Monday, April 30, 2012

ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 4 ப்ரப்த்தி செய்துகொண்ட ஜீவன் ஜீவன் சரீரத்தை விட்டு வெளியேறியதும் இவனுடைய ஸ்தூல் சரீரம்- அதாவது பதினொன்று த்வாரங்கள் கொன்டது--ப்ரஹ்மரந்தரம் அதையும் சேர்த்து -இது தலையின் வாசல்- அதை திறந்துகொண்டு ப்ரப்ந்நனை புறப்பட செய்கிறான் பகவான்-ஸ்தூல சரீரம் கழிகிறது- ஸூக்ஷ்ம சரீரம் ஆரம்பமாகிறது. அதை வைகுண்டம் போகும் பாதையில் அர்ச்சாதி மார்க்கம் வழியாக அழைத்து செல்லுகிறான். இவன் ஸ்தூல சரீரத்தில் இருந்தபோது இவனிடம் பெற்றுகொண்ட காணிக்கைகளால் மகிழ்ந்த தேவர்கள் இவனை வணங்கி ஸேவித்து செல்லுகிறார்கள். இவனை வழி நடத்தி செல்பவர்கள் ஆதிவாஹீகள்- அவர்களில் முதலில் வருபவன்- அக்னி தேவன். இவனுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து, ஆடல் பாடல்களுடன் அவன் எல்லை வரை கொண்டு சேர்கிறான். பின் சுக்ல, உத்தராயண தேவதைகள் வரிசையாக நின்றுகொண்டு மரியாதை செலுத்துகிறார்கள். அமாநவன்- மின்னலுக்கு தேவதை- இவனை அழைத்துசென்று-வழியில் இந்திரன், வருணன் இவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு ப்ரக்ருதி மண்டலத்தை கடந்து விரஜா நதிக்கரைக்கு வருகிறான். ( அன்பர்களை! இந்த சமயத்தில் ஸ்ரீரங்கத்தை நினைவில் வைத்துகொள்ளுமாறு அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஸ்ரீரங்கம் வேறு-வைகுண்டம் வேறல்ல-காவேரி விரஜா தேயம், வைகுண்டம் ரங்கமந்திரம் என்பார்கள் ) விரஜா நதி எப்போதும் ஒரே விதமாக பகவானின் காலடியில் பெருகி ஓடிக்கொண்டே இருக்கும். இது ஒரு அமுத ஆறு ) இது இரண்டு விபூதிகளுக்கும் எல்லை. ஸம்ஸாரத்திற்கு முடிவு எல்லையாகவும் பரமபதத்திற்கு தொடக்க எல்லையாகவும் அமைந்திருக்கிறது. இந்த நதியை பகவான் ஸங்கல்பித்து தன் மனத்தால் கடக்கிறான் என்பது ச்ருதி சொல்லுகிறது. அதில் மூழ்கி எழுந்தவுடம் அவனுடைய ஸூக்ஷ்ம சரீரம் விலகி- அமாநவன் இவனை தடவிக்கொடுக்க முக்தன் ஆகின்றான். இப்போது இவனும் பகவானும் ஒரே லோகத்தில் இருக்கிறார்கள்-அதாவது வைகுண்ட லோகத்தில். இனி வைகுண்ட லோகத்தில் இவனுக்கு நடக்கும் மரியாதைகளை பார்க்கலாம். அங்கே நித்ய சூரிகள் பகவானிடம் முன் நின்று கை கூப்பி அருளப்பாடு பாடுகிறார்கள். சிலர் பகவானின் திவ்ய மங்கள ரூபத்தை இமை கொட்டாது சேவித்துகொண்டே இருக்கிறார்கள். பகவான் ஐந்நூறு அப்ஸரஸ்குளை இவனை வரவேற்று அழைத்துவரும்படி செய்கிறான். அவர்கள் மாலைகள், மை, வாசனை பொடி, உடைகள் போன்ற உபசார பொருட்களுடன் இவனை அழித்து செல்கிறார்கள். அவனுக்கு வலம்புரி சங்கு, திருச்சின்னம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. நித்ய சூரிகள் இவனுக்கு சிறந்த அலங்காரங்களை செய்வித்து திவ்யம் என்ற மரத்தின் வழியாக, ஸாலஜ்யம் என்ற ஆஸ்தான மண்டபத்தை அடைந்து, பின் இந்திரன், ப்ரஜாபதி என்ற த்வாரபாலகர்களை அணுகுகிறான்.அவர்கள் இன்முகத்தோடு இவனை திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பகவானை காண அநுமதிக்கிறார்கள். அங்கே சபையின் அதிகாரிகளான குமுதர், சண்டர் இவர்கள் இவனை கண்குளிர கடாக்ஷிக்கிறார்கள். விஷ்வக்சேநர் இவனுக்கு அருளப்பாடு சொல்லி கைங்க்கர்யத்தில் கல்ந்து கொள்ள சொல்லுகிறார். அவனும் பெரிய திருவடியை சேவித்து, பூர்வாச்சாரியர்களை அணுகி நன்றியுடன் வணங்கி எம்பெருமானது திவ்ய சிம்ஹாஸனத்தை அணுகுகிறான் அங்கே ஆதிசேஷன் மீது எம்பெருமானையும், பிராட்டிமார்களையும் தரிசனம் செய்கிறான். என்ன ஆனந்தம்! கண்களில் பாஷ்பவாரி சொறிகின்றது பகவானோ-அகில ஹேய கல்யாணகதாந ஸ்வேதர ஸம்ஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப: ! ஸ்வாமிமதாநுரூப ஏகரூப அசிந்த்ய திவ்யாத்புத நித்ய நிரவத்ய ஓளஜ்வல்ய ஸொந்த்தர்ய ஸொகந்த்ய ஸொகுமார்ய லாவந்ய யொவனாதி அநந்தகுணநிதி திவ்யரூப ! ஸ்வாபிவிக அநவதிக அதிசய ஜ்ஞாந பல ஐச்வர்ய வீர்ய சக்தி தேஜ: ஸொசீல்ய வாத்ஸல்ய மார்த்தவ ஆர்ஜ்ஜவ ஸொஹார்த்த ஸாம்ய காருண்ய மாதுர்ய காம்பீர்ய ஓளதார்ய சாதுர்ய ஸ்த்தைர்ய தைர்ய சொர்ய பராக்ரம ஸத்யகாம ஸத்யஸங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞாதி அஸங்கேய கல்யாண குண களொக மஹார்ணவ // ஸ்வோசித