Monday, April 30, 2012

ஜீவனுக்கு பகவான் செய்யும் உபகாரங்கள்- 4 ப்ரப்த்தி செய்துகொண்ட ஜீவன் ஜீவன் சரீரத்தை விட்டு வெளியேறியதும் இவனுடைய ஸ்தூல் சரீரம்- அதாவது பதினொன்று த்வாரங்கள் கொன்டது--ப்ரஹ்மரந்தரம் அதையும் சேர்த்து -இது தலையின் வாசல்- அதை திறந்துகொண்டு ப்ரப்ந்நனை புறப்பட செய்கிறான் பகவான்-ஸ்தூல சரீரம் கழிகிறது- ஸூக்ஷ்ம சரீரம் ஆரம்பமாகிறது. அதை வைகுண்டம் போகும் பாதையில் அர்ச்சாதி மார்க்கம் வழியாக அழைத்து செல்லுகிறான். இவன் ஸ்தூல சரீரத்தில் இருந்தபோது இவனிடம் பெற்றுகொண்ட காணிக்கைகளால் மகிழ்ந்த தேவர்கள் இவனை வணங்கி ஸேவித்து செல்லுகிறார்கள். இவனை வழி நடத்தி செல்பவர்கள் ஆதிவாஹீகள்- அவர்களில் முதலில் வருபவன்- அக்னி தேவன். இவனுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து, ஆடல் பாடல்களுடன் அவன் எல்லை வரை கொண்டு சேர்கிறான். பின் சுக்ல, உத்தராயண தேவதைகள் வரிசையாக நின்றுகொண்டு மரியாதை செலுத்துகிறார்கள். அமாநவன்- மின்னலுக்கு தேவதை- இவனை அழைத்துசென்று-வழியில் இந்திரன், வருணன் இவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு ப்ரக்ருதி மண்டலத்தை கடந்து விரஜா நதிக்கரைக்கு வருகிறான். ( அன்பர்களை! இந்த சமயத்தில் ஸ்ரீரங்கத்தை நினைவில் வைத்துகொள்ளுமாறு அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஸ்ரீரங்கம் வேறு-வைகுண்டம் வேறல்ல-காவேரி விரஜா தேயம், வைகுண்டம் ரங்கமந்திரம் என்பார்கள் ) விரஜா நதி எப்போதும் ஒரே விதமாக பகவானின் காலடியில் பெருகி ஓடிக்கொண்டே இருக்கும். இது ஒரு அமுத ஆறு ) இது இரண்டு விபூதிகளுக்கும் எல்லை. ஸம்ஸாரத்திற்கு முடிவு எல்லையாகவும் பரமபதத்திற்கு தொடக்க எல்லையாகவும் அமைந்திருக்கிறது. இந்த நதியை பகவான் ஸங்கல்பித்து தன் மனத்தால் கடக்கிறான் என்பது ச்ருதி சொல்லுகிறது. அதில் மூழ்கி எழுந்தவுடம் அவனுடைய ஸூக்ஷ்ம சரீரம் விலகி- அமாநவன் இவனை தடவிக்கொடுக்க முக்தன் ஆகின்றான். இப்போது இவனும் பகவானும் ஒரே லோகத்தில் இருக்கிறார்கள்-அதாவது வைகுண்ட லோகத்தில். இனி வைகுண்ட லோகத்தில் இவனுக்கு நடக்கும் மரியாதைகளை பார்க்கலாம். அங்கே நித்ய சூரிகள் பகவானிடம் முன் நின்று கை கூப்பி அருளப்பாடு பாடுகிறார்கள். சிலர் பகவானின் திவ்ய மங்கள ரூபத்தை இமை கொட்டாது சேவித்துகொண்டே இருக்கிறார்கள். பகவான் ஐந்நூறு அப்ஸரஸ்குளை இவனை வரவேற்று அழைத்துவரும்படி செய்கிறான். அவர்கள் மாலைகள், மை, வாசனை பொடி, உடைகள் போன்ற உபசார பொருட்களுடன் இவனை அழித்து செல்கிறார்கள். அவனுக்கு வலம்புரி சங்கு, திருச்சின்னம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. நித்ய சூரிகள் இவனுக்கு சிறந்த அலங்காரங்களை செய்வித்து திவ்யம் என்ற மரத்தின் வழியாக, ஸாலஜ்யம் என்ற ஆஸ்தான மண்டபத்தை அடைந்து, பின் இந்திரன், ப்ரஜாபதி என்ற த்வாரபாலகர்களை அணுகுகிறான்.