Tuesday, April 17, 2012

ஜீவனுக்கு பெருமாள் செய்யும் உபகாரங்கள் ஆசாரியரிடம் பரந்யாஸம் செய்துகொண்டவனின் நிலை

ஜீவனுக்கு பெருமாள் செய்யும் உபகாரங்கள்

ஆசாரியரிடம் பரந்யாஸம் செய்துகொண்டவனின் நிலை

சில காலங்ககளுக்கு முன்பு அடியேனுடைய பிளாக்கில் மரணத்திற்கு பிறகு ஜீவன் எங்கே போகிறது என்பதை விளக்கியிருந்தேன். அவை பொதுவானவை. அதற்கு பலர் பாராட்டி எனக்கு எழுதியிருந்தார்கள். 50-வயதை தாண்டிய பல பெரியவர்கள்- தனக்கு அடிக்கடி மரண பயம் வந்துகொண்டே இருக்கிறது- இதற்கு என்ன செய்யலாம் என்று எனக்கு எழுதி இருந்தார்கள். இதே நிலையில் தான் நானும் சில வருஷங்களுக்கு முன் இருந்தேன். ஆனால் நம் பௌண்டரீகபுரம் ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிக ஸ்வாமியிடம் பரந்யாஸம் செய்துகொண்ட பின் அந்த பயம் போய்விட்டது. இது எதனால் என்று சற்று பார்க்கலாம்.

சாதாரணமாக பெருமாள் கோயிலில் கர்பகிரஹத்திற்கு போகும் முன் நாம் 8-அல்லது 9- படிகளை தாண்டுகிறோம். பிறகு பெருமாளின் தெய்வ மங்கள அர்ச்சா மூர்த்தியை கண் குளிர சேவிக்கிறோம்.ஸ்வாமி தேசிகன் சில்லரை ரஹஸ்யங்கள் என்ற தலைப்பிலும் பரம பத சோபானம் என்ற ஸ்லோகங்களின் மூலம் நம்க்கு ஆசாரியன் மூலம் பகவானிடம் சரணாகதி செய்து கொண்ட ஜீவன் அடையும் உபகாரங்களை பற்றி விளக்கியிருக்கிறார்கள்.

அடியேனும் பல உபதேசங்களை கேட்டு இருக்கிறேன். அவைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை. மேற்படி 8- அல்லது 9- படிகள் மோக்ஷமாகிர உயர்ந்த ஸ்தானத்திற்கு பரந்யாஸம் செய்துகொண்ட ஜீவனுக்கு பகவான் செய்யும் உப்காரங்கள்.

படி-1

1. நமக்கு ஆசாரியரிடம் சென்று உபதேசம் செய்துகொள்ள எண்ணத்தை தோற்றுவித்தல்.
2. அதற்கு தகுதி பெற சிஷ்யன் செய்ய வேண்டிய கடமைகள்.
3. ஆசாரிய உபதேசத்தால் சிஷ்யன் பெறும் அறிவு.
4. சரணாகதியின் அங்கங்கள் திருமந்திர விளக்கம்

படி -2

ஆசாரியரிடம் உபதேசம் பெற்ற சிஷ்யன் இப்போது சிந்திக்க ஆரம்பித்தல்.

படி-3

சிஷ்யனிடம் காணும் மாறுதல்கள்.

படி-4

பழைய நிலை கழிதல்

படி -5

ப்ரப்த்தியை பற்றி விவரமாக அறிந்துகொள்ளுதல். சம்ஸார பந்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுதல், ஜபம் செய்தல்.

படி-6.

இங்கிருக்கும் நாள்வரை சிஷ்யன் செய்யவேண்டியது.

படி-7

அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்.

படி-8

ஸ்ரீவைகுண்டத்தை அடைதல்.

படி- 9

பெருமாளை நேருக்கு நேராக காணுதல்.

இந்த 9- படிகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்


படி-1

ஆசாரியரிடம் உபதேசம்.

இந்த ஜீவன் தாயின் கர்ப்ப வாசத்தில் இருக்கும்போது அநுபவிக்கும் வேதனை சொல்லமுடியாது. உடலை சுருக்கிக்கொண்டு பல மாதம் அவஸ்தை படுகிறான். அப்போது அவனுக்கு பூர்வ ஜன்ம வாஸனை நன்றாக தெரியும். மல மூத்ராதிகளில் உழன்று நரக வேதனை அநுபவிக்கிறான். பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வருகிறான். அப்போது அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனை, தான் அநுபவித்த வேதனைகள் எல்லாவற்றையும் பகவான் அப்போது மறக்கடித்துவிடுகிறான்.

