Tuesday, April 26, 2011

அத்தகிரியும் அருளாளனும்-6

அத்தகிரியும் அருளாளனும்-6

1. ஊனில் வாழ் உயிரே, நல்லைபோ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான், மதுசூதனன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னன்லும் அமுதும் ஒத்தே //

ஊன் என் உடமிபில் வாழ்கின்ற என் உள்ளமே-நீ நல்லவன்-உன்னால் நான் மிக்க நன்மையை பெற்றேன்- நானும் எம்பெருமானும் என் உள்ளத்தே ஒன்றாக கலந்துவிட்டோம். அந்த கலவையால் எல்லா விதமான சுவையும் உண்டாகிவிட்டது. தேனும், பாலும், நய்யும், கருப்பஞ்சாரும் அமுதும் கலந்தாற்ப்போல
திருவாய்மொழி

1. எத்திசை நிலனுமெய்தி அருந்தவம் செய்த வந்நாள்
சத்தியவிரதம் செல்வாய் என்றதோர் உரையின் சார்வால்
அத்திசை சென்றழைத்து அங்கமலரில் எடுப்பான் தன்னை
உத்தரவேதி செய்யென்று உரையணங்கு இறை உரைத்தான் //

வாக்கின் தேவதையான ப்ரஹ்மா எல்லா திசைகளிலுமுள்ள ஸ்தானங்ககளுக்கும் சென்று ஒருவராலும் செய்யமுடியாத தவத்தை செய்த காலத்தில் ஸத்யவ்ரத க்ஷேத்திரத்திற்கு போ என்று அசரீரி சொல்ல, ப்ரஹ்மா விச்வகர்மாவை அழைத்து யாகம் செய்வதற்கு உத்திர வேதியை அத்தகிரியில் அமைப்பாயாக என்று உரைத்தான்.
ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. எம்மாவீட்டுத் திறமும் செப்பம்; நின்
செம்மா பாத-பற்புத் தலைசேர்த்து; ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே//
கஜேந்திரனின் துன்பத்ததை நீக்கிய பிரானே! நான் விரும்புவது எல்லாம் அகவாய் சிவந்து, புறவாய் கறுத்து, பெரிதாய் மணத்து மலர்ந்த நின் திருவடித்தாமரைகளை என் தலையின் மீது விரைவிலே சேர்க்கவேண்டும் என்பதே!. எப்படி கொக்கு வாயும், படுகண்ணியும் போல உன் திருவடிகளும் என் ர்தலையும் சேரவேண்டும் என்பதே அம்மா அடியேன் விரும்புவது.

திருவாய்மொழி
2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடைய வாசியொளி ஓசையாலும்
ஒருகாலும் அழியாத அழகினாலும்
மண்மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

ரத்தினத்தோடு தங்கத்தை சேர்ந்து இழைக்கப்பெற்ற , அழியாத சிற்ப சாஸ்திரப்படி வடிக்கப்பெற்ற , கொடை நிறைந்த , நான்கு ஜாதியனரும் நிறந்த தேவர்களுக்கு வியப்பையூட்டும் இயற்கை அழகு அமைந்த, குதிரைகள் கனைக்கும் ஓசையாலும், ஒருபோதும் அழியாத அழகு பெற்ற -பூமிக்கு ஆபரணம் போல மதிள்கள் உடைய கச்சியை கண்டு பிரஹ்மா மிகவும் மகிழ்ந்தார்.
ஹஸ்தகிரி மஹாத்மியம்

3. கரிய மேனிமிசை வெளியநீறு சிறிதே இடும்
பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரியசொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அறியது உண்டோ- எனக்கு ஒன்று தொட்டும் இனி என்றுமே ?

எம்பெருமானுக்கு அழகோ அவன் கறுத்த திருமேனி. அந்த மேனியில் அழ்கு செய்வது விழிகளில் தீட்டப்பெற்ற அஞ்சனம். அந்த அழகனே நம் நாயகன்.அவனுக்கு நாம் சாத்தும் மாலையோ இசை மாலை. அந்த இசைமாலையில் அவன் நாம கீர்த்தனைகள் தேனினும் இனிது. இப்படி ஏந்தி அனுபவித்த நான் இனி இதைவிட சிறப்பானது ஒன்றையும் தேடி அலையமாட்டேன். கிடைப்பதற்கு அரிதான பொருள் கிடைத்தது- இனி என் காலமெல்லாம் அரிய்ழது ஒன்றும் இல்லை.
திருவாய்மொழி.

3. அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய் கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் //

ப்ரஹ்மாவால் விரும்பி மேற்கொண்ட அசுவமேத யாகத்தை தடுக்க வாக் தேவதை சரஸ்வதி கோபத்தால் நதியாகி பெறுகிவர எம்பெருமான் அதை காத்து பிரம்மனுக்கு அருள்பாலிக்க வேகவதியாக-அணையாக பள்ளி கொண்டானே! என்னே அவன் கருணை.

ஹஸ்தகிரி மகாத்மியம்.

R.Jagannathan.

No comments:

Post a Comment