Wednesday, May 18, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 10

அத்தகிரியும், அருளாளனும்- 10


1. நாவாயில் உண்டே; ' நமோ நாரணா ' என்று
ஓவா துரைக்கும் உடையுண்டே; மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம் ?

பகவானை துதிப்பதற்கான நாக்கு நம் வாயிலேயே இருக்கிறது. களைப்பே இல்லாமல் ஆயிரம் தடவை ' நமோ நாராயணா ' என்று சொல்ல. அவன் திருவடியை அடைய- ப்ரப்த்தி, பக்தி என்று பல எளிய வழிகள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் விட்டு விட்டு சிற்றின்பம் மற்றும் பல தீய வழிகளில் விழ சிலருக்கு எப்படித்தான் ஏற்படுகின்றதோ? என்ன விந்தை இது.

முதல் திருவந்தாதி.

1. பாலாக்ருதேர் வட பலாச மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டல மபூ துதரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வாராஹ மாஸ்த்திதவதோ வபு ரத்புதம் தே //

அருளாள பெருமானே! நீ சிறு குழந்தையாக ஆலிலை மேல் சயனித்து உன் வயிற்றில் சிறு பகுதியில் ப்ரமாண்டம் அனைத்தையும் அடக்கிக்கொண்டாய். இது ஒரு பெரிய அற்புதம். நீ வராஹ அவதாரம் எடுத்த போது அந்த திருமேனி ப்ரஹ்மாண்டத்தில் அடங்கி இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று? இது உன்னால் மட்டும் தான் முடியும். உன்னுடைய அற்புத திருவிளையாடல்களை என்னவென்று வர்ணிப்பது?

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

2. கான எண்கும் குரங்கும் முகவும்
படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி
அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய
திருமால் திருநாமம்
நானும் சொன்னேன்; நமரும் உரைமின்
நமோ நாராயணமே //

காட்டு கரடிகளையும், குரங்குகளையும் படைத்துணையாக்கி ராவணனையும், அரக்கர்களையும் வென்றான் என் திருமால். பிறரையேசொல்லிக்கொண்டிருந்த நானும் அவன் பெயரை சொன்னேன். அந்த நாமம் எனக்கு தேன் போலும், பாலும் அமுதும் போல் இருக்கிறது. ஆகையால் நம்மவர்களே வாருங்கள் அவன் நாமத்தை சொல்லுங்கள்.

பெரிய திருமொழி

2. ஸ த்வம் ஸ ஏவ ரபஸோ பவதௌபவாஹ்ய:
சக்ரம் ததேவ சித தார மஹம் ச பால்ய:
ஸாதரணே த்வயி கரீச ஸமஸ்த ஜந்தோ:
மாதங்க மாநுஷ பிதா ந விசேஷ ஹேது: //

அத்தகிரி அருளாளனே! அன்று கஜேந்திரனை காக்க கருடன் மேல் பறந்து வந்தாய். உன் கூரிய சக்ராயுதத்தால் முதலையின் வாயை பிளந்தாய். அதே பெருமாள் இன்று அருளாளனாக என் முன் நிற்கின்றாய். ஏன் இன்னும் என் சம்சார பந்தத்தில் உழலும் என்னை காக்க வரவில்லை. ஒரு வேளை அது யானை, நான் மனுஷன் என்று பார்கிறாயோ! உனக்கு அந்த பேதமே கிடையாதே. யானையை காத்த வரதனே என்னையும் காத்து அருளவேண்டும் //

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

3.கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரயணமே//

நமக்கு நாரணன் என்ற திருநாமமே திருமந்திரம். ஓம் என்ற பிரணவமும் வேண்டாம் நம என்ற சப்தமும் வேண்டாம், நாராயணாய என்ற பெயரும் வேண்டாம் . வெறும் நாரணன் என்றாலே போதும்- சத்தியமாக சொல்லுகிறேன்- அவன் ஓடி வருவான் நம்மை ரக்ஷிப்பான் என்கிறார் ஆழ்வார். வேதத்தை காட்டிலும் மேலான பிரமாணம் கிடையாது கேசவனைக்காட்டிலும் வேறு தெய்வம் கிடையாது என்று வியாசர் கூறியதை போல ஆழ்வாரும் திண்ணமாக கூறுகிறார்.

3.இதி விஹிதமுதாரம் வேங்கடேசேந பக்த்யா
ச்ருதி ஸுபகமிதம் ய: ஸ்தோத்ர மங்கீகரோதி
கரிசிகரி விடங்க ஸ்த்தாயிந: கல்ப வ்ருக்ஷாத்
பவதி பலமசேஷம் தஸ்ய ஹஸ்தாபசேயம் //

இவ்வாறு வேங்கடேசனால் பக்தியோடு இயற்றப்பட்டதாய் கருத்துக்கள் நிறைந்ததாய் செவிக்கும் இனியதான இந்த ஸ்தோத்திரத்தை எவன் ஏற்று பயிகின்றானோ அவனுக்கு அத்தகிரியான மாளிகையில் புறாக்கூண்டு போல மேல்பாகத்தில் நிற்கின்ற கற்பக மரத்திலிருந்து எல்லா பலனும் கையால் பறிக்க ஏற்றதாய் ஆகின்றது.

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

அடியேனுக்கு வெகு நாளாக ஒரு ஆசை. நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பகவானை எப்படி அநுபவித்துள்ளார்கள் என்று நானும் அநுபவித்து அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக வேகா சேது என்ற அடியேனுடைய பிளாக்கில்- ஓ! ரங்கசாயி என்ற பிரிவில் எழுதி வந்து இன்று காஞ்சி வரதனின் கருட சேவையோடு நிறைவு பெறுகிறது.

அரங்கன்- வேங்கடவன்- அருளாளன் ; அரங்கம்- வேங்கடமலை - அத்தகிரி - வைணவர்களின் ஸ்வர்க்கம்- அமுதமான தித்திக்கும் நாதமாம் நாரணனின் நாமம். இவைகளை 10-10 பாசுரங்களாக அர்த்தத்தோடு விளக்கி வந்தோம் -ஆழ்வார்களின், ஆச்சார்யர்களின் பாசுரம் மூலமாக.

அதே மாதிரி அரங்கன் - திருவிழா, வேங்கடவன் ப்ரஹ்மோத்ஸவம், அருளாளனின் ப்ரஹ்மோத்ஸவம் இவைகளை பவர் பாயிண்ட் ஸ்லைட் ஷேர் மூலமாக அன்பர்களுக்கு அளித்துள்ளோம்- நூற்றுக்கணக்கான அன்பர்கள் இவைகளை கண்டு களித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த வணக்கமும் மரியாதையும்.

எங்கெல்லாம் அலைந்து சம்சாரகடலில் சுற்றிக்கொண்டிருந்த அடியேனை அரங்கன் 1994 ல் திருவரங்கத்திற்கு அழைத்தான். தினமும் அவனை காண வசதி செய்து கொடுத்தான்.அவன் கிருபையால் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி பல கட்டுரைகளை எழுதவைத்தான்.பிளாக் மூலமாக பல அரிய ஸ்தோத்திரங்களை போடவைத்தான்.

அவனின் அருளை வார்த்தைகளால் சொல்லவோ, எழுதவோ முடியாது.இதை படிக்கும் அன்பர்களுக்கு அரங்கன்- வேங்கடவன்- அருளாளன் அருள் பரிபூர்ணமாக கிடைக்க அடியேன்
ப்ரார்த்திக்கிறேன்.

தாஸன் ஜெகன்னாதன்.

அத்தகிரியும், அருளாளனும்- 9

அத்தகிரியும், அருளாளனும்- 9

1. பெற்றார் பெற்று ஒழிந்தார்; பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய், வளர்ந்து என் உயிராகி நின்றானை
முற்றா மாமதி கோல் விடுத்தானை, எம்மானை
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழைநெஞ்சே //

பெற்ற தாய் தந்தையர் என்னை விட்டு போய்விட்டார்கள். இந்நிலையில் அடியவனுக்கு நீ தாயாக, தந்தையாக நின்று உய்வித்தாய். அதோடு நில்லாமல் எனக்கு உயிராகவும் நிற்கின்றாய். எல்லோர் நோயையும் போக்குபவன். அப்படிப்பட்ட எம்பெருமானை நான் எப்படி மறக்க முடியும். மூட நெஞ்சமே இதை சொல்லுவாயாக.

பெரிய திருமொழி.

1. வாழி அருளாளர் வாழி அணி அத்தகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதார் அன்பு //

பேரருளாளர் வாழ்க, அலங்காரமான அத்தகிரி வாழ்க, பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க, ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதார் அன்பு வாழ்க.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. காசும் கரையுடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால், அங்கு அவத்தப் பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமினோ
நாயகன் நாரணந்தம் அன்னை நரகம் புகாள் //

நாலிரண்டு காசுக்கும், கட்டு நெற்கதிருக்கும், கறையுடைய ஆடைக்கும் ஆசைப்பட்டு கீழ் தேவதைகளின் பெயரிட்டு வீணே கழிக்கிறீர்கள். அடியார்களின் துன்பத்தைப்போக்கும் மேலான தெய்வமாம் எங்கள் நாரணன். அவன் பெயரிட்டு மேலான செல்வமாம் வைகுண்டத்துக்கு செல்ல வழி வகுத்துக்கொள்ளுங்கள். அவன் நாமம் இட்ட பிள்ளையின் தாய் ஒரு போதும் நரகத்திற்கு போகமாட்டாள்.

