Saturday, April 21, 2012

சம்ஸார பந்த்திலிருந்து விலகி பக்தி, ப்ரப்த்தி மார்க்கத்தை தேடுதல் மேற்கண்ட அறிவு வந்தவுடன் அவனுக்கு தான் அநுபவிக்கும் பயங்கள் எல்லாம் மறைய தொடங்குகிறது. தான் ஆத்மாவுக்கு செய்த குற்றங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கின்றன. இருந்தாலும் அவனிடம் அனாதிகாலமாக செய்துவந்த பாபங்க்களுக்கு ப்ராய சித்தம் செய்யவில்லையே என்ற பயப்படுகிறான். ஒருவேளை மேற்கண்ட பாபங்களுக்காக தண்டனை கிடைக்குமோ என்று அஞ்சுகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் இதற்கு பரிகாரம் மற்ற தேவதைகளிடம் இல்லை. நாராயணனே தான் உபாயம், அடையவேண்டிய தெய்வம் என்று பகவானிடம் ஓடுகிறான். ஆசார்யர்கள் மூலம் அவனை அடைய தர்ம சாஸ்த்திரத்தில் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க ஆரம்பிக்கிறான். முதலில் கீதையில் சொல்லியபடி நல்ல குணங்களை பற்றிய அறிவை பெறுகிறான். அவைகள் 26. 1.அபயம்: இஷ்ட வஸ்துக்களை பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம், அது அல்லாததினால் ஏற்படும் துக்கம்- அபயம் என்ப்படும். 2.ஸதவஸம்சுத்தி: மனமானது ரஜோ, தாமஸ குனங்களில் சேராது ஸ்தாதிஷ்டமான மார்க்கத்தில் செல்ல வைப்பது-ராக த்வேஷாதிகளை விட்டு திருப்புவது. 3. ஜ்ஞாநயோகஸ்வயஸ்த்திதி:ப்ரக்ருதியை விட்டு பிரிந்திருக்கிற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவது. ஜ்ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம் இவை என்னவென்று அறிகிறான். 4. தானம்: ந்யாயமான முறையில் சம்பாதித்த தனத்தை நல்லோருக்கு கொடுக்கவேண்டிய முறையில் கொடுப்பது. 5. தம: மனதை தகாத முறையில் ப்ரவேஸிக்காதபடி அப்யாஸம் செய்துகொள்வது. 6. யஜ்ய: தேவயஜ்ஞ்ம், பித்ரு யஜ்ஞ்ம், பூத யஜ்ஞம் இவைகளை பகவத் ப்ரீத்யர்த்திற்காக, பலனை எதிர்பாராமல் செய்வது. 6. ஸ்வாத்யாய: கல்யாண குணங்கள் அனைத்தும் கொண்ட பகவானை அவனை ஆராதிக்கும் முறையில் அநுசந்தானம் செய்துகொண்டு வேதாப்யாஸம் செய்துகொண்டு காலத்தை கழிப்பது. 7. தப: ஏகாதசி, த்வாதசி வ்ரதங்களை சாஸ்த்திரத்தில் சொல்லியபடி செய்தல். 8. ஆர்ஜ்வம்: மனம், வாக்கு, சரீரம் இவை ஒத்திருக்கவேண்டும். மனதால் நினைப்பதை அப்படியே பேசவேண்டும்- சாத்வீகமாக. 9. அஹிம்ஸை: யாரையும்- மனிதர், பசு, பக்ஷிகள் உட்பட- துன்பப்படுத்தக்கூடாது. யாருடைய மனமும் நோகக்கூடாது. 10. ஸத்யம்: தான் நேரில் கண்டவற்றை அப்படியே சொல்வது-அது பிறருக்கு நன்மையுடையதாக இருக்கவேண்டும். அது துன்பம் உண்டுபண்ணுமானால் பேசாமல் இருப்பதே மேல். 11. அக்ரோத: பிறருக்கு மனகலக்கம் உண்டுபண்ணாதவை-தனக்கும் சேர்த்து. 12. த்யாக: நன்மைக்கு விரோதமான தன் வஸ்த்துக்களை விட்டுவிடுதல். தன்னுடைய நன்மைக்கு விரோத்மானதையே விட்டுவிடவேண்டும். 13. சாந்தி: கண், காதுகளால்-ரூபம், சப்தம் முதலான விஷயங்களில் ஆசைபடுவதை தடுக்க அப்யாஸம் செய்தல். 14. அபைசுநம்: பிறருக்கு அனர்த்தத்தை உண்டுபண்ணக்கூடிய வார்த்தையை சொல்லாதிருத்தல். 15. தயா: சத்ருக்கள், மித்ரர்கள் இவர்களிடமும், ப்ராணிகளிடமும் அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு இளகுதல், கருணை காட்டுதல். 17.அலோலுப்த்வம்: தனக்கு தகாதவையான சப்தாதி விஷயங்களில் ஆசை இல்லாமை. 18. மார்த்வம்: கடினமான ஸ்வபாவமில்லாமை-அதாவது சாதுக்கள் கிட்ட வந்து பழக கூடியவன். 19. ஹ்ரீ: செய்ய தகாத காரியத்திற்காக வெட்கபடுதல். 20.அசாபலம்: ஆசைபடக்கூடிய வஸ்து அருகில் இருந்தாலும் சஞ்சலமில்லாமல் இருத்தல். 21. தேஜ: துர்ஜனங்கள் தன்னை அவமானப்டுத்தமுடியாமல் விலகி இருத்தல். 22. க்ஷமா: சகிப்புத்தன்மை- பிறர் தன்னை துன்புறுத்தினாலும் அவர்கள்பால் மனம் கலங்காமல் இருத்தல். 23. த்ருதி: பெரிய ஆபத்து வந்தபோதிலும் செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டும் என்று நிச்சியத்தோடு இருத்தல். 24. சௌசம்: பாஹ்யேந்திரியங்கள் ( கண், காது முதலியவைகள் ) சாஸ்த்திரத்தில் சொல்லியபடி நல்ல காரியங்களை செய்யவும், பார்க்கவும், பேசவும் விதமாக வைத்துக்கொள்ளுதல். 25.அத்ரோஹ: அயலார் விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்யாமை. 26. நாதிமாநிதா: கர்வப்பட தகாத இடத்தில் கர்வப்படுதல் ( மேற்படி 26 குணங்களையும் பகவான் அர்ஜுனனுக்கு- பதினாலாம் அத்யாயத்தில்-தைவாஸுர சம்பத்விபாக யோகத்தில்-விளக்குகிறார் ) நம் சிஷ்யன் ஆசாரியர் மூலம் இவைகளை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனால் இவனால் சம்ஸார பந்தத்தை விடமுடியவில்லை- அதற்கும் பகவான்ஆசாரியர் மூலம் ஒரு மார்க்கத்தை காண்பிக்கிறார். சம்ஸாரம் என்ற நோய்க்கு ஒரு மருந்து-அதுதான் ப்ரப்த்தி- மாடபூசி ஜகந்நாதன்