அவர்கள் இன்முகத்தோடு இவனை திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பகவானை காண அநுமதிக்கிறார்கள். அங்கே சபையின் அதிகாரிகளான குமுதர், சண்டர் இவர்கள் இவனை கண்குளிர கடாக்ஷிக்கிறார்கள். விஷ்வக்சேநர் இவனுக்கு அருளப்பாடு சொல்லி கைங்க்கர்யத்தில் கல்ந்து கொள்ள சொல்லுகிறார். அவனும் பெரிய திருவடியை சேவித்து, பூர்வாச்சாரியர்களை அணுகி நன்றியுடன் வணங்கி எம்பெருமானது திவ்ய சிம்ஹாஸனத்தை அணுகுகிறான் அங்கே ஆதிசேஷன் மீது எம்பெருமானையும், பிராட்டிமார்களையும் தரிசனம் செய்கிறான். என்ன ஆனந்தம்! கண்களில் பாஷ்பவாரி சொறிகின்றது பகவானோ-அகில ஹேய கல்யாணகதாந ஸ்வேதர ஸம்ஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப: ! ஸ்வாமிமதாநுரூப ஏகரூப அசிந்த்ய திவ்யாத்புத நித்ய நிரவத்ய ஓளஜ்வல்ய ஸொந்த்தர்ய ஸொகந்த்ய ஸொகுமார்ய லாவந்ய யொவனாதி அநந்தகுணநிதி திவ்யரூப ! ஸ்வாபிவிக அநவதிக அதிசய ஜ்ஞாந பல ஐச்வர்ய வீர்ய சக்தி தேஜ: ஸொசீல்ய வாத்ஸல்ய மார்த்தவ ஆர்ஜ்ஜவ ஸொஹார்த்த ஸாம்ய காருண்ய மாதுர்ய காம்பீர்ய ஓளதார்ய சாதுர்ய ஸ்த்தைர்ய தைர்ய சொர்ய பராக்ரம ஸத்யகாம ஸத்யஸங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞாதி அஸங்கேய கல்யாண குண களொக மஹார்ணவ // ஸ்வோசித விவித விசித்ராநந்த ஆச்சர்ய ப்ஹித்ய நிரவத்ய நிரதிசய ஸுகந்த நிரதிசய ஸுகஸ்பர்ச நிரதிசய ஓஓள்ஜ்வல்ய கிரீட மகுடசூடாவதம்ஸ மகரகுண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தா தாமோதர பந்தந பீதாம்பர காஞ்சீகுண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண:/ ஸ்வாநுரூபா சிந்த்ய சக்தி சங்க்க சக்ர கதா அஸி சார்ங்காதி அஸங்க்யேய நித்ய நிரவத்ய கல்யாண திவ்யாயுத:/ ஸ்வாபிமத நித்ய நிரவத்ய அநுரூப வரூப ரூபமுண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதிகாதிசய அஸங்யேய கல்யாண குணகண ஸ்ரீவல்லப : / கண்ணா உன்னை காண எத்தனை ஜன்மங்கள் கழித்தேன். நான் செய்த பாபங்களுக்காக புழுவாய் பிறந்தேன். நாயாய் அலைந்தேன், பலபிறவிகள் கடந்து மாநிட பிறவி பெற்றேன், மறுபடியும் பிறவியில் விழப்போன என்னை ஆசார்யன் மூலம் சரணாகதி மார்க்கத்தை காண்பித்து இனி பிறவியற்ற நித்ய சூரியாக உன் முன்ணே நிற்க வைத்து கண்குளிர காண வைத்து உன் கல்யாண குணங்களான- ஸொசீல்யம் = பெரியவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றர கலப்பது வாத்ஸல்யம்= பசு எப்படி கன்றுடன் தாயன்பு காட்டுகிறதோ அப்படி மார்த்வம் = தன்னை அண்டியவனின் மனக்கவலையை போக்குவது ஸொஹார்த்தம் = எப்போதும் நன்மையே சிந்திப்பது ஸாம்யம் = ஜாதி மத பேதம் காட்டாது எல்லோருக்கும் ஆச்ரியனாக இருப்பது காருண்யம் = துக்கமடைந்திருப்பவரை பார்த்து