பெரியாழ்வார் திருமொழி

2. வம்மின் புலவீர் அருளாளபெருமாள் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணைக் கடலே
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே //

புலவர்களே வாருங்கள்! அரூளாள பெருமான், அருளாழி அம்மான், பிராட்டியை தேவியாக கொண்டு சதா தன் மார்பில் தரித்துக்கோண்டிருப்பவனும், கருணைக்கடல், வள்ளல் சதா என் மனதில் குடிகொண்டு நித்ய வாசம் செய்யும் பேரருளாளர் என் அத்தகிரி பெருமானை பற்றி பேச யாருக்கும் நேர்மை கிடையாது- அதாவது அவன் கருணை எல்லையை கடந்தது.

ஹஸ்தகிரி மஹாத்மியம். //

3. ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீதுபோய்
வானம் ஆளவல்லையேல் வணங்கி வாழ்த்து, என் நெஞ்சமே!
ஞானம் ஆகி, ஞாயிறு ஆகி ஞாலமுற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தைபாதம் எண்ணியே //

என் நெஞ்சமே! ஆத்மாவுக்கு கெடுதல் கொடுக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யாம், அஞ்ஞானம், அசூயை ஆகிய எட்டையும் போக்கி , சம்சார துக்கமெல்லாம் நீங்கி பரம பதம் அடைய பகவானின் திருவடியை பற்று. அவனே ஆத்ம சுகத்தை அளிப்பவன்.சூரியனை போல அறிவு சுடரை ஏற்றுபவன்.

திருச்சந்தவிருத்தம்.

3. வரத தவ விலோகயந்தி தந்யா:
மரகத பூதர மாத்ருகாயமாணம்
வ்யபகத பரிகர்ம வாரவாணம்
ம்ருகமத: பங்க விசேஷ நீலமங்கம் //

வரம் தரும் வரதனே! திருவாபரணங்கள், கவசம் இவற்றை கழற்றிய நிலையிலும், மரகத மலைக்கு ஒப்பாக மூலவடிவம் போன்றதாய் கஸ்தூரி குழம்பினால் மிக நீல நுஇறம் உள்ளதான உனது திருமேனியை காண்பவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்.

ஸ்வாமி தேசிகன்- ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்.

R.Jagannathan

அத்தகிரியும், அருளாளனும்-8

அத்தகிரியும், அருளாளனும்-8

1. நாவாயில் உண்டே ' நமோ நாராயணா ' என்று
ஓவாதுரைக்கும் உரையுண்டே- மூவாற
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே- என்னொருவர்
தீக்கதிக்கண் செல்லும் நிறம்?

எம்பெருமானை துதிக்க நம் வாய் இருக்க வேறு எங்கும் தேடி போகவேண்டாம். களைப்பிள்ளாமல் திரும்ப் திரும்ப சொல்ல - ' நமோ நாராயணா ' என்ற நாமம் இருக்கே! அந்த திருமந்திரம் நம்மை திருமப் பிறவாமல் வைகுண்டத்திற்கு இட்டு செல்லும். மற்றும் பக்தி, ப்ரப்த்தி போன்ற வழிகள் இருக்கு-இவை எல்லாம் இருக்க இந்த பாழும் உடல் தீய வழிகளிளேயே சென்று விழுகிறதே - இது என்ன விந்தை?
முதல் திருவந்தாதி.

1. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே //
திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய், ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார், நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
ஐயர் மலர்மகள் நின் ஆகத்தாள்- செய்ய
மறையாள் உன் உந்தியான்; மாமதிள் மூன்று எய்த
இறையான், நின் ஆகத்து இறை //

மேகம் போல் நிறமும், வலம்புரி சங்கும், சக்கரமும் ஏந்தி நிற்கும் பெருமானே! மலர் மகள் நின் மார்பில் தவழ்கிறாள். இவையாவும் உன் அழகை காட்டுபவை.
வேதங்கள் படைத்த நான்முகன் உன் நாபியில் பிறந்தான். திரிபுரங்களையும் எறித்த சிவனோ ஒரு மூலையில் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும், பிராட்டிக்கும் உன்னிடம் இடம் கொடுத்த உன் சீலகுணத்தை என்னவென்று புகழ்வது.

பொய்கை ஆழ்வார்- முதல் திருவந்தாதி

2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டுவண்ணத்தாலும்
வானவருக்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடைய வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளார்க்கு அலங்கார ம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

காஞ்சி நகர் திடமான ரத்தினங்களாலும், தங்கத்தாலும் சேர்த்து இழைக்கப்பட்டது. அழியாத சிற்ப சாஸ்திரத்தால் அழகு பெற்றது.நாங்கு ஜாதியனரும் சேர்ந்து நிறைந்து தேவர்களும் வியக்கத்தக்க அழகுடன், குதிரைகள் மற்றும் யானைகள் சூழ பூமிக்கு ஆபரணம் போன்ற மதிள்களுடன் தேவலோகம் போல் காட்சிதரும்- காஞ்சியை கண்டு ப்ரஹ்மா மகிழ்ந்தார்

ஹஸ்தகிரி மஹாத்மியம்

3. மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து, இருளோடு முட்டி
ஆணிப்பொன் அன்ன சுடர்படுமாலை; உலகு அளந்த
மாணிக்கமே! என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே1 அடியேன் அடி ஆவி அடைக்கலமே //

உலகையெல்லாம் அளந்த என் மாணிக்கமே, மரகதவண்ணனே! உவமையில்லா மாற்றுயர்ந்த பொன்போலும் மதிப்புடையவனே! சூரியனிருளில்-குரங்கு கையில் அகப்பட்ட மாணிக்கம் போல-இந்த மாலை பொழுதில் உனக்கு அடியவளான நான் உன்னை பிறிந்து வாடுகிறேன். என் உயிர் உனக்கு அடைக்கலமாகிவிட்டது.

திருவிருத்தம்.

3. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேறவழி தந்தார் வந்தார் தாமே //

தன்னுடைய சிறந்த க்ருபையால் உயர்ந்த சாஸ்த்திரங்களை உலகம் உய்ய தந்தவர் வந்தார்.நாஸ்திகர்களுக்கு அவர்கள் மயங்கி விழ மோஹன சாஸ்த்திரங்களை தந்து தள்ளியவர் வந்தார். அடியவர்களுக்கு பரமபதத்திற்கு செல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம் ..

R.Jagannathan.

அத்தகிரியும், அருளாளனும்-7

அத்தகிரியும், அருளாளனும்-7

1. நாவாயில் உண்டே; 'நமோ நாராயணா ' என்று
ஓவா துரைக்கும் உரையுண்டே; - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம்?

எம்பெருமானை துதிப்பதற்கு நாக்கு எங்கும் தேடாமல் நம் வாயிலேயே இருக்கிறது. திருப்பி திருப்பி களைப்பில்லாமல் சொல்ல நமோ நாராயணா என்ற திருமந்திரம் நம்மை பரம பதத்திற்கு இட்டு செல்ல பக்தி, ப்ரபத்தி போன்ற எளிய வழிகள் இருக்கின்றன. இவையெல்லாம் விட்டு விட்டு சிலருக்கு தீய வழிகளில் செல்ல எப்படி நாட்டம் ஏற்படுகிறதோ ? என்ன விந்தை இது.

முதல் திருவந்தாதி.

1. பெருமையுடை அத்தகிரி பெருமாள் வந்தார்
பேராது அருள்பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் அவையாகும் பெரியோர் வந்தார்

பெருமையுடைய அத்தகிரி பெருமாள் எழுந்தருளினார். நீங்காத கருணயுடைய பெருமாள் வந்தார். வேதத்தின் சிகரத்தில் போற்றப்பட்டு நின்றார். சங்கு, சக்கர கதாபாணியாய் வேதஸ்வரூபியான பெருமாள் வந்தார். பிராட்டி ஸப்தஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபியாக நிற்பார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. கண்டு கொண்டு என் கண்- இணை ஆரக்களித்து
பண்டைவினையாய்டின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்-மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே //

வைகுண்டத்தில் காணும் பெருமாளை வரதனாய் காண பாக்கியம் பெற்றேன் அவரை பார்த்து மகிழும் பேறு பெற்றேன். அதனால் என் வினைகள்-முந்தியன-நல்லவை, தீயவை அனைத்தையும் போக்கிக்கொண்டேன். இனி அவனை அடைய தடுப்பவர் யாரும் இல்லை. இது என்னோடு இல்லாமல் திருமால் அடியவர்களுக்கு உபகாரம் செய்ய தித்திக்கும் அமுதமாக திருவாய் மொழியை என் பெருமாள் என் மூலமாக பாட செய்தான். என்னே என் பேறு.


2.. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே //

திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய், ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார், நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

3. கரிய மேனி வெளியநீறு இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன், விண்னோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏந்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ- எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே ?