விவித விசித்ராநந்த ஆச்சர்ய ப்ஹித்ய நிரவத்ய நிரதிசய ஸுகந்த நிரதிசய ஸுகஸ்பர்ச நிரதிசய ஓஓள்ஜ்வல்ய கிரீட மகுடசூடாவதம்ஸ மகரகுண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தா தாமோதர பந்தந பீதாம்பர காஞ்சீகுண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண:/ ஸ்வாநுரூபா சிந்த்ய சக்தி சங்க்க சக்ர கதா அஸி சார்ங்காதி அஸங்க்யேய நித்ய நிரவத்ய கல்யாண திவ்யாயுத:/ ஸ்வாபிமத நித்ய நிரவத்ய அநுரூப வரூப ரூபமுண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதிகாதிசய அஸங்யேய கல்யாண குணகண ஸ்ரீவல்லப : / கண்ணா உன்னை காண எத்தனை ஜன்மங்கள் கழித்தேன். நான் செய்த பாபங்களுக்காக புழுவாய் பிறந்தேன். நாயாய் அலைந்தேன், பலபிறவிகள் கடந்து மாநிட பிறவி பெற்றேன், மறுபடியும் பிறவியில் விழப்போன என்னை ஆசார்யன் மூலம் சரணாகதி மார்க்கத்தை காண்பித்து இனி பிறவியற்ற நித்ய சூரியாக உன் முன்ணே நிற்க வைத்து கண்குளிர காண வைத்து உன் கல்யாண குணங்களான- ஸொசீல்யம் = பெரியவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றர கலப்பது வாத்ஸல்யம்= பசு எப்படி கன்றுடன் தாயன்பு காட்டுகிறதோ அப்படி மார்த்வம் = தன்னை அண்டியவனின் மனக்கவலையை போக்குவது ஸொஹார்த்தம் = எப்போதும் நன்மையே சிந்திப்பது ஸாம்யம் = ஜாதி மத பேதம் காட்டாது எல்லோருக்கும் ஆச்ரியனாக இருப்பது காருண்யம் = துக்கமடைந்திருப்பவரை பார்த்து இரக்கப்படல் மாதுர்யம் = தன்னை கொல்ல வருபவருடன் கூட இனியனாக இருப்பது காம்பீர்யம் = ஆச்ரிதற்கு செய்யும் பேருதவிகள் வெளியில் தெரியாமல் அருள் பாலிப்பது ஓள்தார்யம் = கைமாறு கருதாது வேண்டியவற்றை அள்ளி கொடுப்பது. சாதுர்யம் = ப்ரதிகூலரையும் அநுகூலராக்கும் சாமர்த்யம் ஸ்தைர்யம் = அடியார்களை ஒருபோதும் கைவிடாதவன் தைர்யம் = எப்பேற்பட்ட எதிரியையும் வென்று தன் பக்கம் இழுத்தல் சௌர்யம் = எப்பேற்பட்ட எதிரியையும் தான் ஒருவனே சமாளிப்பது பராகரமம் = போர்களத்தில் எதிரிகளை அழிப்பது இப்படி அநந்த கோடி கல்யாண குணங்களை அடியவன் நேரில் காண வைத்து கிரீடம் = ஒப்புயர்வற்ற அழகுடையதான கொண்டை, தொப்பாரம், துராய் ஆகிய மூன்று முடிகள் கொண்டது மகர குண்டலம்= மகரவடிவான தோடுகள் க்ரைவேயக = திருகழுத்தில் சாத்துபவை ஹார = திருமார்பில் அணியும் முத்துவடங்கள் கேயூர = தோள்வளைகள் கடக் = முன் கையில் சாத்தும் வளையள்கள் ஸ்ரீவத்ஸ = திருமறு, கௌஸ்துப மாலை, குருமாமணிப்பூண் முக்தாதாம = ஏகாவளி த்ரிஸரம், பஞ்சஸரம் எனும் முக்தாஹாரங்கள் உதரப்ந்தந= - திருவாயிறுபட்டை பீதாமபர = பட்டாடை காஞ்சீகுண = மேல் ப்ட்டாடை நூபுரம் = திருவடி சிலம்பு, யஜ்ஞோபவீதம், கணையாழி இப்படி அலங்கார மேனியாய், காண ஆயிரம் கோடி கண்கள் வேண்டும். உனது அருகில் த்வம், சௌலப்யம், உபாயத்வம், பிரயோஜனம், காருண்யம், பொறுமை, சாந்தம், அநுகூலமாயிருத்தல் போன்ற எண்ணற்ற குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கின்ற ஸ்ரீ மஹாலக்ஷ்மி அதி அத்புதமாக காட்சியளிக்கிறாள். பெரிய பிராட்டிக்கு ஒரு தனி சிறப்பு. எம்பெருமானுக்கு ஏற்ற ஸ்வரூபம், திருமேனி, அவனோடு ஒத்து இருப்பது, அட்யார்களை ரக்ஷித்து காப்பவள். இப்படி பரமபதநாதனை ஸேவித்துக்கொண்டே பாதுகைகளை தாங்கிக்கொண்டிருக்கும் திருவடி பீடம் வரை செல்கிறான். அவரிடம் அவர் திருவடிகளை யாஜிக்கிறான். பெருமாளும் அபார கருணையினால் தன் திருவடியை இவன் தலைமேல் வைத்து பூமாலை அணிவிக்கிறான். அவரை மேலும் காண வேண்டும் என்று அருகில் செல்கிறான். பெருமாளும் தாயாரும் அவனை தன் குழந்தை போல மடியில் வந்து அமரும் உகப்பில் இவனை தன் திருவடியில் சேர்த்துக்கொள்ளுகிறான். இந்த ஆனந்தத்தை அநுபவிக்கும் இவன் எம்பெருமானோடு கலந்து, நித்யசூரிகளிடையே கூடி கலந்து மறூபடியும் பிறவியில்லா ஆனந்தத்தை நிலையாக அநுபவித்துக்கொண்டிருக்கிறான். என்னே! பரந்யாஸத்தின் சிறப்பு! என்னே! பகவான் காட்டிய சுலமான வழி. வாருங்கள் நாம் ஆசாரியரிடம் செல்வோம், இனி கால தாமதம் வேண்டாம். ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே கோபால தேசிக மஹாதேசிகாய நம: ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே // மாடபூசி ஜகன்னாதன்.

