Monday, January 24, 2011

வேங்கடமும், வேங்கடநாதனும்-10

வேங்கடமும், வேங்கடநாதனும்-10

1. ஆயர் கொழுந்தாய்! அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை, என் மாணிக்க சோதியை
தூய அமுதை பருகி பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே.

ஆயர்களுக்கேல்லாம் கொழுந்து போன்றவன், வெண்ணை களவு முத்ஹலிய விளையாட்டுகளால் கட்டுண்டவன், மாணிக்கம், தூய்மையான அமுதம் போன்றவன். இத்தகைய மாணிக்கத்தை, தாகம் உள்ளவன் தண்ணீரை பருகி பருகி அநுபவிப்பது போல அநுபவித்தேன், இதனால் மாயபிறவி காரணமாக வரும் பயத்தை அறுத்துக்கொண்டேன்.

நம்மாழ்வார்- திருவாய்மொழி.

1. வேதாந்த தேசிக பதே விநிவேச்ய பாலம்
தேவோ தயாசதக மேத தவாதயந்
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத: //

வேங்கடநாதனான எம்பெருமான், சிறுவனாகிய அடியேனை வேதாந்தாசார்யன் என்ற ஸ்தானத்தில் அமறச்செய்து விளையாட்டாக வீணையை கொடுத்து இந்த தயா சதகத்தை மீட்டச்செய்தான்-என்னே அவன் தயை.
ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

2. செவிகளால் ஆரநின்கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப்பண்- தேன் உறைப்பத்துற்று
புவியின்மேல் பொன்நெடும் சக்கிரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் என் ஆவியே //

திருவேங்கடா! என் உயிரானது செவிகள் வயறு நிறையும்படிஉன் புகழ்வடிவான கனியென்னும் நாமங்களை அந்த அந்த காலங்ககளுக்கேற்ப பண்ணிலே தோய்த்து- அரசகுமாரர்கள் நல்ல பழங்களை தேனிலே தோய்த்து உண்ணுவது போன்று- என் செவி அநுபவிக்க ஆசைப்படுகிறது. இந்த அநுபவத்தை நீ தான் எனக்கு தரவேண்டும். பசித்தவனுக்கு பசித்தவுடனேயே சோறு கிடைத்தாற்போல்.சக்கிரத்தை தரித்தவன் நீ உன் புகழை என் செவிகள் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். உன் அருள் என்னிடம் தானாக வரும் வரை என் ஆவி இருக்காது. ஆகையால் இப்பொழுதே அந்த அநுபவத்தை எனக்கு தந்தருள
வேண்டுகிறேன்.
நம் ஆழ்வார் - திருவாய்மொழி

2. அத்யாபி தத் வ்ருஷ கிரீச தயே பவத்யாம்
ஆரம்ப மாத்ர மநிதம் ப்ரதம ஸ்துதீநாம்
ஸந்தர்சித ஸவ பர நிர்வஹணா ஸஹேதா:
மந்தஸ்ய ஸாஹஸ மிதம் த்வயி வந்திநோ மே //

திருவேங்கட நாதனின் தயா தேவியே! ஆதிகாலம் முதல் வேதங்கள் உன்னை புகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் சிறிது தூரமும் செல்லாமல் அப்படியே நிற்கின்றன. இத்தகைய உன்னை சிற்றரிவே கொண்ட அடியேன் நூறு ஸ்லோகங்களால் பாட வரைவகுத்து துதித்ததாய் பாவனை செய்கிறேன். என்ன மடமை இது. இது உன்னிடம் நான் செய்த பெரிய அபராதம். வரையறுக்க முடியாதவன் அல்லவா நீ! ஆனால் எம்பெருமானுக்கு செய்யும் அபராதங்களை அவன் பொறுத்தருளுமாறு நீ தான் செய்கின்றாய். எனக்காக பரிந்து பேசும் உனக்கு நான் தெரியாமல் செய்யும் அபராதத்தை நீ தான் பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

3. சூழ்ந்து, அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும்பாழே! ஓ
சூழ்ந்து, அதனில் பெரியபர நல்மலர்ச் சோதீ! ஓ!
சூழ்ந்து, அதனில் பெரிய சுடர்ஞான இன்பமே! ஓ!
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூந்தாயே //

எல்லா திக்குகளிலும் பரந்து அழிவின்றி நித்தியமாய் இருக்கிற மூலப்பகுதிக்கு தலைவனாய், அதனை நியமிப்பவனாய் இருப்பவனே! மூலப்பகுதியை காட்டிலும் பெரியதாய் விகாரமின்றி சிறந்ததாய் மலர்ந்த ஒளி உருவமான ஆத்மாவிற்கும் ஆத்மா ஆனவனே! இவ்விரண்டிற்கும் காட்டிலும் பெரியதாய் சகல கல்யாண குணங்களால் சுற்றிவிட்டு பிரகாசிக்கும் ஞான ஆனந்த வடிவுடையவனே! இவ்மூன்று தத்துவங்களைக்காட்டிலும் பெரியதாய் வளர்ந்து என் ஆசை, அவ்வாசையை சிறிது என்று சொல்லும்படி அதனிலும் பெரிய உன் காதலை காட்டிவந்து கலந்தாயே! திருவேங்கடா!

நம் ஆழ்வார்- திருவாய்மொழி

3. அநவதி மதிக்ருத்ய ஸ்ரீநிவாஸாநுகம்பாம்
அவிதத விஷயத்வாத் விச்வ மவ்ரீடயந்தீ
விவித குசல நீவீ வேங்கடேச ப்ரஸூதா
ஸ்துதிரிய மநவத்யா சோபதே ஸத்த்வ பாஜாம் //

ஸ்ரீனிவாஸனுடைய கருணை எல்லையற்றது. வேங்ககடேசனது வழியாய் தோன்றிய இந்த நூறு ஸ்லோகங்களும் சகல புருஷார்த்தங்களையும் கொடுக்கவல்லது-இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, இவை அனைத்தும் உண்மையே . சொற் குற்றம், பொருட்குற்றம் யாதும் இல்லாது உயர்ந்து விளங்கும் இந்த ஸ்தோத்ரம்வ் ஸதவ குணம், அறம், தர்மம், பொருள், இன்பம் முடிவில் அவனிடமே இட்டு செல்லும்.

ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

R.Jagannathan.

No comments:

Post a Comment