பால்ய பருவம், கௌமார பருவம் இவைகளை முறையே இனிதாக கழிக்கிறான். அப்போது ஏற்படும் பாவ
புண்யங்களை பகவான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.யௌவனப்பருவம் ஆரம்பமாகிறது இந்த ஜீவனுக்கு. அப்போது அவனுக்கு உலகம் புறிய ஆரம்பிக்கிறது. கூடவே பகவான் காம, க்ரோத, மத, மாச்சர்யம், தமோ குணம், ரஜோகுணம்,சாத்வீகம், ஆசை, மோஹம், விருப்பு, வெறுப்பு, த்வேஷம் இவைகள் அனைத்தையும் அவனுக்கு காண்பிக்கிறார்.இதிலிருந்து தான் அவனது பாவ, புண்ய மூட்டைகள் தொடங்குகிறது.

இந்த வயதில் தான் அவனது சம்ஸார வாழ்க்கையும் தொடங்குகிறது. நல்ல வளமான நிலம்-பாவ பயிர்களை நடுவதற்கு. இது தொடர்ந்துகொண்டே அவனை 50-வயதுவரையில் இழுத்துக்கொண்டே செல்கிறது. அவன் சேர்க்கும் பாவங்கள் இரும்பு விலங்கு, சேர்க்கும் புண்யங்கள் தங்க விலங்கு. இதை இவன் அறியான். திருந்தி வர பல சந்தர்ப்பங்களை பகவான் ஏற்படுத்தி கொடுக்கிறான்- ஆனால் இந்த ஜீவன் மயக்கத்திலேயே இருப்பதால் அவைகளை பயன்படுத்திகொள்ள தவறுகிறான்.

அடிபட்டு, அடிபட்டு கடைசியில் பகவானிடம் சென்று இறைஞ்சுகிறான்.ஆனால் இன்னும் ஞானம் வரவில்லை. அவன் கேட்பதோ சில்லரை விஷயங்கள்- அழ்கான மனைவி, நல்ல உத்தியோகம், கை நிறைய காசு இப்படியாக் எல்லாமே லௌகீக விஷயங்கள். சந்தோஷம் வந்தால் ஆனந்தம், துக்கம் வந்தால் தளர்வு, உபாதைகள், வியாதிகள் இப்படியாக அநுபவிக்கிறான். அப்போது தான் அவன் பகவானை சிந்திக்க ஆரம்பிக்கிறான்-இப்படி மாற்றியும் சொல்லலாம்- பகவான் அவன் பேரில் இரக்கம் கொண்டு இந்த ஜீவனை கடைதேற்ற சங்கல்பித்துக்கொள்கிறான்.

முதலில் இவனுக்கு ஆகார்ய சம்பந்தம் கிடைக்க வழி செய்கிறான். தினம் அவன் கோயிலுக்கு செல்லும்போது பல பெரியவர்கள் சொல்லும் உபந்யாஸங்களை கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்க முயலுகிறான். தான் எந்த பரம்பரையிலிருந்து வந்தவன் என்று அறிகிறான். அதை சார்ந்த பரம்பரையின் குருவை தேடுகிறான். தயக்கதுடனேயே அவரை அணுகுகிறான். அவன் அதிர்ஷ்டம்- அவர் நல்ல ஆசாரியர்-வேதங்களை கற்றுணர்ந்த பெரியவர், ஆசார சீலர், நல்ல பண்டிதர், தாராள மனசு. தவறு செய்பவர்களை திருத்தி தன் வசம் இழுப்பவர்- இவரை காண்பித்ததே பகவான் இந்த ஜீவனுக்கு செய்த பேருபகாரம்.

படி-2

ஆசாரியரிடம் உபதேசம் பெற்று சிந்தித்தல்

அவரிடம் அடிக்கடி போகிறான்- அவர் உபதேசங்களை கேட்கிறான்.புராண, இதிஹாஸங்கள்
புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான்- ராம கிருஷ்ணாதி கதைகளை கேட்கிறான். ஆசாரம், அநுஷ்டானம் முதலியவைகளை கேட்டு தெரிந்து கடைபிடிக்க ஆரம்பிக்கிறான்- இதுவும் ப்கவத் சம்பந்த்தாலேயே- அவனுக்கு ஞானம் வளர ஆரம்பிக்கிறது. ஆனால் பக்குவம் வரவில்லை.

தன்னுடைய பழங்கால நடவடிக்கை எல்லாம் அவனுக்கு வருகிறது .செய்த பாபங்களோ அநேகம். செய்த புண்யங்களோ சிலவே. இவைகளை நினைத்து மனம் தளர்கிறான்.அதனால் அநுபவித்த கஷ்டங்கள் எத்தனையோ! நஷ்டங்கள் ஏராளம்.பல லக்ஷக்கணாக்கான மக்களோடு தானும் ஒருவனாகி ஒரு மூலையில் உட்கார்ந்து சிந்திக்கும்போது அவனுக்கு நல்ல காலம் வருவதை-பகவானின் கரூணை உள்ளம் இனி இவனை கரையேற்ற வேண்டும் என்று திருவுள்ளம் கொள்கிறான். ஆசார்ய சம்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறான்.