சம்ஸார பந்த்திலிருந்து விலகி பக்தி, ப்ரப்த்தி மார்க்கத்தை தேடுதல்


மேற்கண்ட அறிவு வந்தவுடன் அவனுக்கு தான் அநுபவிக்கும் பயங்கள் எல்லாம் மறைய தொடங்குகிறது. தான் ஆத்மாவுக்கு செய்த குற்றங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கின்றன. இருந்தாலும் அவனிடம் அனாதிகாலமாக செய்துவந்த பாபங்க்களுக்கு ப்ராய சித்தம் செய்யவில்லையே என்ற பயப்படுகிறான். ஒருவேளை மேற்கண்ட பாபங்களுக்காக தண்டனை கிடைக்குமோ என்று அஞ்சுகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம் இதற்கு பரிகாரம் மற்ற தேவதைகளிடம் இல்லை. நாராயணனே தான் உபாயம், அடையவேண்டிய தெய்வம் என்று பகவானிடம் ஓடுகிறான். ஆசார்யர்கள் மூலம் அவனை அடைய தர்ம சாஸ்த்திரத்தில் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்க ஆரம்பிக்கிறான். 


முதலில் கீதையில் சொல்லியபடி நல்ல குணங்களை பற்றிய அறிவை பெறுகிறான். அவைகள் 26.


 1.அபயம்: இஷ்ட வஸ்துக்களை பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம், அது அல்லாததினால் ஏற்படும் துக்கம்- அபயம் என்ப்படும்.


 2.ஸதவஸம்சுத்தி: மனமானது ரஜோ, தாமஸ குனங்களில் சேராது ஸ்தாதிஷ்டமான மார்க்கத்தில் செல்ல வைப்பது-ராக த்வேஷாதிகளை விட்டு திருப்புவது.


 3. ஜ்ஞாநயோகஸ்வயஸ்த்திதி:ப்ரக்ருதியை விட்டு பிரிந்திருக்கிற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக அறிவது. ஜ்ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம் இவை என்னவென்று அறிகிறான்.


 4. தானம்: ந்யாயமான முறையில் சம்பாதித்த தனத்தை நல்லோருக்கு கொடுக்கவேண்டிய முறையில் கொடுப்பது.


 5. தம: மனதை தகாத முறையில் ப்ரவேஸிக்காதபடி அப்யாஸம் செய்துகொள்வது.