Monday, April 23, 2012

ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 3


ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 3 ப்ரப்த்தி, பரந்யாஸம் பகவான் அல்லல் படும் சாதாரண நம் போன்றவர்களுக்கு சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை பெற சுலபமான மருந்து, -ஆசாரியர் மூலம் காட்டும் மார்க்கம்- ப்ரப்த்தி மார்க்கம்.-இதற்கு ஐந்து அங்கங்கள்- மிக எளிதானவை-ஆநுகூல்ய சங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜனம், மஹா விஸ்வாசம், கோப்த்ருத்வ வரணம், கார்ப்பண்யம் என்ற ஐந்து அங்கங்கள். பகவானையே உபாயமாக நிற்கும்படி ப்ரார்த்தித்து, அவனிடமே தன்னை காக்கும் பொறுப்பை ஒரே முறை சம்ர்ப்பிவிப்பது ப்ரப்த்தியாகும். பகவான் இதை ஆசாரியர் மூலம் அணுக சொல்லுகிறார். சிஷ்யன் தன் ஆசாரியரிடம் தன் எண்ணத்தை தெரிவிக்கிறான். ஆசாரியரும் மனம் மகிழ்ந்து அவனை மனைவியோடு ஒரு நல்ல நாளில் இதை செய்விக்கிறார். ப்ரப்த்தி செய்துகொண்டவன் நிலையை இனி பார்க்கலாம்:- கைமுதல் ஒன்றும் இல்லாத சிஷ்யன் தன்னை காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் சம்ர்ப்பித்து ப்ரபத்தி செய்த பின் மறுபடியும் அந்த பயனுக்காக செய்யவேண்டியது ஒன்றும் இல்லை. ப்ரப்த்தியும் ஒருமுறைதான், பகவான் மோக்ஷம் தருவதாக சங்கல்பித்துவிட்டால் அதுவும் ஒறுமுறைதான்.ஒரு தடவை ஆசார்யன் தன் சிஷ்யனை காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் சம்ர்ப்பிவித்துவிட்டால் சிஷ்யன் அந்த பலனுக்காக மறுபடியும் ப்ரப்த்தி செய்யக்கூடாது. ஆசார்யன் செய்த ப்ரப்த்திதான் அவனை காக்கும்-ஒருவேளை சிஷ்யன் மனம் வேறு மார்க்கத்தில் சென்றாலும்- இந்த ப்ரப்த்தி தான் அவனுக்கு பலன் தரும் ( இது என்னுடைய வாழ்க்கையிலேயே கண்கூடாக பார்த்திருக்கிறேன் ) பகவான் எல்லா கர்மங்களுக்கும் சரீரமாக கொண்டு எல்லா சொற்களும் அவனிடமே சேர்ந்து எல்லா தேவதைகளுக்கும் மேற்ப்பட்டவன் என்று வேதம் சொல்லுகிறது. சரணமடைவதற்கு முதல் ஆசார்யன்.ஜீவாத்மா மோக்ஷம் பெறுவதற்கு பகவானே உபாயமாய் நிற்கின்றான். ஆசாரியரிடத்தில் பெற்ற அறிவால் ஜீவன் உன்னையே தாயாகவும், தந்தையாகவும், நண்பனாகவும் உன்னை சரண் அடைந்து பின் மோக்ஷம் என்னும் அழியா செலவத்தை பெறுகிறான்-இந்த ப்ரப்த்தி மூலம். ப்ரப்த்தி நால்வகையானது: 1. ஸ்வநிஷ்டை- விசேஷ ஞானமுடையவர்கள் எம்பெருமானிடம் தாமே ப்ரப்த்தி செய்தல். 2. உக்தி நிஷ்டை: ஆசார்யன் சொல்லும் வாக்கியத்தை தாமும் உச்சரித்தல். 3.ஆசார்ய நிஷ்டை- ஆசார்யன் செய்த ப்ரப்த்தியில் அடங்கியிருத்தல். 4. பாகவத நிஷ்டை: ஆசார்யன் அல்லாத பாகவதன் செய்த ப்ரப்த்தியில் அடங்கியிருத்தல். பக்தி யோகம், ஞான யோகம் இவை மிக கடினமானவை. சிறிது தவறு நேர்ந்தாலும் எதிர்பார்த்த பலன் சித்திக்காது. ப்ரப்த்தி மார்க்கம் மிக எளிதானது. நான்கு ஜாதியினரும் இதை செய்து கொள்ளலாம்.அந்த க்ஷணமே நிறைவேறிவிடுவதால் தடைக ளுக்கும், அவற்றால் வரும் அச்சத்திற்கும் இடமே இல்லை. இதை சற்று விரிவாக பார்க்கலாம். ப்ரப்த்தி செய்துகொண்ட சிஷ்யன் தான் இதுவரை செய்த பாபங்கள் அனைத்தையும் கழித்துவிடுகிறான். பின் அறியாமல் செய்யும் பாபங்கல் ஒட்டமாட்டா.சில தவறுகள் நேர்ந்தாலும் அவை உரிய ப்ராயசித்தங்க்களால் உடனேயே மறைந்துவிடுகின்றன. இவனுக்கு யமனுக்கு வசப்படுதல், நரக வேதனை முதலியவை கிடையாது. தன்னை காக்கும் பொறுப்பை பகவானிடம் ஒப்படைத்துவிட்டதால் பயமில்லாமல் எஞ்சிய நாட்களை கழிக்கலாம். இங்கிருக்கும் நாள் வரை அவன் தன் மனம், வாக்கு, காயம் எல்லாம் பகவானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே செலவிடுகிறான்.சம்ஸார பந்தத்த்லிருந்து விடுதலை பெற்று பகவானிடம் சேரும் நாளை ஆவலோடு எத்ர்பார்த்துகொண்டு-தன்னுடைய நித்ய, நைமித்ய கர்மாக்களை செய்து கொண்டு-பகவானுடைய லீலைகளை காலட்க்ஷேபம் மூலமாகவும் படிப்பதன் மூலமாகவும் எஞ்சிய நாட்களை கழிக்கிறான் . அதோ அந்த நாள் வந்துவிட்டது. இவனை வெளியேற்ற பகவானே உபாயம் செய்கிறான்.வாக்கு, கை, கால், மல்த்வாரம், ஜலத்வாரம் ஆகிய கர்மேந்திரியங்களையும், செவி, வாய், கண், மூக்கு, ஸ்பர்சேந்திரியம் ஆகிய ஜ்ஞாநேந்திரியங்களையும் மனத்தோடு சேர்த்து அதை ப்ராணவாயுவோடு சேர்க்கின்றான். அந்த ப்ராணவாயுவை ஜீவனோடு சேர்க்கின்றான். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அவனுடைய் சரீரத்தில்-பஞ்ச பூதங்களின் ஸூக்ஷ்ம பகுதிகளுடன் சேர்த்து அவனுடைய ஹ்ருதய கமலத்தில் வீற்றிருக்கும் பகவான் தன்னுடன் இவைகளை அணத்துகொண்டு உடலை விட்டு பிரியம் வேதனை, களைப்பு ஒன்றும் இல்லாமல் இட்டு செல்கிறான். இனி வெளியேறிய ஜீவனுக்கு பகவான் செய்யும் விசேஷ உபகாரங்க ளை பார்க்கலாம். மாடபூசி ஜகன்னாதன்.

