Tuesday, January 18, 2011

வேங்கடமும். வேங்கடநாதனும்-8


வேங்கடமும். வேங்கடநாதனும்-8

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
உலகம் அளந்த பிரான், பரன்
சென்றுசேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே !

பெருமாள் பரம பதத்தை விட்டு திருமலையில் வந்து ஆசையோடு நிற்கின்றான்.அது தான் நாம் அடையதக்கதுவே. இதை தவிர நம்க்கு வேறு பலன் என்ன வேண்டும்.அந்த மலையை வணங்கினால் துன்பம் தானாக விலகிவிடும். கோவர்த்தன மலையை தூக்கி, பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன். ஊருக்கு எல்லாம் உதவியவன். மாவலியால் கவரப்பட்ட உலகத்தை மீட்டவன். இந்த மலையை வணங்கினாலேயே நம் வினைகள் எல்லாம் நீங்கிவிடும்.                
                                                                           நம் ஆழ்வார்- திருவாய் மொழி.

1. த்ரித்வித சிதசித் ஸ்த்தா ஸ்த்தேம ப்ரவ்ருத்தி நியமிகா
வ்ருஷகிரி விபோ ரிச்சா ஸா த்வம் பரை ரபராஹதா
க்ருபண பரப்ருத் கிங்குர்வாண ப்ரபூத குணாந்த்ரா
வஹஸி கருணே வைசக்ஷண்யம் மதீக்ஷண ஸாஹஸே //

தயா தேவியே மூவகைப்பட்ட சேதன அசேதன ஸ்வரூபத்தையும் இருப்பையும், செயலையும் நியமிப்பவளாய், பிறரால் தடுக்கப்படாதவளும், குற்றேவல் புரிகின்ற பெருமையுள்ள மற்ற குணங்ககளை உடையவளாய், திருமலையில் உள்ள ப்ரபுவின் விருப்பத்தின்படி வடிவாயுள்ள நீ என்னை கடாக்ஷிப்பது என்ற துணிவான செயலை தாங்கி நிற்கின்றாய்.
                                                                                                                                               ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

2. வீடுமின் முற்றவும்
   வீடு செய்து உம் உயிர்
   வீடு உடையானிடை
   வீடு செய்(மி)நே

நம் எல்லோரையும் ஆழ்வார் அழைக்கின்றார்-இறைவனிடம்-- திருவேங்கடத்தானிடம் பக்தி செய்து உய்வு பெறுங்கள்.அவனுக்குகு புறம்பான எதையும் செய்யாதீர்கள். அப்படி செய்துவிட்டு உங்கள்  ஆத்மாவை அவனிடம் சமர்ப்பியுங்கள். அப்படி செய்தால் உங்கள் கவலைகள்  எல்லாம் தீர்ந்துவிடும்.

2. ஜகத் ஜந்ம ஸ்த்தேம ப்ரளய ரசநா கேளி ரஸிக:
விமுக்த்யேந த்வாரம் விகடித கவாடம் ப்ரணயிநாம்
இதி த்வய்யாயத்தம் த்விதய முபதீ க்ருத்ய கருணே
விசுத்தாநாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத: ஸ்துதி பதம் //

தயா தேவியே! உன் நாயகனான திருவேங்கடமுடையானுக்கு இரண்டு குணங்கள் உண்டு.உலகுக்கு காரணமாயிருப்பவன். மோக்ஷம் அளித்தல். இவையே அவனுடைய லீலையாயிருப்பவை. இவை எல்லாம் உன் கருணையால் தான் நடப்பவை.ப்ரப்த்தி பண்ணவனை பகவான் அன்புடனழைகின்றான் இதுவும் உன் கருணையினால் தான்.உன் நாதனுக்கு நீ அளிக்கும் இப்பெருமைகள் பக்தர்களை அவன் பால் ஈர்க்கின்றது. அவனை சரண் அடைகிறார்கள்.

                                                                                                                            திருவாய்மொழி-நம்மாழ்வார்.

2. விவித்ஸா வேதாளீ விகம பரிசுத்sபி ஹ்ருதயே
   படு ப்ரத்யாஹார ப்ரப்ருதி புடபாக ப்ரசகிதா:
   நமந்தஸ் த்வாம் நாராயண் சிகரி கூடஸ்த்த கருணே
   நிருந்த த்வத்  ந்ருபதிஸுத நிதிம் ஜஹதி //

திருவேங்கடமலையில் காட்சி தரும் திருவேங்கடநாதனின் தயா தேவியே! மக்களுக்கு வரும் மண்ணாசை, பெண்ணாசை
முதலிய ஆசைகளுக்கு பெரும் தீனி போடவேண்டும். சில புண்ணியசாலிகளான பெரியோர்கள் உள்ள தூழ்மையோடு பக்தி யோகம் செய்கிறார்கள். ஆனால் அது மிகவும் கடினம் ஆனால் இன்னும் சில பெரியவர்கள் உன்னிடம் ப்ரபத்தி செய்து, சாஸ்த்திரம் மறுத்த செயலை செய்யாது, அப்படி சிறு தவறுகள் செய்தாலும் நீ அதை மன்னித்து அவர்களுக்கு மோக்ஷத்தை தருகிறாய்.
                                                                                                                        ஸ்வாமி தேசிகன் - தயா சதகம்.

3. ஆயர் கொழுந்தாய், அவரால் புடையுண்ணும்
    மாயபிரானை என் மாணிக்கசோதியை
    தூய அமுதை பருகி பருகி என்
    மாய பிறவி மயர்வு அறுத்தேனே //

ஆயர்களுக்கு கொழுந்தானவன்-கோவிந்தன் வெண்ணை களவுண்ட மாயன்,அதற்காக அடியுண்டவன். மாணிக்கம் போல் ஒளி வீசுபவன். அமுதம் போன்றவன் இப்பேற்பட்ட பெருமானை-தாகமுள்ளவன்  தண்ணீரை அள்ளி அள்ளி பருகுவது போல பருகி அநுபவித்து என் அஞ்ஞானத்தை தீர்த்துக்கொண்டேன்.
                                                             நம் ஆழ்வார்- திருவாய்மொழி

ஹிதமிதி ஜகத த்ருஷ்ட்யா க்லுப்தை
ரக்லுப்த பலாந்தரை:
அமதிவிஹிதை ரந்யைர்
தர்மாயிதைச் ச ய்த்ருச்சயா /
பரிணத பஹுச் சத்மா
பத்மாஸஹாய தயே ஸ்வயம்
ப்ரதிசஸி நிஜாபிப்ரேதம் ந:
ப்ரசாம்ய தபத்ரபா //

ஸ்ரீநிவாசனுடைய தயா தேவியே! நன்கு அறிந்து செய்யப்பட்ட புண்யங்களும் ஸங்கல்பிக்கப்படாத வேறு சில புண்யங்களாலும் தற்ச்செயலாக தருமமாக ஆன புண்யங்களாலும் பரிபக்குவமான பல காரணங்களை உள்ளவளாக கொண்ட நீ தானாகவே நாங்கள் விரும்புவதை கொடுத்தஅருள்கிறாய்.

                                                                                                              ஸ்வாமி தேசிகன்- தயா சதகம் //

.


















No comments:

Post a Comment