Monday, November 29, 2010

வேங்கடமும் வேங்கடநாதனும்-3

வேங்கடமும் வேங்கடநாதனும்-3

1. உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்; என்றும்
     உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து-உளன் கண்டாய்;
    வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
    உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.


நம்மை காப்பதற்காக அவன் எத்துணை பெறு முயற்சி எடுத்துக்கொள்கிறான்-அதற்காக நீரிலும், மலையிலும் நின்று தவம் செய்கிறான். நம் உள்ளத்தில் உறைவதற்காக அவன் திருப்பாற்கடலிலும், திருவேங்கடத்திலும் உளன். இவ்வாறு பல திவ்ய தேசங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும் அவன் நமக்காக படாத பாடு படுகிறான்.

அத்தகைய பெருமான் இன்று வந்து நம் நெஞ்சம் நிறைய புகுந்தான். ஆதலால் அவனை என்றும் நினைப்பாயாக.

                                                                                       முதல் திருவந்தாதி- 99.

1. பல விதரண தக்ஷம் பக்ஷபாதநபிஞ்ஜ்ஞம்
    ப்ரகுண மநுவிதேயம் ப்ராப்ய பத்மா ஸஹாயம்
   மஹதி குண ஸமாஜே மாந பூர்வம் தயே த்வம்
   ப்ரதிவதஸி யதார்ஹம் பாப்மநாம் மாமகாநம் //


ஸ்ரீனிவாசனுடைய தயாகுணம்- தயாதேவியே! பலன் அளிப்பதில் வல்லவனாய் பக்ஷபாதமே இல்லாதவனாய் நேர்மையுடையவனாய் அணுகுவதற்கு எளியனாய், அஷ்டாக்ஷர மந்திரத்திற்கு வசப்பட்டவனாய் பெரிய பிராட்டியை துணைகொண்டவனான ஸ்ரீனிவாச பெருமாளை அடைந்து- அவனிடம் நீ எனக்காக- என்னுடைய பாபங்களை மன்னிக்குமாறு வாதாடுகின்றாய்-என்னே உன் தயை.
                                                                                   ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

2. கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
    ஐய! மலர்மகள் நின் ஆகத்தாள்-செய்ய
    மறையாள் உன் உந்தியான்; மாமதிள் மூன்றுஎய்த
   இறையான், நின் ஆகத்து இறை.


   திருவேங்கடமுடையானே! மேகம் போல் நிறமும், இயல்பும் வாய்ந்தவனே! வலும்புரி சங்கும், சக்கிரமும் உன் கைகளில் விளங்குகின்றன. மலர் மகளோ நின் மார்பில் இருக்கிறாள். இவை யாவும் உன் ஐஸ்வர்யத்தையும் அழகையும் காட்டுகின்றன. உம்மை அறிவிக்கும் வேதத்தை ஓதும் பிரும்மனோ உன் கொப்புழில் பிறந்தான். சிவனோ உன் திருமேனியில் ஒரு மூலையில் கிடக்கிறான். பிரும்ம ருத்திரர்கள், பெரிய பிராட்டி- எல்லோருக்கும் உன் திருமேனியில் இடம் கொடுத்தாயே உன் சீலத்தை என்ன என்று சொல்வது!

                                                                        பொய்கை ஆழ்வார்-முதல் திருவந்தாதி.

2. பரிமித பலஸங்காத் ப்ராணிந:கிம்பசாநா:
    நிகம விபணி மத்யே நித்ய முக்தாநுஷக்தம்
    ப்ரஸதந மநுகம்பே ப்ராப்தவத்யா பவத்யா
    வ்ருஷகிரி ஹரிநீலம் வ்யஞ்ஜிதம் நிர்விசந்தி//

   சாதாரண மனிதர்கள் அற்ப பலன்களை கருதி வேதங்களாகிய -உன்னால் காட்டப்பட்ட எப்பொழுதும் முத்து கலந்த-( நித்ய சூரிகளும், முக்தர்களாலும் சூழப்பட்ட ) திருமலையில் உள்ள பகவானாகிற நீல திருமேனியை அநுபவிக்கின்றனர்.( வேதம் கடைத்தெரு போன்றது. அங்கு விலை உயர்ந்த பொருளும், மலிவான பொருளும் விற்கப்படுகின்றன. பல மனிதர்கள் மலிவான பொருளை வாங்கி செல்கின்றனர். உயர்ந்த பொருளான-மோட்ச மார்க்கத்தை நாடுவதில்லை. அவர்கள் மீது-தயா தேவியே! நீ இரக்கம் கொள்கிறாய். உன் துணையினால் தான் அவர்கள் திருவேங்கடமுடையானது நீல திருமேனியை அநுபவிக்கமுடிகின்றது )
                                                                       ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

3. உளன் கண்டாய் நன்னேஞ்சே! உத்தமன்; என்னும்
    உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து- உளன் கண்டாய்
    வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
    உள்ளத்தில் உள்ளான் என்று ஓர்.

    பிறரை காத்தால் அன்றி உயிர் தரிக்க மாட்டாத உத்தமன் அவன். தம்மை நினைப்பவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து நித்ய வாசம் கெய்கிறான் அவன். நம்மை கடைத்தேற அவன் எத்துனை பெரு முயற்சி எடுதுக்கொள்கிறான்-திருபாற்கடலிலும், திருவேங்கடத்த்கிலும் இன்னும் பல திவ்யதேசங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் படாத பாடு படுகின்றான். அத்தகைய பெருமான் இன்று என் நெஞ்சில் நிறைய புகுந்தான். அவனை நீ சதா நினை நெஞ்சே!

                                                                        பொய்கை ஆழ்வார்- முதல் திருவந்தாதி.

3. ஸாரம் லப்த்வா கமபி மஹத: ஸ்ரீநிவாஸாம்புராசே:
    காலே காலே கநரஸவதீ காளிகேவாநுகம்பே
    வ்யக்தோந்மேஷா ம்ருகபதி கிரௌ விச்வ மாப்யாயபந்தீ
    சீலோபஜ்ஞம்  க்ஷரதி பவதீ சீதளம் ஸத்குணௌகம் //


தயா தேவியே! பெரிய ஸ்ரீனினாசன் என்ற கடலினின்று அற்புதமான ஸாரமான அம்சத்தை பெற்று திருவேங்கட மலையில் வாழும் வெளிப்பட்ட தோற்றமுடையவள். மேக கூட்டங்கள் போல் உலகத்தை மழை பொய்து குளிர செய்வதுபோல் - பக்தர்களை குளிர செய்கிறாய்-உன் தயையாலே!.

                                                                                        ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

சேதநர்கள்:

பக்தர்களின் கூட்டம் வெள்ளம் போல் எப்போதும் திருமலையில் அலை மோதும். எல்லோருடைய மனதிலும், வாக்கிலும் ஒன்றே ஒன்று தான்- ஸ்ரீநிவாசா! கோனிந்தா! அவனை ஒருதரம் தரிசித்துவிட்டால் போதும்-மனதிலுள்ள பாரம் எல்லாம் இறக்கிவைத்த நிம்மதி. இனி அவன் பார்த்துக்கொள்வான் என்ற திட விச்வாஸம். இந்த நம்பிக்கை தான் வாழ்க்கையின் ஆதாரம்.

R.Jagannathan.

No comments:

Post a Comment