Saturday, April 21, 2012

சம்ஸார பந்த்திலிருந்து விலகி பக்தி, ப்ரப்த்தி மார்க்கத்தை தேடுதல் மேற்கண்ட அறிவு வந்தவுடன் அவனுக்கு தான் அநுபவிக்கும் பயங்கள் எல்லாம் மறைய தொடங்குகிறது. தான் ஆத்மாவுக்கு செய்த குற்றங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கின்றன. இருந்தாலும் அவனிடம் அனாதிகாலமாக செய்துவந்த பாபங்க்களுக்கு ப்ராய சித்தம் செய்யவில்லையே என்ற பயப்படுகிறான். ஒருவேளை மேற்கண்ட பாபங்களுக்காக தண்டனை கிடைக்குமோ என்று அஞ்சுகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் இதற்கு பரிகாரம் மற்ற தேவதைகளிடம் இல்லை. நாராயணனே தான் உபாயம், அடையவேண்டிய தெய்வம் என்று பகவானிடம் ஓடுகிறான். ஆசார்யர்கள் மூலம் அவனை அடைய தர்ம சாஸ்த்திரத்தில் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க ஆரம்பிக்கிறான். முதலில் கீதையில் சொல்லியபடி நல்ல குணங்களை பற்றிய அறிவை பெறுகிறான். அவைகள் 26. 1.அபயம்: இஷ்ட வஸ்துக்களை பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம், அது அல்லாததினால் ஏற்படும் துக்கம்- அபயம் என்ப்படும். 2.ஸதவஸம்சுத்தி: மனமானது ரஜோ, தாமஸ குனங்களில் சேராது ஸ்தாதிஷ்டமான மார்க்கத்தில் செல்ல வைப்பது-ராக த்வேஷாதிகளை விட்டு திருப்புவது. 3. ஜ்ஞாநயோகஸ்வயஸ்த்திதி:ப்ரக்ருதியை விட்டு பிரிந்திருக்கிற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவது. ஜ்ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம் இவை என்னவென்று அறிகிறான். 4. தானம்: ந்யாயமான முறையில் சம்பாதித்த தனத்தை நல்லோருக்கு கொடுக்கவேண்டிய முறையில் கொடுப்பது. 5. தம: மனதை தகாத முறையில் ப்ரவேஸிக்காதபடி அப்யாஸம் செய்துகொள்வது. 6. யஜ்ய: தேவயஜ்ஞ்ம், பித்ரு யஜ்ஞ்ம், பூத யஜ்ஞம் இவைகளை பகவத் ப்ரீத்யர்த்திற்காக, பலனை எதிர்பாராமல் செய்வது. 6. ஸ்வாத்யாய: கல்யாண குணங்கள் அனைத்தும் கொண்ட பகவானை அவனை ஆராதிக்கும் முறையில் அநுசந்தானம் செய்துகொண்டு வேதாப்யாஸம் செய்துகொண்டு காலத்தை கழிப்பது. 7. தப: ஏகாதசி, த்வாதசி வ்ரதங்களை சாஸ்த்திரத்தில் சொல்லியபடி செய்தல். 8. ஆர்ஜ்வம்: மனம், வாக்கு, சரீரம் இவை ஒத்திருக்கவேண்டும். மனதால் நினைப்பதை அப்படியே பேசவேண்டும்- சாத்வீகமாக. 9. அஹிம்ஸை: யாரையும்- மனிதர், பசு, பக்ஷிகள் உட்பட- துன்பப்படுத்தக்கூடாது. யாருடைய மனமும் நோகக்கூடாது. 10. ஸத்யம்: தான் நேரில் கண்டவற்றை அப்படியே சொல்வது-அது பிறருக்கு நன்மையுடையதாக இருக்கவேண்டும். அது துன்பம் உண்டுபண்ணுமானால் பேசாமல் இருப்பதே மேல். 11. அக்ரோத: பிறருக்கு மனகலக்கம் உண்டுபண்ணாதவை-தனக்கும் சேர்த்து. 12. த்யாக: நன்மைக்கு விரோதமான தன் வஸ்த்துக்களை விட்டுவிடுதல். தன்னுடைய நன்மைக்கு விரோத்மானதையே விட்டுவிடவேண்டும். 13. சாந்தி: கண், காதுகளால்-ரூபம், சப்தம் முதலான விஷயங்களில் ஆசைபடுவதை தடுக்க அப்யாஸம் செய்தல். 14. அபைசுநம்: பிறருக்கு அனர்த்தத்தை உண்டுபண்ணக்கூடிய வார்த்தையை சொல்லாதிருத்தல். 15. தயா: சத்ருக்கள், மித்ரர்கள் இவர்களிடமும், ப்ராணிகளிடமும் அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு இளகுதல், கருணை காட்டுதல். 17.அலோலுப்த்வம்: தனக்கு தகாதவையான சப்தாதி விஷயங்களில் ஆசை இல்லாமை. 18. மார்த்வம்: கடினமான ஸ்வபாவமில்லாமை-அதாவது சாதுக்கள் கிட்ட வந்து பழக கூடியவன். 19. ஹ்ரீ: செய்ய தகாத காரியத்திற்காக வெட்கபடுதல். 20.அசாபலம்: ஆசைபடக்கூடிய வஸ்து அருகில் இருந்தாலும் சஞ்சலமில்லாமல் இருத்தல். 21. தேஜ: துர்ஜனங்கள் தன்னை அவமானப்டுத்தமுடியாமல் விலகி இருத்தல். 22. க்ஷமா: சகிப்புத்தன்மை- பிறர் தன்னை துன்புறுத்தினாலும் அவர்கள்பால் மனம் கலங்காமல் இருத்தல். 23. த்ருதி: பெரிய ஆபத்து வந்தபோதிலும் செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டும் என்று நிச்சியத்தோடு இருத்தல். 24. சௌசம்: பாஹ்யேந்திரியங்கள் ( கண், காது முதலியவைகள் ) சாஸ்த்திரத்தில் சொல்லியபடி நல்ல காரியங்களை செய்யவும், பார்க்கவும், பேசவும் விதமாக வைத்துக்கொள்ளுதல். 25.அத்ரோஹ: அயலார் விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்யாமை. 26. நாதிமாநிதா: கர்வப்பட தகாத இடத்தில் கர்வப்படுதல் ( மேற்படி 26 குணங்களையும் பகவான் அர்ஜுனனுக்கு- பதினாலாம் அத்யாயத்தில்-தைவாஸுர சம்பத்விபாக யோகத்தில்-விளக்குகிறார் ) நம் சிஷ்யன் ஆசாரியர் மூலம் இவைகளை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனால் இவனால் சம்ஸார பந்தத்தை விடமுடியவில்லை- அதற்கும் பகவான்ஆசாரியர் மூலம் ஒரு மார்க்கத்தை காண்பிக்கிறார். சம்ஸாரம் என்ற நோய்க்கு ஒரு மருந்து-அதுதான் ப்ரப்த்தி- மாடபூசி ஜகந்நாதன்

