Monday, April 23, 2012

ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 3


ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 3 ப்ரப்த்தி, பரந்யாஸம் பகவான் அல்லல் படும் சாதாரண நம் போன்றவர்களுக்கு சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை பெற சுலபமான மருந்து, -ஆசாரியர் மூலம் காட்டும் மார்க்கம்- ப்ரப்த்தி மார்க்கம்.-இதற்கு ஐந்து அங்கங்கள்- மிக எளிதானவை-ஆநுகூல்ய சங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜனம், மஹா விஸ்வாசம், கோப்த்ருத்வ வரணம், கார்ப்பண்யம் என்ற ஐந்து அங்கங்கள். பகவானையே உபாயமாக நிற்கும்படி ப்ரார்த்தித்து, அவனிடமே தன்னை காக்கும் பொறுப்பை ஒரே முறை சம்ர்ப்பிவிப்பது ப்ரப்த்தியாகும். பகவான் இதை ஆசாரியர் மூலம் அணுக சொல்லுகிறார். சிஷ்யன் தன் ஆசாரியரிடம் தன் எண்ணத்தை தெரிவிக்கிறான். ஆசாரியரும் மனம் மகிழ்ந்து அவனை மனைவியோடு ஒரு நல்ல நாளில் இதை செய்விக்கிறார். ப்ரப்த்தி செய்துகொண்டவன் நிலையை இனி பார்க்கலாம்:- கைமுதல் ஒன்றும் இல்லாத சிஷ்யன் தன்னை காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் சம்ர்ப்பித்து ப்ரபத்தி செய்த பின் மறுபடியும் அந்த பயனுக்காக செய்யவேண்டியது ஒன்றும் இல்லை. ப்ரப்த்தியும் ஒருமுறைதான், பகவான் மோக்ஷம் தருவதாக சங்கல்பித்துவிட்டால் அதுவும் ஒறுமுறைதான்.ஒரு தடவை ஆசார்யன் தன் சிஷ்யனை காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் சம்ர்ப்பிவித்துவிட்டால் சிஷ்யன் அந்த பலனுக்காக மறுபடியும் ப்ரப்த்தி செய்யக்கூடாது. ஆசார்யன் செய்த ப்ரப்த்திதான் அவனை காக்கும்-ஒருவேளை சிஷ்யன் மனம் வேறு மார்க்கத்தில் சென்றாலும்- இந்த ப்ரப்த்தி தான் அவனுக்கு பலன் தரும் ( இது என்னுடைய வாழ்க்கையிலேயே கண்கூடாக பார்த்திருக்கிறேன் ) பகவான் எல்லா கர்மங்களுக்கும் சரீரமாக கொண்டு எல்லா சொற்களும் அவனிடமே சேர்ந்து எல்லா தேவதைகளுக்கும் மேற்ப்பட்டவன் என்று வேதம் சொல்லுகிறது. சரணமடைவதற்கு முதல் ஆசார்யன்.ஜீவாத்மா மோக்ஷம் பெறுவதற்கு பகவானே உபாயமாய் நிற்கின்றான். ஆசாரியரிடத்தில் பெற்ற அறிவால் ஜீவன் உன்னையே தாயாகவும், தந்தையாகவும், நண்பனாகவும் உன்னை சரண் அடைந்து பின் மோக்ஷம் என்னும் அழியா செலவத்தை பெறுகிறான்-இந்த ப்ரப்த்தி மூலம். ப்ரப்த்தி நால்வகையானது: 1. ஸ்வநிஷ்டை- விசேஷ ஞானமுடையவர்கள் எம்பெருமானிடம் தாமே ப்ரப்த்தி செய்தல். 2. உக்தி நிஷ்டை: ஆசார்யன் சொல்லும் வாக்கியத்தை தாமும் உச்சரித்தல். 3.ஆசார்ய நிஷ்டை- ஆசார்யன் செய்த ப்ரப்த்தியில் அடங்கியிருத்தல். 4. பாகவத நிஷ்டை: ஆசார்யன் அல்லாத பாகவதன் செய்த ப்ரப்த்தியில் அடங்கியிருத்தல். பக்தி யோகம், ஞான யோகம் இவை மிக கடினமானவை. சிறிது தவறு நேர்ந்தாலும் எதிர்பார்த்த பலன் சித்திக்காது. ப்ரப்த்தி மார்க்கம் மிக எளிதானது. நான்கு ஜாதியினரும் இதை செய்து கொள்ளலாம்.அந்த க்ஷணமே நிறைவேறிவிடுவதால் தடைக ளுக்கும், அவற்றால் வரும் அச்சத்திற்கும் இடமே இல்லை. இதை சற்று விரிவாக பார்க்கலாம். ப்ரப்த்தி செய்துகொண்ட சிஷ்யன் தான் இதுவரை செய்த பாபங்கள் அனைத்தையும் கழித்துவிடுகிறான். பின் அறியாமல் செய்யும் பாபங்கல் ஒட்டமாட்டா.சில தவறுகள் நேர்ந்தாலும் அவை உரிய ப்ராயசித்தங்க்களால் உடனேயே மறைந்துவிடுகின்றன. இவனுக்கு யமனுக்கு வசப்படுதல், நரக வேதனை முதலியவை கிடையாது. தன்னை காக்கும் பொறுப்பை பகவானிடம் ஒப்படைத்துவிட்டதால் பயமில்லாமல் எஞ்சிய நாட்களை கழிக்கலாம். இங்கிருக்கும் நாள் வரை அவன் தன் மனம், வாக்கு, காயம் எல்லாம் பகவானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே செலவிடுகிறான்.சம்ஸார பந்தத்த்லிருந்து விடுதலை பெற்று பகவானிடம் சேரும் நாளை ஆவலோடு எத்ர்பார்த்துகொண்டு-தன்னுடைய நித்ய, நைமித்ய கர்மாக்களை செய்து கொண்டு-பகவானுடைய லீலைகளை காலட்க்ஷேபம் மூலமாகவும் படிப்பதன் மூலமாகவும் எஞ்சிய நாட்களை கழிக்கிறான் . அதோ அந்த நாள் வந்துவிட்டது. இவனை வெளியேற்ற பகவானே உபாயம் செய்கிறான்.வாக்கு, கை, கால், மல்த்வாரம், ஜலத்வாரம் ஆகிய கர்மேந்திரியங்களையும், செவி, வாய், கண், மூக்கு, ஸ்பர்சேந்திரியம் ஆகிய ஜ்ஞாநேந்திரியங்களையும் மனத்தோடு சேர்த்து அதை ப்ராணவாயுவோடு சேர்க்கின்றான். அந்த ப்ராணவாயுவை ஜீவனோடு சேர்க்கின்றான். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அவனுடைய் சரீரத்தில்-பஞ்ச பூதங்களின் ஸூக்ஷ்ம பகுதிகளுடன் சேர்த்து அவனுடைய ஹ்ருதய கமலத்தில் வீற்றிருக்கும் பகவான் தன்னுடன் இவைகளை அணத்துகொண்டு உடலை விட்டு பிரியம் வேதனை, களைப்பு ஒன்றும் இல்லாமல் இட்டு செல்கிறான். இனி வெளியேறிய ஜீவனுக்கு பகவான் செய்யும் விசேஷ உபகாரங்க ளை பார்க்கலாம். மாடபூசி ஜகன்னாதன்.

No comments:

Post a Comment