Saturday, March 26, 2011

அத்தகிரியும் அருளாளனும்-2

அத்தகிரியும் அருளாளனும்-2

புணர்க்குமயனாம் அழிக்குமரனாம் புணர்த்ததன் உந்தியோடு ஆகத்தும் மன்னி
புணர்த்த திருவாகித் தன்மார்வில்தான்சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே //

பிரமனை தோற்றுவித்த தனது நாபிகமலத்துடன் தன் மேனியில் நிலைபேறு பெற்ற பிரமன் எம்பெருமானின் சரீரமானவன். சிவனும் அவனுக்கு சரீரம் ஆனவன். அவன் மார்பிலே சேர்ந்துள்ள பெரிய பிராட்டியும் தானே தனக்கு தகுதியான செயல்களை பெற்றவனான என் தேவாதிராஜனை எல்லாவிடத்திலும் கண்கூடாக பார்க்கலாம்.
எட்டாம் திருவாய்மொழி-2-ம் பத்து.

1. மத்யே விரிஞ்சி சிவயோர் விஹிதாவதார:
க்யாதோsஸி தத்ஸமதயா ததிதம் ந சித்ரம் /
மாயா வசேந மகராதி சரீரிணம் த்வாம்
தாநேவ பச்யதி கரீச யதேஷ லோக: //
தேவாதிராஜனே! பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவில் அவதாரம் செய்த நீ அவர்களுக்கும் மேலாக அழைக்கப்படுகிறாய்.இது ஒரு ஆச்சர்யம் இல்லை. உன் சங்கல்பத்தால் நீ பல அவதாரம் செய்ததை பக்தர்கள் அந்த அவதாரமாகவே கொண்டாடுகிறார்கள்-உதாரணம்-மச்ச, கூர்மம்.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.
2. தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தியவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே //

எம்பெருமானின் திருவடிகளில் சேர்ந்த தீர்த்தமும்,சாத்தப்பெற்ர திருத்துழாய் மாலையும் பரம சிவன் தலியில் கண்டதை அர்ஜுனனே பார்த்தான். அதனால் நாராயணனே பரதெவதை என்று நிச்சியம் செய்தான். சிவனிடம் அர்ஜுனன் சிவனிடம் பாஸுபதாஸ்ரம் வேண்டி உபாஸனை செய்ய விரும்பினான். அவன்மேல் இரக்கம் கொண்ட கண்ணன் தீர்த்தத்தையும் திருத்துழாயையும் தன் காலடியில் சமர்ப்பிக்குமாறு சொன்னான். மறுகணம் அவை சிவன் முடியில் அர்ஜுனன் பார்த்தான். இதைவிட நாராயணனின் பரத்துவத்தை பேச யாரால் முடியும். அப்பேற்ப்பட்ட ஹரி அத்தகிரியில் தேவாதி ராஜனாக பக்தர்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறான்.

திருவாய் மொழி

2. வரத தவ விலோகயந்தி தந்யா:
மரகத பூதர மாத்ருகாயமாணம்
வ்யபகத பரிகர்ம வாரவாணம்
ம்ருகதமத பங்க விச்கேஷ நீலமங்கம் //
வரம்தரும் பேரருளாளப்பெருமானே! உன்னை சேவிக்க ஏகாந்த சமயங்கள் உண்டு. அப்போது திருவாபரணம், மாலைகள் எல்லாம் கழற்றி வைக்க நேரிடும். அப்போது உன் இயற்கை அழகை சேவிக்க- அநுபவிக்க இயலும். அப்போது இதை பார்த்த்துதான் மரகத் மலை படைக்கப்பட்டதோ என்று தோன்றும். கஸ்தூரியை குழம்பாக்கி அதை உன் நீல திருமேனியில் சாத்துவதால் அந்த நீல நிறம் மேலும் சிறப்பாகி ஜ்வலிக்கும். இதை எல்லோராலும் காணமுடியாது. சிலபேர்-உன் அந்தரங்க கைங்கர்யம் சில புண்யசாலிகள் மட்டும் தான் காணமுடிகிறது.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

3. நாவாயில் உண்டே; நமோ நாராயணா என்று
ஓவா துரைக்கும் உரையுண்டே-மூவாத
மாக்கதிகண் கெல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிகண் செல்லும்திறம்?

வரதனை துதிப்பதற்கு கருவியான நாக்கு, தேடவேண்டாத வாய், திகட்டாத -நமோ நாராயணா என்ற சொல் இவ்வளவும், மேலும் மோக்ஷத்தை அடைய பக்தி, ப்ரபத்தி இவை யாவும் நம்முடையே இருக்க, அதைவிட்டு ஐம்புலங்களும் இட்டு செல்லும் தீய வழிகளிலேயே செல்லும் பலரை என்னவென்று சொல்ல.
முதல் திருவந்தாதி.

3. யாவந் ந பச்யதி நிகாமம் அமாஷணோ மாம்
ப்ரு பங்க பீஷண கராள முக: க்ருதாந்த:
தாவந் பதந்து மயி தே பகவந் தயாளோ:
உந்நித்ர பத்ம கலிகா மதுரா: கடாக்ஷம் //

பேரருளாளனே! நீயோ கருணை கடல். மற்ற எல்லா குணங்களும் அதற்கு துணை நிற்கின்றன. ஆகையால் நீ நிச்சியம் என் வேண்டுகோளை நிறை செய்வாய். மரண காலத்தில் என் உயிரை கவர யமன் வருவான். அவனை பார்க்க எனக்கு பயம். அதை நினைத்தால் எப்போதே என் உடம்பு நடுங்குகிறது. அவன் பார்வை என் மீது விழுவதற்கு முன்பே-உன் பார்வை என் மீது விழுந்து என்னை கண் குளிர கடாக்ஷிக்க வேண்டும். அப்போது என் பயம் நீங்கிவிடும், அவனும் என்பக்கம் வரமாட்டான்.

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

பேரளுளானனின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கும்- அவனை சரணாகதி அடைந்தால். பகவத் ராமானுஜர் அவரையே அராதித்து கிணறு கைங்கர்யம் செய்து பெரும் பேறு பெற்றார். ஸ்வாமி தேசிகர் தன்னை அர்ப்பணித்து முடிவில்லா இன்பம் பெற்றார். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் அமுதன்.தினமும் அவன் நாமத்தை ஒருதரம் சொன்னாலே போதும் வாரி வழங்க காத்துக்கொண்டிருக்கிறான். நாம் தான் சரண் அடைய வேண்டும்.

R.Jagannathan.

No comments:

Post a Comment