சம்ஸார பந்த்திலிருந்து விலகி பக்தி, ப்ரப்த்தி மார்க்கத்தை தேடுதல்


மேற்கண்ட அறிவு வந்தவுடன் அவனுக்கு தான் அநுபவிக்கும் பயங்கள் எல்லாம் மறைய தொடங்குகிறது. தான் ஆத்மாவுக்கு செய்த குற்றங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கின்றன. இருந்தாலும் அவனிடம் அனாதிகாலமாக செய்துவந்த பாபங்க்களுக்கு ப்ராய சித்தம் செய்யவில்லையே என்ற பயப்படுகிறான். ஒருவேளை மேற்கண்ட பாபங்களுக்காக தண்டனை கிடைக்குமோ என்று அஞ்சுகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் இதற்கு பரிகாரம் மற்ற தேவதைகளிடம் இல்லை. நாராயணனே தான் உபாயம், அடையவேண்டிய தெய்வம் என்று பகவானிடம் ஓடுகிறான். ஆசார்யர்கள் மூலம் அவனை அடைய தர்ம சாஸ்த்திரத்தில் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க ஆரம்பிக்கிறான். 


முதலில் கீதையில் சொல்லியபடி நல்ல குணங்களை பற்றிய அறிவை பெறுகிறான். அவைகள் 26.


 1.அபயம்: இஷ்ட வஸ்துக்களை பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம், அது அல்லாததினால் ஏற்படும் துக்கம்- அபயம் என்ப்படும்.


 2.ஸதவஸம்சுத்தி: மனமானது ரஜோ, தாமஸ குனங்களில் சேராது ஸ்தாதிஷ்டமான மார்க்கத்தில் செல்ல வைப்பது-ராக த்வேஷாதிகளை விட்டு திருப்புவது.


 3. ஜ்ஞாநயோகஸ்வயஸ்த்திதி:ப்ரக்ருதியை விட்டு பிரிந்திருக்கிற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவது. ஜ்ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம் இவை என்னவென்று அறிகிறான்.


 4. தானம்: ந்யாயமான முறையில் சம்பாதித்த தனத்தை நல்லோருக்கு கொடுக்கவேண்டிய முறையில் கொடுப்பது.


 5. தம: மனதை தகாத முறையில் ப்ரவேஸிக்காதபடி அப்யாஸம் செய்துகொள்வது.


 6. யஜ்ய: தேவயஜ்ஞ்ம், பித்ரு யஜ்ஞ்ம், பூத யஜ்ஞம் இவைகளை பகவத் ப்ரீத்யர்த்திற்காக, பலனை எதிர்பாராமல் செய்வது. 6. ஸ்வாத்யாய: கல்யாண குணங்கள் அனைத்தும் கொண்ட பகவானை அவனை ஆராதிக்கும் முறையில் அநுசந்தானம் செய்துகொண்டு வேதாப்யாஸம் செய்துகொண்டு காலத்தை கழிப்பது.


 7. தப: ஏகாதசி, த்வாதசி வ்ரதங்களை சாஸ்த்திரத்தில் சொல்லியபடி செய்தல்.