அருளாளன் செம்பொன் நிறத்தவன்- கரிய திருமேனி. அந்த திருமேனியில் கருவிழியின் அழகுக்கு மேலே அஞ்சனப்பொட்டு. அழகிய விசாலமான கண்கள். நித்யசூரிகளுக்கு தலைவன். அந்த தலைவனை இசைமாலையாம் திருவாய் மொழி என்ற மாலைகளால் துதிக்கப்பெற்றேன். இதைவிட பாக்கிய சாலி யார் இருப்பார். உனக்கு அடிமை செய்தே இனி காலமெல்லாம் கழிப்பேன்.

திருவாய்மொழி.

3. அத்தகிரி அருளாள பெருமாள் வந்தார்
ஆனை, பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரம் தரும் தெய்வ பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் பெருமாள் வந்தார்
மூலமென ஓலமிட வல்லார் வந்தார்
உத்திர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே.

ஹஸ்தகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாள பெருமாள் , யானை, குதிரை, தேர் ஆகிய வாஹனங்களில் கண்ணை மயக்கும் வண்ணம் வந்தார்.மனதால் நினைத்த மாத்திரமே வேண்டிய வரத்தை அருளும் பெருமாள் வந்தார். தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் மோக்ஷத்தையளிக்கும் பெருமாள் வந்தார். யானைக்கு அருளிய பெருமாள் வந்தார்.உத்திர வேதிக்குள்ளே ஆவிர்பவிப்பவர் , நித்ய சூரிகளால் தொழப்படுபவர், பக்தர்களுக்கு திருவடியை காண்பித்து அடைக்கலம் அருளும் பெருமாள் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

R.Jagannathan.

Tuesday, April 26, 2011

அத்தகிரியும் அருளாளனும்-6

அத்தகிரியும் அருளாளனும்-6

1. ஊனில் வாழ் உயிரே, நல்லைபோ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான், மதுசூதனன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னன்லும் அமுதும் ஒத்தே //

ஊன் என் உடமிபில் வாழ்கின்ற என் உள்ளமே-நீ நல்லவன்-உன்னால் நான் மிக்க நன்மையை பெற்றேன்- நானும் எம்பெருமானும் என் உள்ளத்தே ஒன்றாக கலந்துவிட்டோம். அந்த கலவையால் எல்லா விதமான சுவையும் உண்டாகிவிட்டது. தேனும், பாலும், நய்யும், கருப்பஞ்சாரும் அமுதும் கலந்தாற்ப்போல
திருவாய்மொழி

1. எத்திசை நிலனுமெய்தி அருந்தவம் செய்த வந்நாள்
சத்தியவிரதம் செல்வாய் என்றதோர் உரையின் சார்வால்
அத்திசை சென்றழைத்து அங்கமலரில் எடுப்பான் தன்னை
உத்தரவேதி செய்யென்று உரையணங்கு இறை உரைத்தான் //

வாக்கின் தேவதையான ப்ரஹ்மா எல்லா திசைகளிலுமுள்ள ஸ்தானங்ககளுக்கும் சென்று ஒருவராலும் செய்யமுடியாத தவத்தை செய்த காலத்தில் ஸத்யவ்ரத க்ஷேத்திரத்திற்கு போ என்று அசரீரி சொல்ல, ப்ரஹ்மா விச்வகர்மாவை அழைத்து யாகம் செய்வதற்கு உத்திர வேதியை அத்தகிரியில் அமைப்பாயாக என்று உரைத்தான்.
ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. எம்மாவீட்டுத் திறமும் செப்பம்; நின்
செம்மா பாத-பற்புத் தலைசேர்த்து; ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே//
கஜேந்திரனின் துன்பத்ததை நீக்கிய பிரானே! நான் விரும்புவது எல்லாம் அகவாய் சிவந்து, புறவாய் கறுத்து, பெரிதாய் மணத்து மலர்ந்த நின் திருவடித்தாமரைகளை என் தலையின் மீது விரைவிலே சேர்க்கவேண்டும் என்பதே!. எப்படி கொக்கு வாயும், படுகண்ணியும் போல உன் திருவடிகளும் என் ர்தலையும் சேரவேண்டும் என்பதே அம்மா அடியேன் விரும்புவது.

திருவாய்மொழி
2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடைய வாசியொளி ஓசையாலும்
ஒருகாலும் அழியாத அழகினாலும்
மண்மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

ரத்தினத்தோடு தங்கத்தை சேர்ந்து இழைக்கப்பெற்ற , அழியாத சிற்ப சாஸ்திரப்படி வடிக்கப்பெற்ற , கொடை நிறைந்த , நான்கு ஜாதியனரும் நிறந்த தேவர்களுக்கு வியப்பையூட்டும் இயற்கை அழகு அமைந்த, குதிரைகள் கனைக்கும் ஓசையாலும், ஒருபோதும் அழியாத அழகு பெற்ற -பூமிக்கு ஆபரணம் போல மதிள்கள் உடைய கச்சியை கண்டு பிரஹ்மா மிகவும் மகிழ்ந்தார்.
ஹஸ்தகிரி மஹாத்மியம்

3. கரிய மேனிமிசை வெளியநீறு சிறிதே இடும்
பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரியசொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அறியது உண்டோ- எனக்கு ஒன்று தொட்டும் இனி என்றுமே ?

எம்பெருமானுக்கு அழகோ அவன் கறுத்த திருமேனி. அந்த மேனியில் அழ்கு செய்வது விழிகளில் தீட்டப்பெற்ற அஞ்சனம். அந்த அழகனே நம் நாயகன்.அவனுக்கு நாம் சாத்தும் மாலையோ இசை மாலை. அந்த இசைமாலையில் அவன் நாம கீர்த்தனைகள் தேனினும் இனிது. இப்படி ஏந்தி அனுபவித்த நான் இனி இதைவிட சிறப்பானது ஒன்றையும் தேடி அலையமாட்டேன். கிடைப்பதற்கு அரிதான பொருள் கிடைத்தது- இனி என் காலமெல்லாம் அரிய்ழது ஒன்றும் இல்லை.
திருவாய்மொழி.

3. அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய் கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் //

ப்ரஹ்மாவால் விரும்பி மேற்கொண்ட அசுவமேத யாகத்தை தடுக்க வாக் தேவதை சரஸ்வதி கோபத்தால் நதியாகி பெறுகிவர எம்பெருமான் அதை காத்து பிரம்மனுக்கு அருள்பாலிக்க வேகவதியாக-அணையாக பள்ளி கொண்டானே! என்னே அவன் கருணை.

ஹஸ்தகிரி மகாத்மியம்.

R.Jagannathan.

ஹஸ்தகிரியும், அருளாளனும்-5

ஹஸ்தகிரியும், அருளாளனும்-5

1. கனையார் கடலும் கருவினையும் காயாவும்
அனையானை- அன்பினால் ஆர்வத்தால் என்னும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய்நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல; கண்டாமே //

பெரிய திருமொழி

ஒலிமிக்க கடலும், கருவினைப் பூவும் காயாம்பூவும் போல் நிறமுள்ளவன் எம்பெருமான். அவனிடத்தே அன்பும் ஆற்றாமையும் மிகுந்து, தடாகத்தில் பூத்த மலர்களை பறித்து அவன் பாதங்களில் சம்ர்ப்பிவித்து அவனுக்கு அடியார்களாகாவிட்டால் நாம் எடுத்த பிறவி வீணே. வாழ்த்தவாயும், நினைக்க மட நெஞ்சம், தாழ்த்த சென்னியும் தந்தவன் இறைவன், இவையெல்லாம் அவனை அநுபவிக்கவே வாய்த்தவை.

1. தரணியில் மன்னி அயனார் தனித்தவம் காத்தபிரான்
கருணையெனும் கடலாடித் திருவணையைக் கண்டதற்பின்
திரணர கெண்ணிய சித்ரகுபதன் தெரிந்துவைத்த
சுருணையிலேறிய சூழ்வினைமுற்றும் துறந்தனமே //

பூமியில் ஸ்திரமாயிருந்து ப்ரஹ்மாவினுடைய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி பேருபகாரம் செய்த எம்பெருமானின் க்ருபை என்னும் கடலில் நீராடி, அணையை சேவித்தபிறகு சித்ரகுப்தனால் எழுதிவைக்கப்பெற்ற கணக்கில் வந்த பாபங்கள் எல்லாம் நீங்கப்பெற்றோம்.

ஹஸ்தகிரி மகாத்மியம்.


2.ஊனில் வாழ் உயிரே, நல்லைபோ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான், மதுசூதனன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே //

என் உடமிபில் வாழ்கின்ற என் உள்ளமே- நீ நல்லவன் தான். உன் துணை கொண்டு நான் மிக பெரிய நன்மை அடைந்தேன். எப்பெருமான் மதுசூதனனும் நானும் என் நெஞ்சிலே ஒன்றாக கலந்துவிட்டோம். இந்த கலவையால் எல்லா சுவைகளும்- தேனும் பாலும், கருப்பஞ்சாரும் அமுதும் ஒன்றாக சேர்ந்தாற்ப்போல்.
திருவாய்மொழி

2. வாழி அருளாளர் வாழி அணி அத்தகிரி
வாழி எதிராஜன் வாசகத்தோர் வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை
அரணாக கொள்ளாதாரன்பு //

பேரளுளார வாழ்க, பூமிக்கு அலங்காரமான ஹஸ்தகிரி வாழ்க, பாஷ்யகாரர் ஸ்ரீசூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க, ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதவர்களுடைய அன்பும் வாழ்க.
ஹஸ்தகிரி மஹாத்மியம்.

3. ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாய், தந்தையாய், அறியாதன அறிவித்த
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே

பகவானே உனக்கு இணையானவர் யாரும் இல்லை, உன்னைவிட உயர்ந்தவரும் யாரும் இல்லை. இப்படி ஆச்சர்யமான குணங்களையுடையவனே!- அந்த அந்த பொருட்களோடு ஒதத நிலைகளையுடையவனே, என்னுடைய உயிராகி, என்னைப்பெர்ற தாய் தந்தையுமாகி நான் அறியாதவையெல்லாம் அறிய செய்தாய். நீ தாயாய், தந்தையாய், ஆச்சார்யனாய் செய்த நன்மைகளை அடியேன் அறியேனே
திருவாய்மொழி

3. வம்மின் புலவீர் அருளாள பெருமான் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளை பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணை கடலே
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே//

புலவர்களை வாருங்கள், அருளாள பெருமான் என்றும், அருளாழி அம்மான் என்றும், பிராட்டியை தேவியாக கொண்டது மன்றி, என் மனதில் வசிக்கும் பேரளாளன் என்று ஆச்சர்யமாக பெருகும் கருணைக்கடலாக எம்பெருமானை எவ்வாறு நீங்கள் பேசவல்லீர்-இவ்வாறு செய்வது என்ன நேர்மை?

ஹஸ்தகிரி மஹாத்மியம்

R.Jagannathan.

அத்தகிரியும் அருளாளனும்-4

அத்தகிரியும் அருளாளனும்-4

1. அறிவென்னும் தாள்கொளுவி, ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண்கதவம் செம்மி- மறை என்னும்
நங்கோதி, நங்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் அடி //

வேதங்களை இடைவிடாது ஓதி அவற்றின் பொருள்களையும் நங்குணர்ந்து, ஐம்புலங்களையும் தம்வழியே செல்லவிடாதபடி திண்ணிய கடவையடைத்து, ஞானமென்னும் தாழ்பாளையிட்டு, நன்றாக த்யானம் செய்பவர்களே- பச்சை நிறத்தையுடைய கடல்வண்ணனான எம்பெருமானை நாள்தோறும் கண்டு அநுபவிக்க பெறுவார்கள்

மூன்றாம் திருவந்தாதி.

1. உத்தம வமர்த்தலம் அமைத்ததோர்
எழில் தனுவுயர்த்த கணையால்
அத்திவரக்கன் - முடிபத்தும் ஒரு
கொத்தென உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்தவெணெய்
வைத்ததுணும் அத்தனிடமாம்
அறுக்கும் அணி அத்தஸ்கிரியே //

உயர்ந்த போர்களத்தில் அமைக்கப்பெற்ற அழகிய வில்லினின்று விடப்பெற்ற அம்பினால் அஸ்த்ர பலமுள்ள ராவணனின் தலைகள் பத்தையும் ஒரு குலையாக அறுத்த ராமனும்; மத்தினால் கடையப்பட்ட தயிரையும், வெண்ணையையும் உண்ட கண்ணன்-ஆகிய இருவருமான என் ஸ்வாமி ஹஸ்தகிரி எனும் காஞ்சியில் பக்தர்களுடைய பாபங்களை அறவே ஒழித்து நமக்காக அருள் பாலிக்க குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரமே அத்தகிரி.

ஸ்வாமி தேசிகன்- ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. பொங்கு புணரிக் கடல்சூழ் ஆடை
நிலமாமகள், மலர்மா
மங்கை, பிரமன், சிவன் இந் திரன்வா
நவர்நா யகர் ஆய
எங்கள் அடிகள், இமையோர் தலைவ
ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர உரைமின்
நமோ நா ராயணமே //

அலைகடலை ஆடையாகவுடைய பூமி பிராட்டிக்கும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டிக்கும், பிரமன், சிவன், இந்திரன் மற்றும் உள்ள தேவர்களுக்கும் தலைவன் எங்கள் நாயகன், நித்ய சூரிகளுக்கு அதிபதி. குறைவற்றவர்களுக்கும், குறைவுடையவர்கள் எல்லோருக்கும் வேற்றுமை இன்றி தலைவனாக இருப்பவன்- நாராயணன்.
அவன் நாமத்தை இருதரம் சொன்னாலே போதும்-நம் பாபங்கள் அனைத்தும் தொலைந்து போகும்-வாருங்கள் அவன் நாமத்தை-நமோ நாராயணா என்ற நாமத்தை சொல்லுவோம்.

பெரிய திருமொழி
2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவருக்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளாற்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

தங்கத்தில் இரத்தினத்தை இழைத்து, அழியாத சிற்ப சாஸ்திரத்தின் முறையில் அமைக்கப்பெற்ற-நான்கு ஜாதியினரும் நிறைந்த, தேவர்களும் வியங்கும் அமைப்பயுடைய, இயற்கை அழகோடு கூடிய-ஒருபோதும் அழியாமல் நிலைபெற்ற அழகினால், பூமிக்கு ஆபரணம் என்னும்படி-மதிள்கள் சூழ்ந்த காஞ்சீபுரத்தை கண்டு பிரம்மனே மகிழ்ச்சி அடைந்தான்
ஸ்ரீ ஹஸ்தகிரி மஹாத்ம்யம்-பிரம்ம புராணம்

3. உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கேற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன்-மெத்தனவே
நின்றான், இருந்தான், கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து //

மூன்றாம் திருவந்தாதி
அவனே எனக்கு கதி என்று ஒளிமயமான விளக்கை ஏற்றிவைத்து அவனை தேடிப்பிடித்து என் வசமாக்கி கொண்டேன். எளியவருக்கும் எளியனான எம்பெருமான் என் நெஞ்சிலே வந்து நின்று கொண்டான். சற்று நேரம் கழித்து மெதுவாக அமர்ந்து கொண்டான். வேறு வழி இல்லை என்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டான். என்ன சுகம் எனக்கு-இது தெரியாமல் நான் இவனை நேற்றுவரை தடுத்து நிறுத்தியிருந்தேனே! என்று வருந்துகிறார் ஆழ்வார்-அவனுக்கே என்னிடம் எவ்வளவு கருணை என்று வியக்கிறார்.

3. அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய் கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் தான் //

ப்ரம்மாவினால் விரும்பி சேய்யப்பட்ட அசுவமேதமென்னும் பெரிய யாகம் அழிந்துபோகும்படி வாக்கின் தேவதையான சரஸ்வதி அழகிய நதியாகி கோபித்துக்கொண்டு பெருகிவர உலகுக்கே தந்தையான-பாம்பணையில் பள்ளிகொண்ட எம்பெருமான் ப்ரஹ்மாவுக்கு அருள் செய்து தானை ஆற்றின் குறுக்கே அணையாகி ஸரஸ்வதியின் சீற்றத்தை தடுத்து யாகத்தை காப்பாற்றினான்-என்னே வரதனின் கருணை.
ஹஸ்தகிரி மகாத்மியம்


R.Jagannathan.

Saturday, March 26, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 3

அத்தகிரியும், அருளாளனும்- 3

1.ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;
பேணுங்கால் பேணும் உரு ஆகும்; அல்லன் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே //
திருவாய்மொழி
எம்பெருமான் எப்படி இருப்பான்: ஆணா, பெண்ணா, அல்லது அலியா-இவர்கள் யாரும் இல்லை.
அவன் வடிவம் யாராலும் சொல்ல முடியாது. அவனை காண்பதற்கு இயலாது. உள்ளவன் அல்லன், இல்லாதவனும் அல்லன்-ஆனால் பக்தர்கள் விரும்பும் காலத்தில் அவர்கள் விரும்பும் வடிவில் இருப்பன். தன்னை ஆச்ரயிக்காதவற்கு அவன் கிடைப்பதற்கு அரிதாக இருப்பான்.

1. ஆஹூயமாநம் அநபாய விபூதி காமை:
ஆலோக லுப்த ஜகதாந்த்ய மநுஸ்மரேயம் /
ஆலோகிதாம்சுக மநாகுல ஹேதி ஜாலம்
ஹைரண்யகர்ப்ப ஹயமேத ஹவிர்புஜம் த்வாம் //
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்/
அருளாள பெருமானே! பிரமன் கெய்த அசுவமேத யாகத்தில் அவன் தந்த ஹவிஸ்ஸை அமுது செய்தாய்-அப்படி செய்து யாக குண்டத்தில் அக்னி போல் காட்சி தந்தாய்.என்னாலும் அழியாத மோட்சத்தை விரும்புபவர்கள் உன்னிடம் சரணாகதி அடைந்து ஆத்மாவை சமர்ப்பிவிப்பார்கள். நீ உன் கடாக்ஷத்தால் உலகில் இருளை போக்குகின்றாய்.அக்னிபோல் செம்மை நிறமாக காணுகின்றாய். உன் திருவாயுதங்களோ மிக சாந்தமாக இருக்கின்றது. இப்படி அக்னி போல் உன்னை நான் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பேன்.

