Tuesday, January 18, 2011

திருவேங்கடமும்-திருவேங்கடநாதனும்-9

திருவேங்கடமும்-திருவேங்கடநாதனும்-9

1. தண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா! கடல் கடைந்தாய் உன்சுழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணிகொண்டாய் சாமறே //

பகைவர்கள் மகிழ்ந்து சிரிக்கவும் நல்ல உறவினர்கள் மனமுறுகி வருந்தவும் எண்ணற்ற துன்பங்களை தரும் இவ்வுலகின் தன்மை தான் என்ன! அருளாலனே! பாற்கடலை கடந்து அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனே!உனது திருவடிதாமரையை பற்றி உன்னிடம் சேருவதற்கு எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும்.
நம் ஆழ்வார்--திருவாய் மொழி

1.அநிதாஜுஷா மந்தர்மூலேsப்
யபாய பரிப்லவே
க்ருதவி தநகா விச்சித்யைஷாம்
க்ருபே யமவச்யதாம்
ப்ரபதந பல ப்ரத்யாதேச
ப்ரஸ்ங்க விவர்ஹ்தஜிதம்
ப்ரதிவிதி முபாதத்ஸே ஸார்த்தம்
வ்ருஷாத்ரி ஹிதைஷிணா //


தயா தேவியே! வேறு எவரையும் நாடாத ப்ரபந்நருக்கு அறிந்து செய்யும் பாபங்களுக்கு அதன் சம்பந்தம் நேர்ந்தபோதிலும், நீ இந்த சேதநருக்கு யம்னிடம் அகப்படுதலை தடுத்து திருவேங்கடமுடையானினிடம் சேர்த்து ப்ரபத்தியின் மோக்ஷ பயனை வாங்கி தருகிறாய்-என்னே உன் கருணை!

2.களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
வளைவாய் நேமிப் படையாய் குடந்தை கிடந்த மாமாயா
தளரா உடலம், எனது ஆவி சரிந்து போகும் போது
இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்துப் போத இயசை நீயே//

பஞ்ச ஆயுதங்களையும் தாங்கி நிற்பவனே! நீ என் துன்பங்களை போக்கினாலும் சரி, போக்காவிட்டாலும் சரி செய்வதும் சரிரி, தவிர்வதும் சரி இவை உன் விருப்பங்கள். நீயே எனக்கு உபாயமாக ஆகிறாய். உன்னையன்றி வே3று எவரும் எனக்கு துணையாக உடையேன் அல்லன். உடல் தளர்ந்து என் உடலும் என்னைவிட்டு நீங்கும் காலம் நெருங்குகிறது. இந்த கடைசீ காலத்தில் தளராமல் உன் க் ஒருமிக்க பிடித்து போகும்படி நீயே அருள் செய்யவேண்டும்.

2. ப்ரபூத விபுத த்வியஷத் பரண கிந்ந விச்வம்பரா-
பராபநயநச் சலாத் த்வமதார்ய லக்ஷ்மீ தரம்
நிராக்ருதவதீ தயே நிகம ஸௌத தீப ச்ரியா
விபச்சி தவிகீதயா ஜகதி கீதயா Sந்தம் தம: //

தயாதேவியே! அசுரர்களால் ஏற்ப்பட்ட துயரை தாங்கி நிற்ருகும் பூமாதேவியின் பாரத்தை துடைக்க நீயே ஸ்ரீநிவாசனை கண்ணனாக அவதரிக்க செய்து கம்ஸ, சிசுபால, கால நேமி போன்றவர்களை வதம் செய்து நாம் உய்வதற்காக ஐந்தாவது வேதத்தை அளித்து அஞ்ஞான இருளை போக்க பேருதவி செய்திருக்கிறாய்.

3. பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு
திறங்கள் காட்டியிட்டு செய்து போன மாயங்களும்
நிறம்- தன் ஊடுபுக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற; இச்
சிறந்த வான் சுடரே! உன்னை என்று கொல் சேர்வதுவே//

கர்மங்களுக்கு கட்டுப்படாத நீ அடியார்களை காப்பதற்காக இப்பூமியில் வந்து அவதரித்து தாய் தந்தயரின் காற்கட்டு அறுகும்படி பிறந்தாய்-இதை நினைத்தால் என் நெஞ்சம் உருகுகிறது. எங்கோ வந்து பிறந்து எங்கோ வளர்ந்தாய். ஒரு இடையனாக வளர்ந்தாய்.பூதனை வதம், சகடாசுரன் வதம் செய்து நீ யசோதைக்கு ஆனந்தம் ஊட்டி பகவர் வயிற்றில் நின்ற நெடுமாலே! பாரதப்போரில் பாண்டவர் பக்கம் வெற்றியை நாட்டி, எல்லோரும் உய்ய கீதயை காட்டி செய்த மாயங்களை-என்ன! என்று சொல்வேன்-இவை யாவும் என் நெஞ்சம் புகுந்து என்னுடைய உயிரை உருக்கி நின்று நின்று உண்கின்றன. இப்படி நிலையை போக்கி உன்னை வந்தடையும் நாள் என்றோ? //
நம் ஆழ்வார்- திருவாய் மொழி

3. நிஸ்ஸீம வைபவ ஜூஷாம் மிஷதாம் குணாநாம்
ஸ்தோதுர் தயே வ்ருஷ கிரீச குணேஸ்வரீம் த்வாம்
தைரேவ நுநமவசை ரபிநந்திதம் மே
ஸத்யாபிதம் தவ பலா தகுதோபயத்வம் //

தயா தேவியே! திருவேங்கடநாதனுக்கு பல குணங்கள் உள்ளன-ஞானம், பலம், வீர்யம், சக்தி. இவைகளை விட்டு விட்டு நான உன்னை துதித்தேன். அதனால் அவை என் மேல் கோபம் கொள்ளலாம். ஆனாலும் எனக்கு உன் துணை இருப்பதால் நான் பயப்பட வேண்டாம்-ஏனெனில் நீதானே அவைகளுக்கு தலைவி, உன்னை விட்டால் சேதநர்களுக்கு அவை பயன்பெற முடியாதென்று அவைகளுக்கு நண்றாக தெரியும்.எப்படி வேருக்கு நீர் விட்டால் அவை கிளகளுக்கும் போய் சேருமோ அப்படி உன்னை துதித்தால் அது தங்களுக்கும் போய் சேரும் என்று அவைகளுக்கு தெரியும். எப்படி ஒரு அரசியை பாராட்ட்டினால் அவை மக்களுக்கு போய் சேருமோ அப்படி உன் கருணை எனக்கு இருப்பதால் நான் அச்சமில்லாமல் இருக்கலாம்.

R.Jagannathan..

3.

No comments:

Post a Comment