 8. ஆர்ஜ்வம்: மனம், வாக்கு, சரீரம் இவை ஒத்திருக்கவேண்டும். மனதால் நினைப்பதை அப்படியே பேசவேண்டும்- சாத்வீகமாக.


 9. அஹிம்ஸை: யாரையும்- மனிதர், பசு, பக்ஷிகள் உட்பட- துன்பப்படுத்தக்கூடாது. யாருடைய மனமும் நோகக்கூடாது.


 10. ஸத்யம்: தான் நேரில் கண்டவற்றை அப்படியே சொல்வது-அது பிறருக்கு நன்மையுடையதாக இருக்கவேண்டும். அது துன்பம் உண்டுபண்ணுமானால் பேசாமல் இருப்பதே மேல். 


 11. அக்ரோத: பிறருக்கு மனகலக்கம் உண்டுபண்ணாதவை-தனக்கும் சேர்த்து.


 12. த்யாக: நன்மைக்கு விரோதமான தன் வஸ்த்துக்களை விட்டுவிடுதல். தன்னுடைய நன்மைக்கு விரோத்மானதையே விட்டுவிடவேண்டும்.


 13. சாந்தி: கண், காதுகளால்-ரூபம், சப்தம் முதலான விஷயங்களில் ஆசைபடுவதை தடுக்க அப்யாஸம் செய்தல்.


 14. அபைசுநம்: பிறருக்கு அனர்த்தத்தை உண்டுபண்ணக்கூடிய வார்த்தையை சொல்லாதிருத்தல். 


 15. தயா: சத்ருக்கள், மித்ரர்கள் இவர்களிடமும், ப்ராணிகளிடமும் அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு இளகுதல், கருணை காட்டுதல். 


17.அலோலுப்த்வம்: தனக்கு தகாதவையான சப்தாதி விஷயங்களில் ஆசை இல்லாமை. 


18. மார்த்வம்: கடினமான ஸ்வபாவமில்லாமை-அதாவது சாதுக்கள் கிட்ட வந்து பழக கூடியவன்.


 19. ஹ்ரீ: செய்ய தகாத காரியத்திற்காக வெட்கபடுதல்.


 20.அசாபலம்: ஆசைபடக்கூடிய வஸ்து அருகில் இருந்தாலும் சஞ்சலமில்லாமல் இருத்தல்.


 21. தேஜ: துர்ஜனங்கள் தன்னை அவமானப்டுத்தமுடியாமல் விலகி இருத்தல்.


 22. க்ஷமா: சகிப்புத்தன்மை- பிறர் தன்னை துன்புறுத்தினாலும் அவர்கள்பால் மனம் கலங்காமல் இருத்தல்.


 23. த்ருதி: பெரிய ஆபத்து வந்தபோதிலும் செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டும் என்று நிச்சியத்தோடு இருத்தல்.


 24. சௌசம்: பாஹ்யேந்திரியங்கள் ( கண், காது முதலியவைகள் ) சாஸ்த்திரத்தில் சொல்லியபடி நல்ல காரியங்களை செய்யவும், பார்க்கவும், பேசவும் விதமாக வைத்துக்கொள்ளுதல்.


 25.அத்ரோஹ: அயலார் விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்யாமை.


 26. நாதிமாநிதா: கர்வப்பட தகாத இடத்தில் கர்வப்படுதல் 


 ( மேற்படி 26 குணங்களையும் பகவான் அர்ஜுனனுக்கு- பதினாலாம் அத்யாயத்தில்-தைவாஸுர சம்பத்விபாக யோகத்தில்-விளக்குகிறார் ) 


நம் சிஷ்யன் ஆசாரியர் மூலம் இவைகளை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனால் இவனால் சம்ஸார பந்தத்தை விடமுடியவில்லை- அதற்கும் பகவான்ஆசாரியர் மூலம் ஒரு மார்க்கத்தை காண்பிக்கிறார். சம்ஸாரம் என்ற நோய்க்கு ஒரு மருந்து-அதுதான் ப்ரப்த்தி-


 மாடபூசி ஜகந்நாதன்

Tuesday, April 17, 2012

ஜீவனுக்கு பெருமாள் செய்யும் உபகாரங்கள் ஆசாரியரிடம் பரந்யாஸம் செய்துகொண்டவனின் நிலை

ஜீவனுக்கு பெருமாள் செய்யும் உபகாரங்கள்

ஆசாரியரிடம் பரந்யாஸம் செய்துகொண்டவனின் நிலை

சில காலங்ககளுக்கு முன்பு அடியேனுடைய பிளாக்கில் மரணத்திற்கு பிறகு ஜீவன் எங்கே போகிறது என்பதை விளக்கியிருந்தேன். அவை பொதுவானவை. அதற்கு பலர் பாராட்டி எனக்கு எழுதியிருந்தார்கள். 50-வயதை தாண்டிய பல பெரியவர்கள்- தனக்கு அடிக்கடி மரண பயம் வந்துகொண்டே இருக்கிறது- இதற்கு என்ன செய்யலாம் என்று எனக்கு எழுதி இருந்தார்கள். இதே நிலையில் தான் நானும் சில வருஷங்களுக்கு முன் இருந்தேன். ஆனால் நம் பௌண்டரீகபுரம் ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிக ஸ்வாமியிடம் பரந்யாஸம் செய்துகொண்ட பின் அந்த பயம் போய்விட்டது. இது எதனால் என்று சற்று பார்க்கலாம்.

சாதாரணமாக பெருமாள் கோயிலில் கர்பகிரஹத்திற்கு போகும் முன் நாம் 8-அல்லது 9- படிகளை தாண்டுகிறோம். பிறகு பெருமாளின் தெய்வ மங்கள அர்ச்சா மூர்த்தியை கண் குளிர சேவிக்கிறோம்.ஸ்வாமி தேசிகன் சில்லரை ரஹஸ்யங்கள் என்ற தலைப்பிலும் பரம பத சோபானம் என்ற ஸ்லோகங்களின் மூலம் நம்க்கு ஆசாரியன் மூலம் பகவானிடம் சரணாகதி செய்து கொண்ட ஜீவன் அடையும் உபகாரங்களை பற்றி விளக்கியிருக்கிறார்கள்.

