி தந்தாய்.என்னாலும் அழியாத மோட்சத்தை விரும்புபவர்கள் உன்னிடம் சரணாகதி அடைந்து ஆத்மாவை சமர்ப்பிவிப்பார்கள். நீ உன் கடாக்ஷத்தால் உலகில் இருளை போக்குகின்றாய்.அக்னிபோல் செம்மை நிறமாக காணுகின்றாய். உன் திருவாயுதங்களோ மிக சாந்தமாக இருக்கின்றது. இப்படி அக்னி போல் உன்னை நான் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பேன்.

2. என்றும் மறந்தறியேன் ; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே-இன்பக்
கடல்-ஆழிநீ அருளிக் காண் //
இரண்டாம் திருவந்தாதி
ஆழ்வார் பகவானையே உபாயமாக பற்றி அவனை பெறுவதற்கு அவனே அருள் செய்யவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
என்னுடைய எல்லா பிறப்புகளிலும் எல்லா காலத்திலும் என்னை பற்றிய நினைப்பு உனக்கு என்றும் இருக்கிறது. அதனால் தான் நான் இந்த பிறப்பில் உன்னை என்றும் மறந்ததில்லை. அது என்னால் வந்தது அல்ல. அது உன்னாலேயே தான். இனி நான் உன்னை அடைய நீயே வழி காண்பிக்கவேண்டும்

2. ஔதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே
ச்லாக்யே ச திவ்ய ஸதனே தமஸ: பரஸ்மிந்
அந்த: களேபர மிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம்
ஜாதம் கரீச கத மாதரணாஸ்பதம் தே //
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //
பேராளபெருமானே! உனக்கு உறைவிடங்கள் பல உள்ளன. பாற்கடல் உள்ளது, ஸ்ரீவைகுண்டத்தில் திருமாமணி மண்டபம் உள்ளது. இவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை உனக்கு. நீயோ மனித இதயமே மிக உயர்ந்ததாய் அதனுள் உறைகின்றாய். மிக இழிவான இந்த மனித உடலில் இதயத்தில் உறைந்து அவனை கடை தேற எவ்வளவு பாடு படுகிறாய். அதற்கு ஒரே காரணம் அவனிடம் நீ காட்டும் இரக்கம், அன்பு.

3. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்னும் காண்தோறும்- பாவியேன்
மெல் ஆவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று //
பெரிய திருவந்தாதி
பூவைப்பூ, காயாம்பூ, கரு நெய்தல் செங்கழு நீர்ப்பூ இவைகளெல்லாம் காணும்போது அவைகள் எல்லாம் இறைவனது வடிவத்தையே நினைவூட்டுகிறது. இவையல்லாம் உனது திருமேனியே என்று இந்த பாவி பூரித்து நிற்கிறேன். இவையெல்லாம் நான் அநுபவிக்க நீயல்லவோ எனக்கு அளித்தது என்கிறார் ஆழ்வார்.

3. பாலாக்ருதேர் வட பலாச மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டல மபூ துதரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வராஹ மாஸ்த்திதவதோ வபு ரத்புதம் தே //
ஸ்வாமி தேசிகன்-வரதராஜ பஞ்சாசத் //

பேரருளாள பெருமானே! நீ பாலகனாய் ஆலிலை மேல் உறங்கும் பொழுது இந்த உலகமெல்லாம் உன் வயிற்றில் அடக்கிக்கொண்டாய்- சிறுவடிவில் மகத்தான காரியம். அற்புதமான தோற்றம். நீ பெரிய வராஹமாக தோன்றியபோதும் இந்த ப்ரஹ்மாண்டமே உன்னிடத்தில் அடங்கி கிடந்தது. இவையெல்லாம் உன் திருவிளையாடல் செயல்கள்- உன் சக்தியால் தான் செய்யமுடியும்.

R.Jagannathan.

அத்தகிரியும் அருளாளனும்-2

அத்தகிரியும் அருளாளனும்-2

புணர்க்குமயனாம் அழிக்குமரனாம் புணர்த்ததன் உந்தியோடு ஆகத்தும் மன்னி
புணர்த்த திருவாகித் தன்மார்வில்தான்சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே //

பிரமனை தோற்றுவித்த தனது நாபிகமலத்துடன் தன் மேனியில் நிலைபேறு பெற்ற பிரமன் எம்பெருமானின் சரீரமானவன். சிவனும் அவனுக்கு சரீரம் ஆனவன். அவன் மார்பிலே சேர்ந்துள்ள பெரிய பிராட்டியும் தானே தனக்கு தகுதியான செயல்களை பெற்றவனான என் தேவாதிராஜனை எல்லாவிடத்திலும் கண்கூடாக பார்க்கலாம்.
எட்டாம் திருவாய்மொழி-2-ம் பத்து.