2. என்றும் மறந்தறியேன் ; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே-இன்பக்
கடல்-ஆழிநீ அருளிக் காண் //
இரண்டாம் திருவந்தாதி
ஆழ்வார் பகவானையே உபாயமாக பற்றி அவனை பெறுவதற்கு அவனே அருள் செய்யவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
என்னுடைய எல்லா பிறப்புகளிலும் எல்லா காலத்திலும் என்னை பற்றிய நினைப்பு உனக்கு என்றும் இருக்கிறது. அதனால் தான் நான் இந்த பிறப்பில் உன்னை என்றும் மறந்ததில்லை. அது என்னால் வந்தது அல்ல. அது உன்னாலேயே தான். இனி நான் உன்னை அடைய நீயே வழி காண்பிக்கவேண்டும்

2. ஔதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே
ச்லாக்யே ச திவ்ய ஸதனே தமஸ: பரஸ்மிந்
அந்த: களேபர மிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம்
ஜாதம் கரீச கத மாதரணாஸ்பதம் தே //
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //
பேராளபெருமானே! உனக்கு உறைவிடங்கள் பல உள்ளன. பாற்கடல் உள்ளது, ஸ்ரீவைகுண்டத்தில் திருமாமணி மண்டபம் உள்ளது. இவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை உனக்கு. நீயோ மனித இதயமே மிக உயர்ந்ததாய் அதனுள் உறைகின்றாய். மிக இழிவான இந்த மனித உடலில் இதயத்தில் உறைந்து அவனை கடை தேற எவ்வளவு பாடு படுகிறாய். அதற்கு ஒரே காரணம் அவனிடம் நீ காட்டும் இரக்கம், அன்பு.

3. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்னும் காண்தோறும்- பாவியேன்
மெல் ஆவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று //
பெரிய திருவந்தாதி
பூவைப்பூ, காயாம்பூ, கரு நெய்தல் செங்கழு நீர்ப்பூ இவைகளெல்லாம் காணும்போது அவைகள் எல்லாம் இறைவனது வடிவத்தையே நினைவூட்டுகிறது. இவையல்லாம் உனது திருமேனியே என்று இந்த பாவி பூரித்து நிற்கிறேன். இவையெல்லாம் நான் அநுபவிக்க நீயல்லவோ எனக்கு அளித்தது என்கிறார் ஆழ்வார்.

3. பாலாக்ருதேர் வட பலாச மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டல மபூ துதரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வராஹ மாஸ்த்திதவதோ வபு ரத்புதம் தே //
ஸ்வாமி தேசிகன்-வரதராஜ பஞ்சாசத் //

பேரருளாள பெருமானே! நீ பாலகனாய் ஆலிலை மேல் உறங்கும் பொழுது இந்த உலகமெல்லாம் உன் வயிற்றில் அடக்கிக்கொண்டாய்- சிறுவடிவில் மகத்தான காரியம். அற்புதமான தோற்றம். நீ பெரிய வராஹமாக தோன்றியபோதும் இந்த ப்ரஹ்மாண்டமே உன்னிடத்தில் அடங்கி கிடந்தது. இவையெல்லாம் உன் திருவிளையாடல் செயல்கள்- உன் சக்தியால் தான் செய்யமுடியும்.

R.Jagannathan.

அத்தகிரியும் அருளாளனும்-2

அத்தகிரியும் அருளாளனும்-2

புணர்க்குமயனாம் அழிக்குமரனாம் புணர்த்ததன் உந்தியோடு ஆகத்தும் மன்னி
புணர்த்த திருவாகித் தன்மார்வில்தான்சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே //

பிரமனை தோற்றுவித்த தனது நாபிகமலத்துடன் தன் மேனியில் நிலைபேறு பெற்ற பிரமன் எம்பெருமானின் சரீரமானவன். சிவனும் அவனுக்கு சரீரம் ஆனவன். அவன் மார்பிலே சேர்ந்துள்ள பெரிய பிராட்டியும் தானே தனக்கு தகுதியான செயல்களை பெற்றவனான என் தேவாதிராஜனை எல்லாவிடத்திலும் கண்கூடாக பார்க்கலாம்.
எட்டாம் திருவாய்மொழி-2-ம் பத்து.

1. மத்யே விரிஞ்சி சிவயோர் விஹிதாவதார:
க்யாதோsஸி தத்ஸமதயா ததிதம் ந சித்ரம் /
மாயா வசேந மகராதி சரீரிணம் த்வாம்
தாநேவ பச்யதி கரீச யதேஷ லோக: //
தேவாதிராஜனே! பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவில் அவதாரம் செய்த நீ அவர்களுக்கும் மேலாக அழைக்கப்படுகிறாய்.இது ஒரு ஆச்சர்யம் இல்லை. உன் சங்கல்பத்தால் நீ பல அவதாரம் செய்ததை பக்தர்கள் அந்த அவதாரமாகவே கொண்டாடுகிறார்கள்-உதாரணம்-மச்ச, கூர்மம்.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.
2. தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தியவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே //

எம்பெருமானின் திருவடிகளில் சேர்ந்த தீர்த்தமும்,சாத்தப்பெற்ர திருத்துழாய் மாலையும் பரம சிவன் தலியில் கண்டதை அர்ஜுனனே பார்த்தான். அதனால் நாராயணனே பரதெவதை என்று நிச்சியம் செய்தான். சிவனிடம் அர்ஜுனன் சிவனிடம் பாஸுபதாஸ்ரம் வேண்டி உபாஸனை செய்ய விரும்பினான். அவன்மேல் இரக்கம் கொண்ட கண்ணன் தீர்த்தத்தையும் திருத்துழாயையும் தன் காலடியில் சமர்ப்பிக்குமாறு சொன்னான். மறுகணம் அவை சிவன் முடியில் அர்ஜுனன் பார்த்தான். இதைவிட நாராயணனின் பரத்துவத்தை பேச யாரால் முடியும். அப்பேற்ப்பட்ட ஹரி அத்தகிரியில் தேவாதி ராஜனாக பக்தர்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறான்.

திருவாய் மொழி

2. வரத தவ விலோகயந்தி தந்யா:
மரகத பூதர மாத்ருகாயமாணம்
வ்யபகத பரிகர்ம வாரவாணம்
ம்ருகதமத பங்க விச்கேஷ நீலமங்கம் //
வரம்தரும் பேரருளாளப்பெருமானே! உன்னை சேவிக்க ஏகாந்த சமயங்கள் உண்டு. அப்போது திருவாபரணம், மாலைகள் எல்லாம் கழற்றி வைக்க நேரிடும். அப்போது உன் இயற்கை அழகை சேவிக்க- அநுபவிக்க இயலும். அப்போது இதை பார்த்த்துதான் மரகத் மலை படைக்கப்பட்டதோ என்று தோன்றும். கஸ்தூரியை குழம்பாக்கி அதை உன் நீல திருமேனியில் சாத்துவதால் அந்த நீல நிறம் மேலும் சிறப்பாகி ஜ்வலிக்கும். இதை எல்லோராலும் காணமுடியாது. சிலபேர்-உன் அந்தரங்க கைங்கர்யம் சில புண்யசாலிகள் மட்டும் தான் காணமுடிகிறது.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

3. நாவாயில் உண்டே; நமோ நாராயணா என்று
ஓவா துரைக்கும் உரையுண்டே-மூவாத
மாக்கதிகண் கெல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிகண் செல்லும்திறம்?

வரதனை துதிப்பதற்கு கருவியான நாக்கு, தேடவேண்டாத வாய், திகட்டாத -நமோ நாராயணா என்ற சொல் இவ்வளவும், மேலும் மோக்ஷத்தை அடைய பக்தி, ப்ரபத்தி இவை யாவும் நம்முடையே இருக்க, அதைவிட்டு ஐம்புலங்களும் இட்டு செல்லும் தீய வழிகளிலேயே செல்லும் பலரை என்னவென்று சொல்ல.
முதல் திருவந்தாதி.

3. யாவந் ந பச்யதி நிகாமம் அமாஷணோ மாம்
ப்ரு பங்க பீஷண கராள முக: க்ருதாந்த:
தாவந் பதந்து மயி தே பகவந் தயாளோ:
உந்நித்ர பத்ம கலிகா மதுரா: கடாக்ஷம் //

பேரருளாளனே! நீயோ கருணை கடல். மற்ற எல்லா குணங்களும் அதற்கு துணை நிற்கின்றன. ஆகையால் நீ நிச்சியம் என் வேண்டுகோளை நிறை செய்வாய். மரண காலத்தில் என் உயிரை கவர யமன் வருவான். அவனை பார்க்க எனக்கு பயம். அதை நினைத்தால் எப்போதே என் உடம்பு நடுங்குகிறது. அவன் பார்வை என் மீது விழுவதற்கு முன்பே-உன் பார்வை என் மீது விழுந்து என்னை கண் குளிர கடாக்ஷிக்க வேண்டும். அப்போது என் பயம் நீங்கிவிடும், அவனும் என்பக்கம் வரமாட்டான்.