அடியேனும் பல உபதேசங்களை கேட்டு இருக்கிறேன். அவைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை. மேற்படி 8- அல்லது 9- படிகள் மோக்ஷமாகிர உயர்ந்த ஸ்தானத்திற்கு பரந்யாஸம் செய்துகொண்ட ஜீவனுக்கு பகவான் செய்யும் உப்காரங்கள்.

படி-1

1. நமக்கு ஆசாரியரிடம் சென்று உபதேசம் செய்துகொள்ள எண்ணத்தை தோற்றுவித்தல்.
2. அதற்கு தகுதி பெற சிஷ்யன் செய்ய வேண்டிய கடமைகள்.
3. ஆசாரிய உபதேசத்தால் சிஷ்யன் பெறும் அறிவு.
4. சரணாகதியின் அங்கங்கள் திருமந்திர விளக்கம்

படி -2

ஆசாரியரிடம் உபதேசம் பெற்ற சிஷ்யன் இப்போது சிந்திக்க ஆரம்பித்தல்.

படி-3

சிஷ்யனிடம் காணும் மாறுதல்கள்.

படி-4

பழைய நிலை கழிதல்

படி -5

ப்ரப்த்தியை பற்றி விவரமாக அறிந்துகொள்ளுதல். சம்ஸார பந்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுதல், ஜபம் செய்தல்.

படி-6.

இங்கிருக்கும் நாள்வரை சிஷ்யன் செய்யவேண்டியது.

படி-7

அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்.

படி-8

ஸ்ரீவைகுண்டத்தை அடைதல்.

படி- 9

பெருமாளை நேருக்கு நேராக காணுதல்.

இந்த 9- படிகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்


படி-1

ஆசாரியரிடம் உபதேசம்.

இந்த ஜீவன் தாயின் கர்ப்ப வாசத்தில் இருக்கும்போது அநுபவிக்கும் வேதனை சொல்லமுடியாது. உடலை சுருக்கிக்கொண்டு பல மாதம் அவஸ்தை படுகிறான். அப்போது அவனுக்கு பூர்வ ஜன்ம வாஸனை நன்றாக தெரியும். மல மூத்ராதிகளில் உழன்று நரக வேதனை அநுபவிக்கிறான். பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வருகிறான். அப்போது அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனை, தான் அநுபவித்த வேதனைகள் எல்லாவற்றையும் பகவான் அப்போது மறக்கடித்துவிடுகிறான்.

பால்ய பருவம், கௌமார பருவம் இவைகளை முறையே இனிதாக கழிக்கிறான். அப்போது ஏற்படும் பாவ
புண்யங்களை பகவான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.யௌவனப்பருவம் ஆரம்பமாகிறது இந்த ஜீவனுக்கு. அப்போது அவனுக்கு உலகம் புறிய ஆரம்பிக்கிறது. கூடவே பகவான் காம, க்ரோத, மத, மாச்சர்யம், தமோ குணம், ரஜோகுணம்,சாத்வீகம், ஆசை, மோஹம், விருப்பு, வெறுப்பு, த்வேஷம் இவைகள் அனைத்தையும் அவனுக்கு காண்பிக்கிறார்.இதிலிருந்து தான் அவனது பாவ, புண்ய மூட்டைகள் தொடங்குகிறது.

இந்த வயதில் தான் அவனது சம்ஸார வாழ்க்கையும் தொடங்குகிறது. நல்ல வளமான நிலம்-பாவ பயிர்களை நடுவதற்கு. இது தொடர்ந்துகொண்டே அவனை 50-வயதுவரையில் இழுத்துக்கொண்டே செல்கிறது. அவன் சேர்க்கும் பாவங்கள் இரும்பு விலங்கு, சேர்க்கும் புண்யங்கள் தங்க விலங்கு. இதை இவன் அறியான். திருந்தி வர பல சந்தர்ப்பங்களை பகவான் ஏற்படுத்தி கொடுக்கிறான்- ஆனால் இந்த ஜீவன் மயக்கத்திலேயே இருப்பதால் அவைகளை பயன்படுத்திகொள்ள தவறுகிறான்.

அடிபட்டு, அடிபட்டு கடைசியில் பகவானிடம் சென்று இறைஞ்சுகிறான்.ஆனால் இன்னும் ஞானம் வரவில்லை. அவன் கேட்பதோ சில்லரை விஷயங்கள்- அழ்கான மனைவி, நல்ல உத்தியோகம், கை நிறைய காசு இப்படியாக் எல்லாமே லௌகீக விஷயங்கள். சந்தோஷம் வந்தால் ஆனந்தம், துக்கம் வந்தால் தளர்வு, உபாதைகள், வியாதிகள் இப்படியாக அநுபவிக்கிறான். அப்போது தான் அவன் பகவானை சிந்திக்க ஆரம்பிக்கிறான்-இப்படி மாற்றியும் சொல்லலாம்- பகவான் அவன் பேரில் இரக்கம் கொண்டு இந்த ஜீவனை கடைதேற்ற சங்கல்பித்துக்கொள்கிறான்.

முதலில் இவனுக்கு ஆகார்ய சம்பந்தம் கிடைக்க வழி செய்கிறான். தினம் அவன் கோயிலுக்கு செல்லும்போது பல பெரியவர்கள் சொல்லும் உபந்யாஸங்களை கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்க முயலுகிறான். தான் எந்த பரம்பரையிலிருந்து வந்தவன் என்று அறிகிறான். அதை சார்ந்த பரம்பரையின் குருவை தேடுகிறான். தயக்கதுடனேயே அவரை அணுகுகிறான். அவன் அதிர்ஷ்டம்- அவர் நல்ல ஆசாரியர்-வேதங்களை கற்றுணர்ந்த பெரியவர், ஆசார சீலர், நல்ல பண்டிதர், தாராள மனசு. தவறு செய்பவர்களை திருத்தி தன் வசம் இழுப்பவர்- இவரை காண்பித்ததே பகவான் இந்த ஜீவனுக்கு செய்த பேருபகாரம்.