இரக்கப்படல் மாதுர்யம் = தன்னை கொல்ல வருபவருடன் கூட இனியனாக இருப்பது காம்பீர்யம் = ஆச்ரிதற்கு செய்யும் பேருதவிகள் வெளியில் தெரியாமல் அருள் பாலிப்பது ஓள்தார்யம் = கைமாறு கருதாது வேண்டியவற்றை அள்ளி கொடுப்பது. சாதுர்யம் = ப்ரதிகூலரையும் அநுகூலராக்கும் சாமர்த்யம் ஸ்தைர்யம் = அடியார்களை ஒருபோதும் கைவிடாதவன் தைர்யம் = எப்பேற்பட்ட எதிரியையும் வென்று தன் பக்கம் இழுத்தல் சௌர்யம் = எப்பேற்பட்ட எதிரியையும் தான் ஒருவனே சமாளிப்பது பராகரமம் = போர்களத்தில் எதிரிகளை அழிப்பது இப்படி அநந்த கோடி கல்யாண குணங்களை அடியவன் நேரில் காண வைத்து கிரீடம் = ஒப்புயர்வற்ற அழகுடையதான கொண்டை, தொப்பாரம், துராய் ஆகிய மூன்று முடிகள் கொண்டது மகர குண்டலம்= மகரவடிவான தோடுகள் க்ரைவேயக = திருகழுத்தில் சாத்துபவை ஹார = திருமார்பில் அணியும் முத்துவடங்கள் கேயூர = தோள்வளைகள் கடக் = முன் கையில் சாத்தும் வளையள்கள் ஸ்ரீவத்ஸ = திருமறு, கௌஸ்துப மாலை, குருமாமணிப்பூண் முக்தாதாம = ஏகாவளி த்ரிஸரம், பஞ்சஸரம் எனும் முக்தாஹாரங்கள் உதரப்ந்தந= - திருவாயிறுபட்டை பீதாமபர = பட்டாடை காஞ்சீகுண = மேல் ப்ட்டாடை நூபுரம் = திருவடி சிலம்பு, யஜ்ஞோபவீதம், கணையாழி இப்படி அலங்கார மேனியாய், காண ஆயிரம் கோடி கண்கள் வேண்டும். உனது அருகில் த்வம், சௌலப்யம், உபாயத்வம், பிரயோஜனம், காருண்யம், பொறுமை, சாந்தம், அநுகூலமாயிருத்தல் போன்ற எண்ணற்ற குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கின்ற ஸ்ரீ மஹாலக்ஷ்மி அதி அத்புதமாக காட்சியளிக்கிறாள். பெரிய பிராட்டிக்கு ஒரு தனி சிறப்பு. எம்பெருமானுக்கு ஏற்ற ஸ்வரூபம், திருமேனி, அவனோடு ஒத்து இருப்பது, அட்யார்களை ரக்ஷித்து காப்பவள். இப்படி பரமபதநாதனை ஸேவித்துக்கொண்டே பாதுகைகளை தாங்கிக்கொண்டிருக்கும் திருவடி பீடம் வரை செல்கிறான். அவரிடம் அவர் திருவடிகளை யாஜிக்கிறான். பெருமாளும் அபார கருணையினால் தன் திருவடியை இவன் தலைமேல் வைத்து பூமாலை அணிவிக்கிறான். அவரை மேலும் காண வேண்டும் என்று அருகில் செல்கிறான். பெருமாளும் தாயாரும் அவனை தன் குழந்தை போல மடியில் வந்து அமரும் உகப்பில் இவனை தன் திருவடியில் சேர்த்துக்கொள்ளுகிறான். இந்த ஆனந்தத்தை அநுபவிக்கும் இவன் எம்பெருமானோடு கலந்து, நித்யசூரிகளிடையே கூடி கலந்து மறூபடியும் பிறவியில்லா ஆனந்தத்தை நிலையாக அநுபவித்துக்கொண்டிருக்கிறான். என்னே! பரந்யாஸத்தின் சிறப்பு! என்னே! பகவான் காட்டிய சுலமான வழி. வாருங்கள் நாம் ஆசாரியரிடம் செல்வோம், இனி கால தாமதம் வேண்டாம். ஸ்ரீமதே ரகுவீர மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே கோபால தேசிக மஹாதேசிகாய நம: ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே // மாடபூசி ஜகன்னாதன்.

No comments:

Post a Comment