Sunday, March 25, 2012

ஸ்ரீ பௌண்டரீகபுரம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபாலதேசிக மஹாதேசிகன்

நம் ஸ்வாமிகள்

ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம்:

ஸ்ரீமதே கோபாலதேசிக மஹாதேசிகாய நம:

ஸ்ரீ பௌண்டரீகபுரம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபாலதேசிக மஹாதேசிகன்




சமீபத்தில் நம் ஆசார்யன் ஸ்ரீமத் கோபாலதேசிக மஹா தேசிகஸ்வாமி திருநாட்டை அலங்கரித்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் எனது மனது மிகவும் சஞ்சலப்பட்டது. என் மனம் பின்னோக்கி 1990 ம் வருஷம் நினைவுக்கு வந்தது. 1990 ம் வருஷம் மே மாதம் தான் நான் முதன் முதலில் ஸ்வாமியை தெண்ட்ன் சமர்ப்பிக்க சென்றேன். என் தாயார் தான் என்னை அழைத்து சென்றார்.கூடவே என் மனைவியும் என் தம்பி ஸ்ரீதானும் வந்தார்கள். என் சஷ்டி அப்த பூர்த்தி முடிந்த கையோடு அவரை தரிசிக்க சென்றோம்

அதுவரையில் நான் லௌகீக வாழ்க்கையில் கால்த்தை போக்கிவிட்டேன். வெளி நாடு, உள் நாடு என்று வேலக்காக முழு நேரத்தையும் செலவழித்து வந்தேன். எனக்கு அதுவரையில் ஆசாரம், அநுஷ்டானம் எதுவும் தெரியாது. என் மனைவி ஓரளவு அநுஷ்டித்து வந்தாள்- அது அவள் சிறுவயதிலிருந்தேகற்றுக்கொண்டது.

என் தாயாரை ஸ்வாமிக்கு நன்றாக தெரியும். திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிக்கு பூர்வாஸ்ரமத்தில் தமையன் முறையாகும் என் தாயார். என் தாயாரின் குடும்பம் நல்ல வைதிக குடும்பம் என்பதும் ஸ்வாமிக்கு நன்கு தெரியும். என் தம்பியையும் அவருக்கு நன்றாக தெரியும்-முசிரியில் பழக்கம்.

ஸ்வாமிகள் என் தாயாரை என்னைப்பற்றி கேட்டார். நான் மலேஷியாவில் வேலை பார்த்த முதல் எல்லாவற்றையும் விவரமாக சொன்னாள். ஸ்வாமிகள் என்னை பார்த்து- சந்தியாவந்தனம் மூன்று வேளையும் பண்ணுகிறாயா? என்றுகேட்டார். நான் சற்று தயங்கினேன். ஸ்வாமிகள் புரிந்து கொண்டு என் மனைவியை பார்த்து இனிமேல் காலையில் காபி கொடுக்கும்போது சந்தியாவந்தன்ம் பண்ணிவிட்டு வந்தால் தான் கொடு.

அன்று முதல் இன்று வரை முக்கால சந்தியாவந்தனம் நிரந்தரமாகிவிட்டது எவ்வளவு சுலபமாக என்னை திருத்திவிட்டார். அந்த நாளை என்னால் மறக்க முடியாது. என்னை அறியாமலேயே அவரிடம் எனக்கு மரியாதை கலந்த பயம், ஒரு ஆகர்ஷண சக்தி அவர்பால் ஏற்ப்பட்டது.

அதன் பின் என் தாயார் காலமாகிவிட்டார், 1994-ல் என் தகப்பனாரும் காலமாகிவிட்டார். அதுவரையில் நான் முழு மூச்சில் வேலை பார்த்துவிட்டு இனி நாம் ஆன்மீகத்தில் மனதை செலுத்தவேண்டும். என்று சங்கல்பம் செய்துகொண்டேன். என் மனைவிக்கோ சிறு வயது முதல் அரங்க்ன் மீது தீராத பக்தி. கல்யாணம் ஆகும் வரை தினமும் ரங்கனை சேவிக்காமல் ஒரு நாளும் இருந்த்தில்லை. ஸ்லோகங்கள் எல்லாம் நன்றாக தெரியும்.தவறாமல் தினமும் சொல்லிவிட்டு தான் வேறு காரியம். அவளுக்கு சிலகாலம் ஸ்ரீரங்கத்தில் தங்கி ரங்கனை மறுபடியும் சேவிக்க வேண்டும் என்று ஆசை

இதற்கு தோதாக நான் ஸ்ரீரங்கத்தில் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டு வைத்திருந்தேன். பந்துக்கள் எல்லோரும் திருச்சியில் இருப்பதால் கடைசியில் அங்கு போய்விடலாம் என்று ஒரு எண்ணம்.

