Wednesday, May 18, 2011

அத்தகிரியும், அருளாளனும்-8

அத்தகிரியும், அருளாளனும்-8

1. நாவாயில் உண்டே ' நமோ நாராயணா ' என்று
ஓவாதுரைக்கும் உரையுண்டே- மூவாற
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே- என்னொருவர்
தீக்கதிக்கண் செல்லும் நிறம்?

எம்பெருமானை துதிக்க நம் வாய் இருக்க வேறு எங்கும் தேடி போகவேண்டாம். களைப்பிள்ளாமல் திரும்ப் திரும்ப சொல்ல - ' நமோ நாராயணா ' என்ற நாமம் இருக்கே! அந்த திருமந்திரம் நம்மை திருமப் பிறவாமல் வைகுண்டத்திற்கு இட்டு செல்லும். மற்றும் பக்தி, ப்ரப்த்தி போன்ற வழிகள் இருக்கு-இவை எல்லாம் இருக்க இந்த பாழும் உடல் தீய வழிகளிளேயே சென்று விழுகிறதே - இது என்ன விந்தை?
முதல் திருவந்தாதி.

1. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே //
திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய், ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார், நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
ஐயர் மலர்மகள் நின் ஆகத்தாள்- செய்ய
மறையாள் உன் உந்தியான்; மாமதிள் மூன்று எய்த
இறையான், நின் ஆகத்து இறை //

மேகம் போல் நிறமும், வலம்புரி சங்கும், சக்கரமும் ஏந்தி நிற்கும் பெருமானே! மலர் மகள் நின் மார்பில் தவழ்கிறாள். இவையாவும் உன் அழகை காட்டுபவை.
வேதங்கள் படைத்த நான்முகன் உன் நாபியில் பிறந்தான். திரிபுரங்களையும் எறித்த சிவனோ ஒரு மூலையில் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும், பிராட்டிக்கும் உன்னிடம் இடம் கொடுத்த உன் சீலகுணத்தை என்னவென்று புகழ்வது.

பொய்கை ஆழ்வார்- முதல் திருவந்தாதி

2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டுவண்ணத்தாலும்
வானவருக்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடைய வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளார்க்கு அலங்கார ம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

காஞ்சி நகர் திடமான ரத்தினங்களாலும், தங்கத்தாலும் சேர்த்து இழைக்கப்பட்டது. அழியாத சிற்ப சாஸ்திரத்தால் அழகு பெற்றது.நாங்கு ஜாதியனரும் சேர்ந்து நிறைந்து தேவர்களும் வியக்கத்தக்க அழகுடன், குதிரைகள் மற்றும் யானைகள் சூழ பூமிக்கு ஆபரணம் போன்ற மதிள்களுடன் தேவலோகம் போல் காட்சிதரும்- காஞ்சியை கண்டு ப்ரஹ்மா மகிழ்ந்தார்

ஹஸ்தகிரி மஹாத்மியம்

3. மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து, இருளோடு முட்டி
ஆணிப்பொன் அன்ன சுடர்படுமாலை; உலகு அளந்த
மாணிக்கமே! என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே1 அடியேன் அடி ஆவி அடைக்கலமே //

உலகையெல்லாம் அளந்த என் மாணிக்கமே, மரகதவண்ணனே! உவமையில்லா மாற்றுயர்ந்த பொன்போலும் மதிப்புடையவனே! சூரியனிருளில்-குரங்கு கையில் அகப்பட்ட மாணிக்கம் போல-இந்த மாலை பொழுதில் உனக்கு அடியவளான நான் உன்னை பிறிந்து வாடுகிறேன். என் உயிர் உனக்கு அடைக்கலமாகிவிட்டது.

திருவிருத்தம்.

3. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேறவழி தந்தார் வந்தார் தாமே //

தன்னுடைய சிறந்த க்ருபையால் உயர்ந்த சாஸ்த்திரங்களை உலகம் உய்ய தந்தவர் வந்தார்.நாஸ்திகர்களுக்கு அவர்கள் மயங்கி விழ மோஹன சாஸ்த்திரங்களை தந்து தள்ளியவர் வந்தார். அடியவர்களுக்கு பரமபதத்திற்கு செல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம் ..

R.Jagannathan.

No comments:

Post a Comment