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

பேரளுளானனின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கும்- அவனை சரணாகதி அடைந்தால். பகவத் ராமானுஜர் அவரையே அராதித்து கிணறு கைங்கர்யம் செய்து பெரும் பேறு பெற்றார். ஸ்வாமி தேசிகர் தன்னை அர்ப்பணித்து முடிவில்லா இன்பம் பெற்றார். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் அமுதன்.தினமும் அவன் நாமத்தை ஒருதரம் சொன்னாலே போதும் வாரி வழங்க காத்துக்கொண்டிருக்கிறான். நாம் தான் சரண் அடைய வேண்டும்.

R.Jagannathan.

Wednesday, February 9, 2011

அத்தகிரியும், அருளாளனும்.

அத்தகிரியும், அருளாளனும்.

புற இருளையும் , அக இருளையும் போக்குவதற்காக அவதரித்தவர்கள் தான் ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும். ஸ்வாமி தேசிகன் தன் யதிராஜ சப்ததியில் அறிஞர்கள் பெருமாளை அணுகி அவரது திருவடியை பற்றவிரும்பினால் முதலில் ஆழ்வார்கள் திருவடியையும் ஆச்சார்யர்கள் திருவடியையும் பற்றிவிட்டு இங்கே வாரும் என்பார். ஆழ்வார்களோ பகவானை தேனினும் இனிதான பாக்களால் பாடி பாடி தன்னையும் மறந்து பகவானோடு ஐக்கியமாகி விட்டார்கள். ஆச்சார்யர்கள் நம்மிடமே இருந்து அப்பப்போது நம்மை திருத்தி பகவானிடம் சேர்க்கிறார்கள்.கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்கள் என்று சொன்னால்-அரங்கனும், அருளாலனும், ஆனந்த நிலயத்தில் வீற்றிருக்கும் வேங்கடவனும் தான்- அரங்கனையும், வேங்கடவனையும் நாம் அநுபவித்தாயிற்று. அருள் சுரக்கும் அத்தகிரிக்கு அதிபதியான வரதனிடம் -இம்மையிலும் மறுமயிலும் நமக்கு வாரி வழங்கும்- அருளால பெருமானிடம் தஞ்சம் புகுவோம்.


திருமழிசை ஆழ்வார்- திருச்சந்த விருத்தம்1. பூ நிலாய ஐந்துமாய் புனற்கண்நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய், சிறந்தகால் இரண்டுமாய்
மீ நிலாய (து) ஒன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லீரே?

எம்பெருமானே! வரதா! ஐந்து பூதங்களாக-ஒலி, ஊறு, தோற்றம், சுவை, நாற்றம்-இந்த பூமியை படைத்தாய். நாற்றம் நீங்கிய மற்ற நான்கு குணங்கள் கொண்டது- நீர். தீயானது-ஒலி, ஊறு, தோற்றம் ஆகிய முக்குணங்களை கொண்டது. ஒலி, ஊறு இந்த இரண்டையும் கொண்டது காற்று. ஒலி ஒன்றையே கொண்டது ஆகாயம்.இந்த ஐந்து பூதங்களும் உன்னிடமே அடங்க்கி இருக்கின்றன-தேவராகவும், மனித்ராகவும் , விலங்காகவும், தாவரமாகவும் நீயே அதற்கு ஆத்மாவாக இருந்து நடத்தி செல்கிறாய். இப்படி எல்லாவற்றிற்கும் முழுமுதல் காரணப்பொறுளாக உள்ளதை நாம் நினைக்க மறந்துவிடுகிறோம்.

1.த்விரத சிகரி ஸீம்நா ஸத்மவாந் பத்ம யோநே:
துரக ஸவந வேத்யாம் ச்யாமளோ ஹவ்யவாஹ:
கலச ஜலதி கந்யா வல்லரீ கல்ப சாகீ
கலயது குசலம் ந: கோsபி காருண்ய ராசி: //


ஹஸ்தகிரியின் மேற்பகுதியில் உறைவிடம் உடையவனாய் ப்ரம்மாவின் அசுவமேத யாகத்தில் கருமை நிறம் கொண்டவனாய் அக்நியாய் நிற்பவனே! பாற்கடலில் தோன்றிய பிராட்டியோடு கல்பவிருக்ஷமாய் நிற்பவனே! எங்களுக்கு க்ஷேமத்தை அருள வேண்டும்.
ஸ்வாமி தேசிகன்- ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்

2. ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி, அல்லவற்று உளாயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி, நின்ற தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துன் ஆகி, அந்தரத்து அணைந்துநிறு
ஐந்துன் ஐந்தும் ஆய நின்னையாவர்காண வல்லரே //


ஆதி தேவனே! பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், தன் மாத்திரைகள் ஐந்தும், ப்ரகிரிதி, மகான், அகங்காரம் ஆகிய மூன்றும், மனமாகிய ஒன்றும்- ஆக இருபத்திநாலு தத்துவங்களையும் ஆள்பவனே! அனைத்துக்கும் ஆத்மாவியிருப்பவனே ஐந்து சக்திகள் மற்றும் புலன்கஸ் பத்திலும் புகுந்து நிற்பவனே, ஐந்து-ஒலி, போகஸ்தானம், போகோபகரணம், அமரர், முக்தர் ஆகிய ஐவராய் நின்ற நெடுமாலே-உன்னை யார் அறியவல்லர்?
திருமழிசை ஆழ்வார்- திருச்சந்தவிருத்தம்.
2. ஸ்தோத்ரம் மயா விரசிதம் த்வததீந வாசா
தவத் ப்ரீதயே வரத யத் ததிதம் ந சித்ரம்
ஆவர்ஜயந்தி ஹ்ருதயம் கலு சிக்ஷகணாம்
மஞ் ஜூநி பஞ்ஜா சகுந்த விஜல்பிதாநி //

வரதனான பேரளுளானே! எப்படி கூட்டில் அடைபட்டிருக்கும் கிளியின் மழலை சொற்களை கேட்டு மடந்தை ஆனந்திப்பாளோ அப்படி உன் குழந்தையாகிய, உன்னாலேயே பேச்சு திறன் அடைந்த என் ஸ்தோத்திரம் உனக்கு மழலை போல் தோன்றுவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ?
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

3. புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழிதிறந்து, ஞான்நற்சுடர்கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சுருகி உள்கனிந்து எழுந்ததோர்
அன்பில் அன்றி, ஆழியானை யாவர் காணவல்லிரே?

நம் புலன் வழி செல்லும் பாதையை அடைத்து, நல்லதான கடவுள் நெறியை திறந்து ஞான விளக்கை ஏற்றி, இந்த உடம்பும், நெஞ்சும் உருகி, மனம் கனிந்து பரம பக்தியில் ஈடுபட்டவர்களே பகவானை-சங்கோடு சக்கிரம் ஏந்தும் வரதனை காணமுடியும்-இது இல்லாமல் யார் அவரை காணமுடியும்.
திருமழிசை ஆழ்வார்-திருசந்தவிருத்தம்.

3. யம் சக்ஷுஸா மவிஷயம் ஹயமேத யஜ்வா
த்ராகீயஸா ஸுசரிதேந ததர்ச வேதா:
தம் த்வாம் கரீச கருணா பரிணாமதஸ்
பூதாநி ஹந்த நிகிலாநி நிசாமயந்தீ //


அத்தகிரி பெருமாளே! புறக்கண்களுக்கு புலனாகாத உன்னை [ப்ரம்மன் அசுவமேத யாகம் செய்து, பெரிய புண்யத்திலால் கண்டானோ அத்தகைய உன்னை உன்னுடைய கருணையிலால் ஸகல பிராணிகளும் காண்கின்றன! என்ன ஆச்சர்யம்.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்

இந்த மூன்று மூன்று ஸ்லோகங்களையும் அநுசந்தித்தால் நம் உள்ளே வரதனை காணமுடியும் என்பது ஆழ்வார், ஸ்வாமி தேசிகனின் அசையாத நம்பிக்கை.

R.Jagannathan.

Monday, January 24, 2011

வேங்கடமும், வேங்கடநாதனும்-10

வேங்கடமும், வேங்கடநாதனும்-10

1. ஆயர் கொழுந்தாய்! அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை, என் மாணிக்க சோதியை
தூய அமுதை பருகி பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே.

ஆயர்களுக்கேல்லாம் கொழுந்து போன்றவன், வெண்ணை களவு முத்ஹலிய விளையாட்டுகளால் கட்டுண்டவன், மாணிக்கம், தூய்மையான அமுதம் போன்றவன். இத்தகைய மாணிக்கத்தை, தாகம் உள்ளவன் தண்ணீரை பருகி பருகி அநுபவிப்பது போல அநுபவித்தேன், இதனால் மாயபிறவி காரணமாக வரும் பயத்தை அறுத்துக்கொண்டேன்.

நம்மாழ்வார்- திருவாய்மொழி.