தனக்கு நாராயணனை தவிர வேறு கதியில்லை என்று தனக்குள்ளே சங்கல்பித்துக்கொள்கிறான். இனி தான் பழைய வழிக்கு திரும்பமாட்டேன்.ஹரி என்ற திரு நாமம் அவனுக்குள்ளே ரீங்காரம் இட ஆரம்பித்திருக்கிறது. இனி பழைய நிலையை மறந்து சத் சங்கம், தியானம், காலட்க்ஷேபம், பகவத் ஆராதனம் போன்றவற்றில் இறங்குகிறான். விவேகம் பிறக்கிறது. ரஜோ, தாமஸ குணங்கள் விலகி, ஸத்வ குணம் மேலோங்க ஆரம்பிக்கிறது. சாத்வீகம் வளர்கிறது. இவையெல்லாம் ஆசார்ய சம்பந்தத்தினாலும் பகவானின் கருணையாலும் என்று உணர்கிறான்.

படி-3

சிஷ்யனிடம் காணும் மாறுதல்கள்

அவனுடைய் அசுர தன்மை விலக ஆரம்பித்திருக்கிறது. முன்பு வேகம், வேகம், பரபரப்பு, எதிலும் அவசரம் போன்ற குணங்கள் மாற தொடங்கி, நிதானம், பொறுமை மெதுவாக பேசும் தன்மை போன்ற சாத்வீக குணங்கள் வளர்கின்றன. அதிக சந்தோஷம், அதிக துக்கம் என்று இல்லாம்ல் பழைய நிலையை முழுதுமாக மறக்கிறான். பார்ப்பவர்கள் இவனுடைய மாறுதல்களை கண்கூடாக பார்க்கிறார்கள்.

பகவானிடமனது லயிக்க ஆரம்பிக்கிறது. சினிமா மோகம் மறைகிறது. ஆசையை தூண்டும் கதைகள்.நாவலகள் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டான். புராண இதிஹாஸங்களை படிக்க தொடங்குகிறான். ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு, ஸ்வாமி தேசிகனின் ஸ்லோகங்க்ள் என்று ஆழ்வார்களின் ஸூக்திகளும், ஆசார்யர்களின் அறிவுரைகளும் அவன் மனதில் ப்திய ஆரம்பிக்கிறது.

ஆசாரமே இன்னது என்று தெரியாத காலம் போய் 12- திருமண் விசேஷ காலங்களிலும், ஆசாரியரை தரிசிக்கும் போதும் தரிக்கிறான். வெளியே சென்று வந்ததும், அல்ப சங்கை சமயத்திலும் கை கால்களை அலம்பி உள்ளே நுழைகிறான். முக்கால சந்தியாவந்தனம் நிரந்தரமாகி விட்டது. மேஜை சாப்பாடு போய் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறான்.

பித்ருக்களின் தர்ப்பணங்களை ஒழுங்காக செய்ய தொடங்குகிறான். அமாவாசை தர்ப்பணம் செய்யாதவன் தவறாமல் செய்ய தொடங்குகிறான். எதற்கும் எதிர்வாதம், குதற்க அர்த்தம் கண்டுபிடிப்பவன், அமைதியாக சொல்வதை காது கொடுத்து கேட்கிறான்.

இவனுடைய மாறுதல்களை மேலும் பார்ப்போம்.கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவை தவிர்கிறான். தன்னுடைய குருபரம்பரையை தெரிந்து கொண்டு அவர்கள் தனியங்களை தினமும் சொல்ல தொடங்குகிறான். தந்தம் சுகங்களே துக்கத்தில் கொண்டுபோய்விடுகின்றன என்று அறிகிறான். அது வெறுப்புக்குறியது என்று உணர்கிறான்

இதனால் மற்ற பலன்களில் ஆசையில்லாமல் மனதை பகவானிடம் திருப்புகிறான்.இவனுக்கு ஜீவாத்மா, பரமாத்மா, சரீரம் இவைகளைபற்றிய விவேகம் ஏற்பட்டு, பகவானுக்கு தான் அடிமை என்று உணர்கிறான், பழைய நிலையை உணர்ந்து பாபங்களை செய்யாமல் விலகி நிற்கிறான். ஸம்ஸார பந்தத்திலிருந்து மனதை திருப்பி பகவானிடம் லயிக்க ஆரம்பிக்கிறான். இவை எல்லாம் பகவான் ஆசார்ய சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொடுத்த நன்மையால் தான்.

R.Jagannathan.







</b>

No comments:

Post a Comment