 6. யஜ்ய: தேவயஜ்ஞ்ம், பித்ரு யஜ்ஞ்ம், பூத யஜ்ஞம் இவைகளை பகவத் ப்ரீத்யர்த்திற்காக, பலனை எதிர்பாராமல் செய்வது. 6. ஸ்வாத்யாய: கல்யாண குணங்கள் அனைத்தும் கொண்ட பகவானை அவனை ஆராதிக்கும் முறையில் அநுசந்தானம் செய்துகொண்டு வேதாப்யாஸம் செய்துகொண்டு காலத்தை கழிப்பது.


 7. தப: ஏகாதசி, த்வாதசி வ்ரதங்களை சாஸ்த்திரத்தில் சொல்லியபடி செய்தல்.


 8. ஆர்ஜ்வம்: மனம், வாக்கு, சரீரம் இவை ஒத்திருக்கவேண்டும். மனதால் நினைப்பதை அப்படியே பேசவேண்டும்- சாத்வீகமாக.


 9. அஹிம்ஸை: யாரையும்- மனிதர், பசு, பக்ஷிகள் உட்பட- துன்பப்படுத்தக்கூடாது. யாருடைய மனமும் நோகக்கூடாது.


 10. ஸத்யம்: தான் நேரில் கண்டவற்றை அப்படியே சொல்வது-அது பிறருக்கு நன்மையுடையதாக இருக்கவேண்டும். அது துன்பம் உண்டுபண்ணுமானால் பேசாமல் இருப்பதே மேல். 


 11. அக்ரோத: பிறருக்கு மனகலக்கம் உண்டுபண்ணாதவை-தனக்கும் சேர்த்து.


 12. த்யாக: நன்மைக்கு விரோதமான தன் வஸ்த்துக்களை விட்டுவிடுதல். தன்னுடைய நன்மைக்கு விரோத்மானதையே விட்டுவிடவேண்டும்.


 13. சாந்தி: கண், காதுகளால்-ரூபம், சப்தம் முதலான விஷயங்களில் ஆசைபடுவதை தடுக்க அப்யாஸம் செய்தல்.


 14. அபைசுநம்: பிறருக்கு அனர்த்தத்தை உண்டுபண்ணக்கூடிய வார்த்தையை சொல்லாதிருத்தல். 


 15. தயா: சத்ருக்கள், மித்ரர்கள் இவர்களிடமும், ப்ராணிகளிடமும் அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு இளகுதல், கருணை காட்டுதல். 


17.அலோலுப்த்வம்: தனக்கு தகாதவையான சப்தாதி விஷயங்களில் ஆசை இல்லாமை. 


18. மார்த்வம்: கடினமான ஸ்வபாவமில்லாமை-அதாவது சாதுக்கள் கிட்ட வந்து பழக கூடியவன்.


 19. ஹ்ரீ: செய்ய தகாத காரியத்திற்காக வெட்கபடுதல்.


 20.அசாபலம்: ஆசைபடக்கூடிய வஸ்து அருகில் இருந்தாலும் சஞ்சலமில்லாமல் இருத்தல்.


 21. தேஜ: துர்ஜனங்கள் தன்னை அவமானப்டுத்தமுடியாமல் விலகி இருத்தல்.


 22. க்ஷமா: சகிப்புத்தன்மை- பிறர் தன்னை துன்புறுத்தினாலும் அவர்கள்பால் மனம் கலங்காமல் இருத்தல்.


 23. த்ருதி: பெரிய ஆபத்து வந்தபோதிலும் செய்யவேண்டிய காரியத்தை செய்யவேண்டும் என்று நிச்சியத்தோடு இருத்தல்.


 24. சௌசம்: பாஹ்யேந்திரியங்கள் ( கண், காது முதலியவைகள் ) சாஸ்த்திரத்தில் சொல்லியபடி நல்ல காரியங்களை செய்யவும், பார்க்கவும், பேசவும் விதமாக வைத்துக்கொள்ளுதல்.


 25.அத்ரோஹ: அயலார் விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்யாமை.


 26. நாதிமாநிதா: கர்வப்பட தகாத இடத்தில் கர்வப்படுதல் 


 ( மேற்படி 26 குணங்களையும் பகவான் அர்ஜுனனுக்கு- பதினாலாம் அத்யாயத்தில்-தைவாஸுர சம்பத்விபாக யோகத்தில்-விளக்குகிறார் ) 


நம் சிஷ்யன் ஆசாரியர் மூலம் இவைகளை கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி தன்னை மாற்றிக்கொள்கிறான். ஆனால் இவனால் சம்ஸார பந்தத்தை விடமுடியவில்லை- அதற்கும் பகவான்ஆசாரியர் மூலம் ஒரு மார்க்கத்தை காண்பிக்கிறார். சம்ஸாரம் என்ற நோய்க்கு ஒரு மருந்து-அதுதான் ப்ரப்த்தி-


 மாடபூசி ஜகந்நாதன்

No comments:

Post a Comment