1. வேதாந்த தேசிக பதே விநிவேச்ய பாலம்
தேவோ தயாசதக மேத தவாதயந்
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத: //

வேங்கடநாதனான எம்பெருமான், சிறுவனாகிய அடியேனை வேதாந்தாசார்யன் என்ற ஸ்தானத்தில் அமறச்செய்து விளையாட்டாக வீணையை கொடுத்து இந்த தயா சதகத்தை மீட்டச்செய்தான்-என்னே அவன் தயை.
ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

2. செவிகளால் ஆரநின்கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப்பண்- தேன் உறைப்பத்துற்று
புவியின்மேல் பொன்நெடும் சக்கிரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் என் ஆவியே //

திருவேங்கடா! என் உயிரானது செவிகள் வயறு நிறையும்படிஉன் புகழ்வடிவான கனியென்னும் நாமங்களை அந்த அந்த காலங்ககளுக்கேற்ப பண்ணிலே தோய்த்து- அரசகுமாரர்கள் நல்ல பழங்களை தேனிலே தோய்த்து உண்ணுவது போன்று- என் செவி அநுபவிக்க ஆசைப்படுகிறது. இந்த அநுபவத்தை நீ தான் எனக்கு தரவேண்டும். பசித்தவனுக்கு பசித்தவுடனேயே சோறு கிடைத்தாற்போல்.சக்கிரத்தை தரித்தவன் நீ உன் புகழை என் செவிகள் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். உன் அருள் என்னிடம் தானாக வரும் வரை என் ஆவி இருக்காது. ஆகையால் இப்பொழுதே அந்த அநுபவத்தை எனக்கு தந்தருள
வேண்டுகிறேன்.
நம் ஆழ்வார் - திருவாய்மொழி

2. அத்யாபி தத் வ்ருஷ கிரீச தயே பவத்யாம்
ஆரம்ப மாத்ர மநிதம் ப்ரதம ஸ்துதீநாம்
ஸந்தர்சித ஸவ பர நிர்வஹணா ஸஹேதா:
மந்தஸ்ய ஸாஹஸ மிதம் த்வயி வந்திநோ மே //

திருவேங்கட நாதனின் தயா தேவியே! ஆதிகாலம் முதல் வேதங்கள் உன்னை புகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் சிறிது தூரமும் செல்லாமல் அப்படியே நிற்கின்றன. இத்தகைய உன்னை சிற்றரிவே கொண்ட அடியேன் நூறு ஸ்லோகங்களால் பாட வரைவகுத்து துதித்ததாய் பாவனை செய்கிறேன். என்ன மடமை இது. இது உன்னிடம் நான் செய்த பெரிய அபராதம். வரையறுக்க முடியாதவன் அல்லவா நீ! ஆனால் எம்பெருமானுக்கு செய்யும் அபராதங்களை அவன் பொறுத்தருளுமாறு நீ தான் செய்கின்றாய். எனக்காக பரிந்து பேசும் உனக்கு நான் தெரியாமல் செய்யும் அபராதத்தை நீ தான் பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

3. சூழ்ந்து, அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும்பாழே! ஓ
சூழ்ந்து, அதனில் பெரியபர நல்மலர்ச் சோதீ! ஓ!
சூழ்ந்து, அதனில் பெரிய சுடர்ஞான இன்பமே! ஓ!
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூந்தாயே //

எல்லா திக்குகளிலும் பரந்து அழிவின்றி நித்தியமாய் இருக்கிற மூலப்பகுதிக்கு தலைவனாய், அதனை நியமிப்பவனாய் இருப்பவனே! மூலப்பகுதியை காட்டிலும் பெரியதாய் விகாரமின்றி சிறந்ததாய் மலர்ந்த ஒளி உருவமான ஆத்மாவிற்கும் ஆத்மா ஆனவனே! இவ்விரண்டிற்கும் காட்டிலும் பெரியதாய் சகல கல்யாண குணங்களால் சுற்றிவிட்டு பிரகாசிக்கும் ஞான ஆனந்த வடிவுடையவனே! இவ்மூன்று தத்துவங்களைக்காட்டிலும் பெரியதாய் வளர்ந்து என் ஆசை, அவ்வாசையை சிறிது என்று சொல்லும்படி அதனிலும் பெரிய உன் காதலை காட்டிவந்து கலந்தாயே! திருவேங்கடா!

நம் ஆழ்வார்- திருவாய்மொழி

3. அநவதி மதிக்ருத்ய ஸ்ரீநிவாஸாநுகம்பாம்
அவிதத விஷயத்வாத் விச்வ மவ்ரீடயந்தீ
விவித குசல நீவீ வேங்கடேச ப்ரஸூதா
ஸ்துதிரிய மநவத்யா சோபதே ஸத்த்வ பாஜாம் //

ஸ்ரீனிவாஸனுடைய கருணை எல்லையற்றது. வேங்ககடேசனது வழியாய் தோன்றிய இந்த நூறு ஸ்லோகங்களும் சகல புருஷார்த்தங்களையும் கொடுக்கவல்லது-இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, இவை அனைத்தும் உண்மையே . சொற் குற்றம், பொருட்குற்றம் யாதும் இல்லாது உயர்ந்து விளங்கும் இந்த ஸ்தோத்ரம்வ் ஸதவ குணம், அறம், தர்மம், பொருள், இன்பம் முடிவில் அவனிடமே இட்டு செல்லும்.

ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

R.Jagannathan.

Tuesday, January 18, 2011

திருவேங்கடமும்-திருவேங்கடநாதனும்-9

திருவேங்கடமும்-திருவேங்கடநாதனும்-9

1. தண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா! கடல் கடைந்தாய் உன்சுழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணிகொண்டாய் சாமறே //

பகைவர்கள் மகிழ்ந்து சிரிக்கவும் நல்ல உறவினர்கள் மனமுறுகி வருந்தவும் எண்ணற்ற துன்பங்களை தரும் இவ்வுலகின் தன்மை தான் என்ன! அருளாலனே! பாற்கடலை கடந்து அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனே!உனது திருவடிதாமரையை பற்றி உன்னிடம் சேருவதற்கு எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும்.
நம் ஆழ்வார்--திருவாய் மொழி

1.அநிதாஜுஷா மந்தர்மூலேsப்
யபாய பரிப்லவே
க்ருதவி தநகா விச்சித்யைஷாம்
க்ருபே யமவச்யதாம்
ப்ரபதந பல ப்ரத்யாதேச
ப்ரஸ்ங்க விவர்ஹ்தஜிதம்
ப்ரதிவிதி முபாதத்ஸே ஸார்த்தம்
வ்ருஷாத்ரி ஹிதைஷிணா //


தயா தேவியே! வேறு எவரையும் நாடாத ப்ரபந்நருக்கு அறிந்து செய்யும் பாபங்களுக்கு அதன் சம்பந்தம் நேர்ந்தபோதிலும், நீ இந்த சேதநருக்கு யம்னிடம் அகப்படுதலை தடுத்து திருவேங்கடமுடையானினிடம் சேர்த்து ப்ரபத்தியின் மோக்ஷ பயனை வாங்கி தருகிறாய்-என்னே உன் கருணை!

2.களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
வளைவாய் நேமிப் படையாய் குடந்தை கிடந்த மாமாயா
தளரா உடலம், எனது ஆவி சரிந்து போகும் போது
இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்துப் போத இயசை நீயே//

பஞ்ச ஆயுதங்களையும் தாங்கி நிற்பவனே! நீ என் துன்பங்களை போக்கினாலும் சரி, போக்காவிட்டாலும் சரி செய்வதும் சரிரி, தவிர்வதும் சரி இவை உன் விருப்பங்கள். நீயே எனக்கு உபாயமாக ஆகிறாய். உன்னையன்றி வே3று எவரும் எனக்கு துணையாக உடையேன் அல்லன். உடல் தளர்ந்து என் உடலும் என்னைவிட்டு நீங்கும் காலம் நெருங்குகிறது. இந்த கடைசீ காலத்தில் தளராமல் உன் க் ஒருமிக்க பிடித்து போகும்படி நீயே அருள் செய்யவேண்டும்.

2. ப்ரபூத விபுத த்வியஷத் பரண கிந்ந விச்வம்பரா-
பராபநயநச் சலாத் த்வமதார்ய லக்ஷ்மீ தரம்
நிராக்ருதவதீ தயே நிகம ஸௌத தீப ச்ரியா
விபச்சி தவிகீதயா ஜகதி கீதயா Sந்தம் தம: //

தயாதேவியே! அசுரர்களால் ஏற்ப்பட்ட துயரை தாங்கி நிற்ருகும் பூமாதேவியின் பாரத்தை துடைக்க நீயே ஸ்ரீநிவாசனை கண்ணனாக அவதரிக்க செய்து கம்ஸ, சிசுபால, கால நேமி போன்றவர்களை வதம் செய்து நாம் உய்வதற்காக ஐந்தாவது வேதத்தை அளித்து அஞ்ஞான இருளை போக்க பேருதவி செய்திருக்கிறாய்.

3. பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு
திறங்கள் காட்டியிட்டு செய்து போன மாயங்களும்
நிறம்- தன் ஊடுபுக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற; இச்
சிறந்த வான் சுடரே! உன்னை என்று கொல் சேர்வதுவே//

கர்மங்களுக்கு கட்டுப்படாத நீ அடியார்களை காப்பதற்காக இப்பூமியில் வந்து அவதரித்து தாய் தந்தயரின் காற்கட்டு அறுகும்படி பிறந்தாய்-இதை நினைத்தால் என் நெஞ்சம் உருகுகிறது. எங்கோ வந்து பிறந்து எங்கோ வளர்ந்தாய். ஒரு இடையனாக வளர்ந்தாய்.பூதனை வதம், சகடாசுரன் வதம் செய்து நீ யசோதைக்கு ஆனந்தம் ஊட்டி பகவர் வயிற்றில் நின்ற நெடுமாலே! பாரதப்போரில் பாண்டவர் பக்கம் வெற்றியை நாட்டி, எல்லோரும் உய்ய கீதயை காட்டி செய்த மாயங்களை-என்ன! என்று சொல்வேன்-இவை யாவும் என் நெஞ்சம் புகுந்து என்னுடைய உயிரை உருக்கி நின்று நின்று உண்கின்றன. இப்படி நிலையை போக்கி உன்னை வந்தடையும் நாள் என்றோ? //
நம் ஆழ்வார்- திருவாய் மொழி

3. நிஸ்ஸீம வைபவ ஜூஷாம் மிஷதாம் குணாநாம்
ஸ்தோதுர் தயே வ்ருஷ கிரீச குணேஸ்வரீம் த்வாம்
தைரேவ நுநமவசை ரபிநந்திதம் மே
ஸத்யாபிதம் தவ பலா தகுதோபயத்வம் //

தயா தேவியே! திருவேங்கடநாதனுக்கு பல குணங்கள் உள்ளன-ஞானம், பலம், வீர்யம், சக்தி. இவைகளை விட்டு விட்டு நான உன்னை துதித்தேன். அதனால் அவை என் மேல் கோபம் கொள்ளலாம். ஆனாலும் எனக்கு உன் துணை இருப்பதால் நான் பயப்பட வேண்டாம்-ஏனெனில் நீதானே அவைகளுக்கு தலைவி, உன்னை விட்டால் சேதநர்களுக்கு அவை பயன்பெற முடியாதென்று அவைகளுக்கு நண்றாக தெரியும்.எப்படி வேருக்கு நீர் விட்டால் அவை கிளகளுக்கும் போய் சேருமோ அப்படி உன்னை துதித்தால் அது தங்களுக்கும் போய் சேரும் என்று அவைகளுக்கு தெரியும். எப்படி ஒரு அரசியை பாராட்ட்டினால் அவை மக்களுக்கு போய் சேருமோ அப்படி உன் கருணை எனக்கு இருப்பதால் நான் அச்சமில்லாமல் இருக்கலாம்.

R.Jagannathan..

3.

வேங்கடமும். வேங்கடநாதனும்-8


வேங்கடமும். வேங்கடநாதனும்-8

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
உலகம் அளந்த பிரான், பரன்
சென்றுசேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே !

பெருமாள் பரம பதத்தை விட்டு திருமலையில் வந்து ஆசையோடு நிற்கின்றான்.அது தான் நாம் அடையதக்கதுவே. இதை தவிர நம்க்கு வேறு பலன் என்ன வேண்டும்.அந்த மலையை வணங்கினால் துன்பம் தானாக விலகிவிடும். கோவர்த்தன மலையை தூக்கி, பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன். ஊருக்கு எல்லாம் உதவியவன். மாவலியால் கவரப்பட்ட உலகத்தை மீட்டவன். இந்த மலையை வணங்கினாலேயே நம் வினைகள் எல்லாம் நீங்கிவிடும்.                
                                                                           நம் ஆழ்வார்- திருவாய் மொழி.

1. த்ரித்வித சிதசித் ஸ்த்தா ஸ்த்தேம ப்ரவ்ருத்தி நியமிகா
வ்ருஷகிரி விபோ ரிச்சா ஸா த்வம் பரை ரபராஹதா
க்ருபண பரப்ருத் கிங்குர்வாண ப்ரபூத குணாந்த்ரா
வஹஸி கருணே வைசக்ஷண்யம் மதீக்ஷண ஸாஹஸே //

தயா தேவியே மூவகைப்பட்ட சேதன அசேதன ஸ்வரூபத்தையும் இருப்பையும், செயலையும் நியமிப்பவளாய், பிறரால் தடுக்கப்படாதவளும், குற்றேவல் புரிகின்ற பெருமையுள்ள மற்ற குணங்ககளை உடையவளாய், திருமலையில் உள்ள ப்ரபுவின் விருப்பத்தின்படி வடிவாயுள்ள நீ என்னை கடாக்ஷிப்பது என்ற துணிவான செயலை தாங்கி நிற்கின்றாய்.
                                                                                                                                               ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

2. வீடுமின் முற்றவும்
   வீடு செய்து உம் உயிர்
   வீடு உடையானிடை
   வீடு செய்(மி)நே

நம் எல்லோரையும் ஆழ்வார் அழைக்கின்றார்-இறைவனிடம்-- திருவேங்கடத்தானிடம் பக்தி செய்து உய்வு பெறுங்கள்.அவனுக்குகு புறம்பான எதையும் செய்யாதீர்கள். அப்படி செய்துவிட்டு உங்கள்  ஆத்மாவை அவனிடம் சமர்ப்பியுங்கள். அப்படி செய்தால் உங்கள் கவலைகள்  எல்லாம் தீர்ந்துவிடும்.

2. ஜகத் ஜந்ம ஸ்த்தேம ப்ரளய ரசநா கேளி ரஸிக:
விமுக்த்யேந த்வாரம் விகடித கவாடம் ப்ரணயிநாம்
இதி த்வய்யாயத்தம் த்விதய முபதீ க்ருத்ய கருணே
விசுத்தாநாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத: ஸ்துதி பதம் //

தயா தேவியே! உன் நாயகனான திருவேங்கடமுடையானுக்கு இரண்டு குணங்கள் உண்டு.உலகுக்கு காரணமாயிருப்பவன். மோக்ஷம் அளித்தல். இவையே அவனுடைய லீலையாயிருப்பவை. இவை எல்லாம் உன் கருணையால் தான் நடப்பவை.ப்ரப்த்தி பண்ணவனை பகவான் அன்புடனழைகின்றான் இதுவும் உன் கருணையினால் தான்.உன் நாதனுக்கு நீ அளிக்கும் இப்பெருமைகள் பக்தர்களை அவன் பால் ஈர்க்கின்றது. அவனை சரண் அடைகிறார்கள்.

                                                                                                                            திருவாய்மொழி-நம்மாழ்வார்.

2. விவித்ஸா வேதாளீ விகம பரிசுத்sபி ஹ்ருதயே
   படு ப்ரத்யாஹார ப்ரப்ருதி புடபாக ப்ரசகிதா:
   நமந்தஸ் த்வாம் நாராயண் சிகரி கூடஸ்த்த கருணே
   நிருந்த த்வத்  ந்ருபதிஸுத நிதிம் ஜஹதி //

திருவேங்கடமலையில் காட்சி தரும் திருவேங்கடநாதனின் தயா தேவியே! மக்களுக்கு வரும் மண்ணாசை, பெண்ணாசை
முதலிய ஆசைகளுக்கு பெரும் தீனி போடவேண்டும். சில புண்ணியசாலிகளான பெரியோர்கள் உள்ள தூழ்மையோடு பக்தி யோகம் செய்கிறார்கள். ஆனால் அது மிகவும் கடினம் ஆனால் இன்னும் சில பெரியவர்கள் உன்னிடம் ப்ரபத்தி செய்து, சாஸ்த்திரம் மறுத்த செயலை செய்யாது, அப்படி சிறு தவறுகள் செய்தாலும் நீ அதை மன்னித்து அவர்களுக்கு மோக்ஷத்தை தருகிறாய்.
                                                                                                                        ஸ்வாமி தேசிகன் - தயா சதகம்.

3. ஆயர் கொழுந்தாய், அவரால் புடையுண்ணும்
    மாயபிரானை என் மாணிக்கசோதியை
    தூய அமுதை பருகி பருகி என்
    மாய பிறவி மயர்வு அறுத்தேனே //

ஆயர்களுக்கு கொழுந்தானவன்-கோவிந்தன் வெண்ணை களவுண்ட மாயன்,அதற்காக அடியுண்டவன். மாணிக்கம் போல் ஒளி வீசுபவன். அமுதம் போன்றவன் இப்பேற்பட்ட பெருமானை-தாகமுள்ளவன்  தண்ணீரை அள்ளி அள்ளி பருகுவது போல பருகி அநுபவித்து என் அஞ்ஞானத்தை தீர்த்துக்கொண்டேன்.
                                                             நம் ஆழ்வார்- திருவாய்மொழி

ஹிதமிதி ஜகத த்ருஷ்ட்யா க்லுப்தை
ரக்லுப்த பலாந்தரை:
அமதிவிஹிதை ரந்யைர்
தர்மாயிதைச் ச ய்த்ருச்சயா /
பரிணத பஹுச் சத்மா
பத்மாஸஹாய தயே ஸ்வயம்
ப்ரதிசஸி நிஜாபிப்ரேதம் ந:
ப்ரசாம்ய தபத்ரபா //

ஸ்ரீநிவாசனுடைய தயா தேவியே! நன்கு அறிந்து செய்யப்பட்ட புண்யங்களும் ஸங்கல்பிக்கப்படாத வேறு சில புண்யங்களாலும் தற்ச்செயலாக தருமமாக ஆன புண்யங்களாலும் பரிபக்குவமான பல காரணங்களை உள்ளவளாக கொண்ட நீ தானாகவே நாங்கள் விரும்புவதை கொடுத்தஅருள்கிறாய்.

                                                                                                              ஸ்வாமி தேசிகன்- தயா சதகம் //

.