அது வரையில் எனக்கு ஸ்ரீனிவாஸன் தான் கைகண்ட தெய்வம் வேறு எவரையும் பார்த்ததுமில்லை, ஈடுபாடும் இல்லை-என்னை மிக கஷ்டமான நிலையிலிருந்து கை தூக்கிவிட்டவர் திருப்பதி வெங்கடாஜலபதி. எனக்கு அவரிடம் ஆறாத பக்தி. ஆனால் என்னவோ தெரியவில்லை நான் ஸ்ரீரங்கத்தில் கொஞ்ச காலம் வாசம் செய்யவேண்டும் என்று ஒரு ஆர்வம் இருந்தது. அதற்கு 1995-ல் தான் காலம் கை கூடி வந்தது.

எனக்கு ஸ்ரீனிவாசன் ஒரு விஷயத்தை நன்றாக விளக்கி காட்டினான். தான் வேறு அல்ல, அரங்கன் வேறு அல்ல, பேரருளாளன் வேறு அல்ல ஆகையால் தாரளமாக அரங்கனை சேவி அவன் அருள் உனக்கு கிட்டும் என்று விடை கொடுத்து என்னை ஸ்ரீரங்கத்திற்க்கு அநுப்பிவித்தான். இது 1994 - அக்டோபரில் நடந்தது. 2 வருட காலம் இருக்கலாம் என்று கிளம்பிய அடியேனை 14- வருஷ காலம் அரங்கன் தன்னிடம் இருத்திக்கொண்டுவிட்டான்.

இந்த 14- வருஷ காலம் என் வாழ்க்கையில் பொன்னான காலம். ஸ்வாமியை போய் முதலில் தெண்டன் சம்ர்ப்பித்தேன். விவரங்களை சொன்னேன். ஸ்வாமியும் அநுக்கிரகித்தாயிற்று. அடிகடி ஆச்ரமத்திற்கு வா- காலட்க்ஷேபங்களை கேள் என்று சொன்னார். அதுவரையில் லௌகிகத்தையே கண்ட எனக்கு இது ஒரு திருப்பு முனை.

ஸ்வாமியிடம் சொல்லிவிட்டேனே தவிர எனக்கு உள்ளூர ஒரு பயம்- ஆசாரம் ஒன்றும் அறியாததால் ஸ்வாமியை தெண்டன் சம்ர்பிக்கும் போது ஏதாவது அபசாரம் செய்துவிடிவேனோ என்ற பயம். ஸ்வாமியின் கருணா கடாட்சம், கணிந்த பார்வை, ச்கஜமாக பழகும் போக்கு எல்லாம் என்னுடைய பயத்தை போக்கியது.

அவரை தெண்டன் சமர்ப்பிக்கும் போது அவரையே பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த திருமுகத்தில் தான் எத்தனை சாந்தம்-எளிமையான தோற்றம்-படோடாபம் இல்லாத அமரிக்கையான தோற்றம்-மனதில் உள்ள எல்லா கவலைகளும் அவரை பார்த்த மாத்திரத்தில் போய்விடும்-ப்ரிதி பலன் கருதாத அனுக்ரஹம். என் பிள்ளைகளை பற்றி விசாரிப்பார். பெரிய பையன் டாக்டர்- எல்லா வசதிகளும் அவன் ஆஸ்பத்திரியில் உண்டோ? என்று ஆர்வமாக கேட்பார். சின்ன பையனை பற்றி கேட்பார்-அவன் த்யாரிக்கும் கை கடியாரத்தை பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மக்ழ்ச்சி.

பெண்ணை பற்றி கேட்பார். அவள் அமெரிக்காவில் இருப்பதை கேட்டு அங்கு உள்ள விவரத்தை ஆர்வமுடன் கேட்பார். நீ அங்கு போனாயோ? ஆசார அநுஷ்டானத்தை எங்கு சென்றாலும் விடாதே என்றுசொல்வார்.

ஒரு தடவை அவர் ஆடியோ கேசட்டில் பதிவு செய்த-யதிராஜ சப்த்தையை- சி.டியில் பதிவு செய்து அவரிடம் சம்ர்பித்தேன். அவர் அநுக்ரஹம் எனக்கு கிட்டியது என் பாக்கியம். கடைசியாக நான் ஸ்ரீரங்கத்தை விட்டு பெங்களூருக்கு நிரந்தரமாக மாறப்போவதை அவரிடம் சென்று விடை பெற்று கொள்ள சென்றேன். ஒரு ஐந்து நிமிஷம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு பெங்களூரில் நம் ஆச்ரமம் உருவாகிகொண்டிருக்கிறது. அங்கு போய்விட்டு வா என்று சொன்னார்.

நான் அவரிடம் 2007- பரந்யாசம் செய்து கொண்ட நாளை என்றும் மறக்கமுடியாது. முதலில் அவரிடம் சன்று என் அபிலாஷையை சொன்னேன். அடுத்த புதன் கிழமை வா அப்படியே உன் தம்பி. தம்பி ஆம்படையாளையும் அழைத்துவா என்று விடை கொடுத்தார். என் மனைவிக்கு தம்பி ஆம்படையாளிடம் ரொம்ப பாசம். அவள் உடம்பு சரியில்லை எப்படியாவது ஸ்வாமியிடம் பரந்யாசம் செய்துவித்துவிடவேண்டும் என்று அவளுக்கு ஆசை.