1. மத்யே விரிஞ்சி சிவயோர் விஹிதாவதார:
க்யாதோsஸி தத்ஸமதயா ததிதம் ந சித்ரம் /
மாயா வசேந மகராதி சரீரிணம் த்வாம்
தாநேவ பச்யதி கரீச யதேஷ லோக: //
தேவாதிராஜனே! பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவில் அவதாரம் செய்த நீ அவர்களுக்கும் மேலாக அழைக்கப்படுகிறாய்.இது ஒரு ஆச்சர்யம் இல்லை. உன் சங்கல்பத்தால் நீ பல அவதாரம் செய்ததை பக்தர்கள் அந்த அவதாரமாகவே கொண்டாடுகிறார்கள்-உதாரணம்-மச்ச, கூர்மம்.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.
2. தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தியவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே //

எம்பெருமானின் திருவடிகளில் சேர்ந்த தீர்த்தமும்,சாத்தப்பெற்ர திருத்துழாய் மாலையும் பரம சிவன் தலியில் கண்டதை அர்ஜுனனே பார்த்தான். அதனால் நாராயணனே பரதெவதை என்று நிச்சியம் செய்தான். சிவனிடம் அர்ஜுனன் சிவனிடம் பாஸுபதாஸ்ரம் வேண்டி உபாஸனை செய்ய விரும்பினான். அவன்மேல் இரக்கம் கொண்ட கண்ணன் தீர்த்தத்தையும் திருத்துழாயையும் தன் காலடியில் சமர்ப்பிக்குமாறு சொன்னான். மறுகணம் அவை சிவன் முடியில் அர்ஜுனன் பார்த்தான். இதைவிட நாராயணனின் பரத்துவத்தை பேச யாரால் முடியும். அப்பேற்ப்பட்ட ஹரி அத்தகிரியில் தேவாதி ராஜனாக பக்தர்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறான்.

திருவாய் மொழி

2. வரத தவ விலோகயந்தி தந்யா:
மரகத பூதர மாத்ருகாயமாணம்
வ்யபகத பரிகர்ம வாரவாணம்
ம்ருகதமத பங்க விச்கேஷ நீலமங்கம் //
வரம்தரும் பேரருளாளப்பெருமானே! உன்னை சேவிக்க ஏகாந்த சமயங்கள் உண்டு. அப்போது திருவாபரணம், மாலைகள் எல்லாம் கழற்றி வைக்க நேரிடும். அப்போது உன் இயற்கை அழகை சேவிக்க- அநுபவிக்க இயலும். அப்போது இதை பார்த்த்துதான் மரகத் மலை படைக்கப்பட்டதோ என்று தோன்றும். கஸ்தூரியை குழம்பாக்கி அதை உன் நீல திருமேனியில் சாத்துவதால் அந்த நீல நிறம் மேலும் சிறப்பாகி ஜ்வலிக்கும். இதை எல்லோராலும் காணமுடியாது. சிலபேர்-உன் அந்தரங்க கைங்கர்யம் சில புண்யசாலிகள் மட்டும் தான் காணமுடிகிறது.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

3. நாவாயில் உண்டே; நமோ நாராயணா என்று
ஓவா துரைக்கும் உரையுண்டே-மூவாத
மாக்கதிகண் கெல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிகண் செல்லும்திறம்?

வரதனை துதிப்பதற்கு கருவியான நாக்கு, தேடவேண்டாத வாய், திகட்டாத -நமோ நாராயணா என்ற சொல் இவ்வளவும், மேலும் மோக்ஷத்தை அடைய பக்தி, ப்ரபத்தி இவை யாவும் நம்முடையே இருக்க, அதைவிட்டு ஐம்புலங்களும் இட்டு செல்லும் தீய வழிகளிலேயே செல்லும் பலரை என்னவென்று சொல்ல.
முதல் திருவந்தாதி.

3. யாவந் ந பச்யதி நிகாமம் அமாஷணோ மாம்
ப்ரு பங்க பீஷண கராள முக: க்ருதாந்த:
தாவந் பதந்து மயி தே பகவந் தயாளோ:
உந்நித்ர பத்ம கலிகா மதுரா: கடாக்ஷம் //

பேரருளாளனே! நீயோ கருணை கடல். மற்ற எல்லா குணங்களும் அதற்கு துணை நிற்கின்றன. ஆகையால் நீ நிச்சியம் என் வேண்டுகோளை நிறை செய்வாய். மரண காலத்தில் என் உயிரை கவர யமன் வருவான். அவனை பார்க்க எனக்கு பயம். அதை நினைத்தால் எப்போதே என் உடம்பு நடுங்குகிறது. அவன் பார்வை என் மீது விழுவதற்கு முன்பே-உன் பார்வை என் மீது விழுந்து என்னை கண் குளிர கடாக்ஷிக்க வேண்டும். அப்போது என் பயம் நீங்கிவிடும், அவனும் என்பக்கம் வரமாட்டான்.

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

பேரளுளானனின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கும்- அவனை சரணாகதி அடைந்தால். பகவத் ராமானுஜர் அவரையே அராதித்து கிணறு கைங்கர்யம் செய்து பெரும் பேறு பெற்றார். ஸ்வாமி தேசிகர் தன்னை அர்ப்பணித்து முடிவில்லா இன்பம் பெற்றார். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் அமுதன்.தினமும் அவன் நாமத்தை ஒருதரம் சொன்னாலே போதும் வாரி வழங்க காத்துக்கொண்டிருக்கிறான். நாம் தான் சரண் அடைய வேண்டும்.

R.Jagannathan.