படி-2

ஆசாரியரிடம் உபதேசம் பெற்று சிந்தித்தல்

அவரிடம் அடிக்கடி போகிறான்- அவர் உபதேசங்களை கேட்கிறான்.புராண, இதிஹாஸங்கள்
புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான்- ராம கிருஷ்ணாதி கதைகளை கேட்கிறான். ஆசாரம், அநுஷ்டானம் முதலியவைகளை கேட்டு தெரிந்து கடைபிடிக்க ஆரம்பிக்கிறான்- இதுவும் ப்கவத் சம்பந்த்தாலேயே- அவனுக்கு ஞானம் வளர ஆரம்பிக்கிறது. ஆனால் பக்குவம் வரவில்லை.

தன்னுடைய பழங்கால நடவடிக்கை எல்லாம் அவனுக்கு வருகிறது .செய்த பாபங்களோ அநேகம். செய்த புண்யங்களோ சிலவே. இவைகளை நினைத்து மனம் தளர்கிறான்.அதனால் அநுபவித்த கஷ்டங்கள் எத்தனையோ! நஷ்டங்கள் ஏராளம்.பல லக்ஷக்கணாக்கான மக்களோடு தானும் ஒருவனாகி ஒரு மூலையில் உட்கார்ந்து சிந்திக்கும்போது அவனுக்கு நல்ல காலம் வருவதை-பகவானின் கரூணை உள்ளம் இனி இவனை கரையேற்ற வேண்டும் என்று திருவுள்ளம் கொள்கிறான். ஆசார்ய சம்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறான்.

தனக்கு நாராயணனை தவிர வேறு கதியில்லை என்று தனக்குள்ளே சங்கல்பித்துக்கொள்கிறான். இனி தான் பழைய வழிக்கு திரும்பமாட்டேன்.ஹரி என்ற திரு நாமம் அவனுக்குள்ளே ரீங்காரம் இட ஆரம்பித்திருக்கிறது. இனி பழைய நிலையை மறந்து சத் சங்கம், தியானம், காலட்க்ஷேபம், பகவத் ஆராதனம் போன்றவற்றில் இறங்குகிறான். விவேகம் பிறக்கிறது. ரஜோ, தாமஸ குணங்கள் விலகி, ஸத்வ குணம் மேலோங்க ஆரம்பிக்கிறது. சாத்வீகம் வளர்கிறது. இவையெல்லாம் ஆசார்ய சம்பந்தத்தினாலும் பகவானின் கருணையாலும் என்று உணர்கிறான்.

படி-3

சிஷ்யனிடம் காணும் மாறுதல்கள்

அவனுடைய் அசுர தன்மை விலக ஆரம்பித்திருக்கிறது. முன்பு வேகம், வேகம், பரபரப்பு, எதிலும் அவசரம் போன்ற குணங்கள் மாற தொடங்கி, நிதானம், பொறுமை மெதுவாக பேசும் தன்மை போன்ற சாத்வீக குணங்கள் வளர்கின்றன. அதிக சந்தோஷம், அதிக துக்கம் என்று இல்லாம்ல் பழைய நிலையை முழுதுமாக மறக்கிறான். பார்ப்பவர்கள் இவனுடைய மாறுதல்களை கண்கூடாக பார்க்கிறார்கள்.

பகவானிடமனது லயிக்க ஆரம்பிக்கிறது. சினிமா மோகம் மறைகிறது. ஆசையை தூண்டும் கதைகள்.நாவலகள் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டான். புராண இதிஹாஸங்களை படிக்க தொடங்குகிறான். ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு, ஸ்வாமி தேசிகனின் ஸ்லோகங்க்ள் என்று ஆழ்வார்களின் ஸூக்திகளும், ஆசார்யர்களின் அறிவுரைகளும் அவன் மனதில் ப்திய ஆரம்பிக்கிறது.

ஆசாரமே இன்னது என்று தெரியாத காலம் போய் 12- திருமண் விசேஷ காலங்களிலும், ஆசாரியரை தரிசிக்கும் போதும் தரிக்கிறான். வெளியே சென்று வந்ததும், அல்ப சங்கை சமயத்திலும் கை கால்களை அலம்பி உள்ளே நுழைகிறான். முக்கால சந்தியாவந்தனம் நிரந்தரமாகி விட்டது. மேஜை சாப்பாடு போய் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறான்.

பித்ருக்களின் தர்ப்பணங்களை ஒழுங்காக செய்ய தொடங்குகிறான். அமாவாசை தர்ப்பணம் செய்யாதவன் தவறாமல் செய்ய தொடங்குகிறான். எதற்கும் எதிர்வாதம், குதற்க அர்த்தம் கண்டுபிடிப்பவன், அமைதியாக சொல்வதை காது கொடுத்து கேட்கிறான்.

இவனுடைய மாறுதல்களை மேலும் பார்ப்போம்.கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவை தவிர்கிறான். தன்னுடைய குருபரம்பரையை தெரிந்து கொண்டு அவர்கள் தனியங்களை தினமும் சொல்ல தொடங்குகிறான். தந்தம் சுகங்களே துக்கத்தில் கொண்டுபோய்விடுகின்றன என்று அறிகிறான். அது வெறுப்புக்குறியது என்று உணர்கிறான்

இதனால் மற்ற பலன்களில் ஆசையில்லாமல் மனதை பகவானிடம் திருப்புகிறான்.இவனுக்கு ஜீவாத்மா, பரமாத்மா, சரீரம் இவைகளைபற்றிய விவேகம் ஏற்பட்டு, பகவானுக்கு தான் அடிமை என்று உணர்கிறான், பழைய நிலையை உணர்ந்து பாபங்களை செய்யாமல் விலகி நிற்கிறான். ஸம்ஸார பந்தத்திலிருந்து மனதை திருப்பி பகவானிடம் லயிக்க ஆரம்பிக்கிறான். இவை எல்லாம் பகவான் ஆசார்ய சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொடுத்த நன்மையால் தான்.

R.Jagannathan.







</b>