புதன் கிழமை- சங்கல்பம் செய்து கொண்டு கொள்ளிடத்திற்கு சென்று 27 முறை ஸ்நானம் செய்து அச்ரமத்திற்கு திரும்பும்போது என் ஸ்கூட்டர் கவிழ்ந்து எனக்கும் என் தம்பிக்கும் நல்ல அடி இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இது என்ன் சோதனை என்று ஸ்வாமிகளை மனதார வேண்டினோம். என்ன ஆச்சர்யம்-இரத்தம் நின்று விட்டது.

சுமார் 9.30 மணிக்கு ஸ்வாமிகள் எங்களை உள்ளே அழைத்தார். எங்கள் மனது ஒருமுகமாக ஸ்வாமியின் பால் ஈர்க்கப்பட்டது. அடுத்த 2-ம்ணி நேரம் நாங்கள் எங்களை மற்ந்தோம். ஸ்வாமிகளிடம் தெண்டன் சர்ப்பிவித்துவிட்டு கை கூப்பி நின்று கொண்டிருந்தோம். ஸ்வாமிகள் எங்களை அவர் நித்ய ஆராதனம் செய்யும் மணி மண்டபத்துக்கு அழைத்து சென்றார். எங்களை அதற்கு சற்று வெளியே இருக்க செய்து எங்களிடம் தான் பெருமாளிடம் ப்ரார்த்தனை செய்துவிட்டு வரும் வரை சாஷ்டாங்க நமஸ்காரம் ச்ய்துகொண்டே இருங்கள், அது முடியாதவர்கள் நாராயணாய நம்: என்று ப்ரார்த்திதுகொண்டே இருங்கள் என்று சொல்லிவிட்டு சாளக்கிராம மண்டபத்தை மந்திரங்கள் சொல்லிக்கொண்டே ப்ரதக்ஷிணம் செய்து கொண்டே இருந்தார். சுமார் 1- மணி நேரம் பகவானிடத்தில் எங்களுக்காக பரிந்து பேசி எங்கள் சரணாகதியை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தார்.

அவர் வயது அப்போது 87 இருக்கும் அந்த வயதிலும் எவ்வளவு பரிவு-சிஷ்யர்களிடத்தில். எங்கள் பாப மூட்டைகளை தொலைப்பதற்காக எத்துனை ப்ரதக்ஷணம் பகவானை. எங்கள் சிந்தையெல்லாம் இப்படிப்ப்ட்ட ஒரு ஆசாரியரை எங்களுக்கு அளித்த பகவானுடைய கருணை, அளவிடமுடியாத்து-அசங்கேய கல்யாண குணங்கள் நிரம்பியவன், காருண்யன், பரம தயாளன். நாங்கள் ஸ்வாமியையே பார்த்துக்கொண்டிருந்தோம்-அவர் முகத்தில் ஒரு தனி தேஜஸ், ஒரு த்ருப்தி, சாந்தம்- எங்களை பகவானிடம் சரணாகதி அடைய செய்துவிட்ட ஆத்ம திருப்தி.

பிறகு எங்களை அவர் அறைக்கு அழைத்துபோய் ஒரு அரை மணி நேரம் -ப்ரபத்தியை பற்றியும் அதன் அங்கங்களை பற்றியும் விளக்கினார். இனி நாங்கள் செய்யவேண்டியதை பற்றி சொன்னார். தினமும் ஜபம் செய்யுங்கள் என்று ஜப புஸ்தகத்தை தந்தார். பூண்டு, வெங்காயம் இவைகளை சாப்பிடக்கூடாது, நாராயணனை தவிர வேறு தெய்வங்களை உபாஸிக்கக்கூடாது, ஆசார, அநுஷ்டானத்தை சிரத்தையாக் செய்துவரவேண்டும் என்று சொல்லிவிட்டு எங்களை சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று விடை கொடுத்தார்.

இந்த நாளை எங்களால் மறக்க முடியாது. எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. அன்று முதல் இன்று வரை நாங்கள் அவருடைய அறிவுரையை கடைபிடித்து வருகிறோம். அவருடைய ஆசியினால் வாழ்க்கை படகு இனிதே ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பேற்ப்ப்ட்ட ஒரு ஆசாரியரை நம்க்கு அளித்த அரங்கன் திவ்ய தம்பதிகளுக்கு கோடாணு கோடி சாஷ்டாங்க நமஸ்காரம்.

சாந்தம் தவழும் அவர் திருமுகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். .பௌண்டரீகபுச்ர ஆஸ்ரமம் ஒரு சீல புருஷரை இழந்துவிட்டது. 30 வருஷம் அதை தாங்கி ஒரு மகத்தான நிலையில் நிறுத்திவைத்திருக்கிறார். அவருடையை சேவையை வார்த்தைகளால் அளவிடமுடியாத்து. அது ஒரு பொன்னால காலம். இம்மாதிரி ஆசார்யன் யுகத்திற்கு ஒரு தடவை தான் அவதரிப்பார் போலும்.

ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம:

ஸ்ரீமதே கோபாலதேசிகாய மஹாதேசிகாயநம:

அடியேன் தாஸன் மாடபூசி ஜெகன்னாதன்.

No comments:

Post a Comment